Just In
- 46 min ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 2 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 3 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 4 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- News மோடி ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீது கடும் நடவடிக்கை வேண்டாம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...
வாகனங்களுக்கு இமாலய வரி விதிப்பு முறையை பாஜக அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதன்படி புதிய வரி எவ்வளவு என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி.
இந்தியாவில் வாகன பெருக்கம் பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. வீட்டிற்கு ஒரு வாகனம் என்று இருந்த நிலை மாறி, தற்போது ஒவ்வொருவருக்கும் ஒரு சொந்த வாகனம் என்ற சூழல் உருவாகி விட்டது. இதன் காரணமாக சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை தலை விரித்தாடுகிறது.
குறிப்பாக சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்து முறைகளை பயன்படுத்த மக்கள் முன்வந்தால், போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.
ஆனால் சொந்த வாகனம் வைத்திருக்கும் பெரும்பாலானோர், பொது போக்குவரத்து முறைகளுக்கு மாற தயாராக இல்லை. வாகன பெருக்கம் காரணமாக இந்தியா எதிர்கொண்டுள்ள மற்றொரு முக்கியமான பிரச்னை சுற்றுச்சூழல் மாசுபாடு.
பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள்தான் இந்தியாவின் தற்போதைய காற்று மாசுபாடு பிரச்னைக்கு தலையாய காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். எனவே வாகன பெருக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
இந்த நிலையில், முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கும் ஜார்கண்ட் மாநிலத்தில் வாகனங்களுக்கு அதிரடியான புதிய வரி விதிப்பு முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி ஒருவர் இரண்டாவது கார் வாங்கினால், அதிக சாலை வரி கட்ட வேண்டியதிருக்கும். அதாவது ஜார்கண்ட் மாநிலத்தில் புதிய கார்களுக்கு 6 சதவீத வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஒருவர் இரண்டாவது கார் வாங்கினால், 3 சதவீத கூடுதல் வரி செலுத்த வேண்டும்.
இதுதவிர 15 லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட கார்களுக்கு ஜார்கண்ட் அரசு தற்போது கூடுதலாக 3 சதவீத வரியை விதிக்க தொடங்கியுள்ளது. ஆக மொத்தத்தில் ஒருவரின் இரண்டாவது கார் 15 லட்ச ரூபாய்க்கும் மேற்பட்டதாக இருந்தால், மொத்தம் 12 சதவீத வரி செலுத்தியாக வேண்டும்.
ஜார்கண்ட் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய வரி விதிப்பு முறைகள், கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. ஆனால் ஒருவரின் பெயரிலேயே இரண்டாவது கார் வாங்கும்போதுதான், கூடுதல் வரிகளை செலுத்த வேண்டியதிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும் கூட பெட்ரோல், டீசல் வாகனங்களின் சகாப்தத்திற்கு முடிவு கட்டவே விரும்புகிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
இதன்மூலம் பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக குறைக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் பெருந்தொகை மிச்சம் பிடிக்கப்படும்.
இதுதவிர இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வந்தால், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். எனவேதான் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகம். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இதுதவிர எலெக்ட்ரிக் மற்றும் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலையை ஏறக்குறைய சரி சமமாக கொண்டு வர மற்றொரு முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு பசுமை வரி எனும் புதிய வரியை விதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலை உயரும்.
எனவே மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மெல்ல மெல்ல மாறுவார்கள் என மத்திய அரசு கணக்கு போட்டு வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் ஊக்குவிப்பு என்பது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாக உள்ளது.
வரும் 2030ம் ஆண்டிற்குள், இந்தியாவில் இயங்கும் மொத்த வாகனங்களில் குறைந்தபட்சம் 30 சதவீத வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
NOTE: Images Are Representative Purpose Only
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!