Just In
- 1 hr ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 3 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 4 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 4 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Movies வாடகைக்கு உடை வாங்கும் நடிகை.. இதுலக்கூட கஞ்சத்தனமா? கிண்டலடிக்கும் பேன்ஸ்!
- News எல்லா தப்பையும் நீங்க தான் பண்ணீங்க..கக்கூஸ் கூட போக முடியல! திணறும் ரயில் பயணிகள்..தீர்வுதான் என்ன?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
டாக்ஸி ஓட்டுநர்களுக்கு பை பை சொல்லும் நேரம் வந்தாச்சி: டெஸ்லா அறிவிப்பால் டாக்ஸி ஓட்டுநர்கள் கலக்கம்
ஆட்டோமொபைல்ஸ் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய டெஸ்லா தானியங்கி கார் தயாரிப்பு நிறுவனம், கால் டாக்ஸி துறையில் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அண்மைக் காலங்களாக ஆட்டோமொபைல்ஸ் துறையில் புரட்சியை செய்து வரும் டெஸ்லா நிறுவனம், தற்போது கால் டாக்ஸி துறையில் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. டெஸ்லாவின் இந்த அறிவிப்பால், கால் டாக்ஸியைச் சார்ந்து இருக்கும் ஓட்டுநர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் டெஸ்லா நிறுவனம் தானியங்கி மின்சார கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிறுவனத்தின் வருகையால், ஏற்கனவே பல்வேறு சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் கணிசமான விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.
இந்நிலையில், டெஸ்லா நிறுவனம் தானியங்கி மின் கார்களை கால் டாக்ஸி சேவையில் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக, அடானமஸ் ரோபோ டாக்ஸிகளை உருவாக்கும் பணியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் சிஇஓ எலன் முஸ்க் அண்மையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "எலக்ட்ரிக் கார்கள் ஓட்டுநர் இல்லாத கால் டாக்ஸி சேவையில் வருகின்ற 2020 ஆம் ஆண்டிற்குள் களமிறக்கப்பட உள்ளது. இதற்கான கார்களை தயாரிக்கும் பணியும், அவற்றிற்கான ஒப்புதலைப் பெறும் பணியும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது" என்றார்.
மேலும் பேசிய அவர், "வருகின்ற 2020ம் ஆண்டிற்குள் தானியங்கி ரோபோ டாக்ஸிகள் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். ஆனால், இது அமெரிக்காவின் அனைத்து நகரங்களில் பயன்பாட்டிற்கு வராது. குறிப்பிட்ட இடங்களில் மட்டும் முதல்கட்டமாக கால் டாக்ஸி சேவை தொடங்கப்படும். பின்னர், போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்புதல் பெற்ற பின்னர் நாட்டின் பிறப்பகுதிகளிலும் இந்த சேவை தொடங்கப்படும்" என தெரிவித்தார்.
டெஸ்லாவின் இந்த தானியங்கி ரோபோ டாக்ஸியில், பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ரோபோ டாக்ஸிகள் தானாகவே டாக்ஸி நிறுத்தத்திற்கு வந்து, அதுவாகவே சார்ஜ் செய்துக்கொள்ளும் வகையில் உறுவாக்கப்பட்டுள்ளது.
இதற்கான மைக்ரோ சிப் தொழில்நுட்பத்தை டெஸ்லா நிறுவனம் ஏற்கனவே சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து உறுவாக்கிவிட்டது. இதைத்தான், தற்போது வெளியாக இருக்கும் அனைத்து கார்களிலும் அந்த நிறுவனம் பயன்படுத்த இருக்கிறது.
மேலும், இந்த கால் டாக்ஸி சேவைக்காக டெஸ்லா நிறுவனம் ஒரு மில்லியின் ரோபோ டாக்ஸிகளை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இவையனைத்திலும், ஆட்டோமேடிக்காக காரை இயக்கும் மற்றும் சார்ஜ் செய்யும் மென்பொருள்கள் இணைக்கப்பட உள்ளன.
இதேபோன்று, ஊபர் நிறுவனமும் அதன் அடுத்த தலைமுறை கால் டாக்ஸி சேவையான ஃபிளையிங் டாக்ஸி சேவையை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் முதல்கட்டமாக அமெரிக்காவின் டல்லஸ் மற்றும் லாஸ் ஏஞ்ஜெல்ஸில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. தொடர்ந்து, இந்த திட்டத்தினை ஊபர் நிறுவனம், இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா பிரேஸில் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!