Just In
- 52 min ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 1 hr ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 8 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 8 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
Don't Miss!
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அள்ளி கொடுக்கல.. கிள்ளியாவது கொடுங்க: எஸ்ஐஏஎம்! மாறு.. இல்லாவிட்டால் மாற்றப்படுவாய்: மோடி சர்க்கார்!
சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவதுடன், கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பிற்கும் காரணமான பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மிகவும் தீவிரமாக உள்ளது. இதனால் ஆட்டோமொபைல் துறை தற்போது வரலாறு காணாத வகையில் தடுமாறி வந்தாலும், மத்திய அரசிடம் இருந்து உதவிக்கரம் நீளவில்லை.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை அதளபாலத்திற்கு சென்று விட்டது. நடப்பு 2019-20ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன் 2019), அனைத்து செக்மெண்ட் வாகனங்களின் உள்நாட்டு விற்பனையும் மிக கடுமையாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. விற்பனை சரிவடையும் நேரத்தில் உற்பத்தி மட்டும் அதிகரிக்குமா என்ன?
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், அனைத்து செக்மெண்ட் வாகனங்களின் உற்பத்தியும் இரட்டை இலக்கத்தில் சரிவடைந்துள்ளது. இப்படி நடப்பது அனேகமாக இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் ஜிஎஸ்டி மூலம் வசூலான மொத்த தொகை 11,00,000 கோடி ரூபாய். இதில், ஆட்டோமொபைல் துறையின் பங்களிப்பு மட்டும் 10 சதவீதத்திற்கும் மேல். அதாவது சுமார் 1,20,000 கோடி ரூபாய்.
இந்திய ஆட்டோமொபைல் துறையின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவர்களின் எண்ணிக்கை 37 மில்லியன். ஆனால் விற்பனை சரிவு என்ற தற்போதைய நிலை இன்னும் தொடர்ந்து கொண்டே இருந்தால், இவர்களில் பலர் வேலையிழப்பதுடன், பொருளாதார ரீதியிலான சவால்களும் ஏற்படும் என ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இந்திய ஆட்டோமொபைல் துறையின் இந்த திடீர் தடுமாற்றத்திற்கு என்ன காரணம்? பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. எரிபொருள் விலை உயர்வு, இன்சூரன்ஸ் பிரீமியம் உயர்வு என இதற்கு காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். வாகனங்களின் விலை உயர்வும் ஒரு காரணம்தான். மத்திய அரசு தற்போது பல்வேறு புதிய பாதுகாப்பு விதிமுறைகளை வரிசையாக அமல்படுத்தி வருகிறது.
இதன்படி வாகனங்களில் ஏபிஎஸ், ஏர்பேக், ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக இப்படி பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
மத்திய அரசு குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு வசதிகளை வாகன உற்பத்தியாளர்கள் கட்டாயம் வழங்கிதான் ஆக வேண்டும். இதன் தாக்கம் வாகனங்களின் விலையில் எதிரொலித்தது. ஆம், வாகனங்களின் விலையை கணிசமாக உயர்த்தியாக வேண்டிய சூழ்நிலைக்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டனர். விலை உயர்ந்தால் விற்பனை சரிவது என்பது இயல்பான ஒன்றுதான்.
மத்திய அரசு இன்னும் பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகளை வருங்காலங்களில் அமலுக்கு கொண்டு வரவுள்ளது. இதுதவிர பிஎஸ்-6 என்ற ரூபத்திலும் வாகன உற்பத்தியாளர்கள் கடும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கான நாள் நெருங்கி கொண்டே வருகிறது. அது ஏப்ரல் 1, 2020.
அதற்குள்ளாக பிஎஸ்-4ல் இருந்து பிஎஸ்-6க்கு வாகன உற்பத்தி நிறுவனங்கள் மாறியாக வேண்டும். நாட்டின் சுற்றுச்சூழலை காக்கும் இந்த விஷயத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஆனால் பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாகவும் வாகனங்களின் விலை உயரவுள்ளது. குறிப்பாக டீசல் கார்களின் விலை 1 லட்ச ரூபாய் வரை உயரலாம் என கூறப்படுகிறது.
எனவே வரும்காலங்களில் வாகனங்களின் விற்பனை இன்னும் சரிவடைந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. இதுபோன்ற திட்டங்களை குறை சொல்ல முடியாது என்றாலும், ஆட்டோமொபைல் துறையின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. தற்போது எக்ஸ்ட்ரீம் லெவலை எட்டிவிட்டது என சொல்லலாம்.
மத்திய அரசு உடனடியாக சிறப்பு கவனம் கொடுத்து உதவிக்கரம் நீட்டாவிட்டால் நிலைமை அதோகதிதான். ஆனால் மத்திய அரசு அதற்கு தயாராக இல்லை என்றே சொல்லலாம். மத்திய அரசின் விருப்பம் எல்லாம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் மீதுதான் இருக்கிறது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை உன்னிப்பாக கவனித்திருந்தால், இல்லை சாதாரணமாக கவனித்திருந்தால் கூட இது உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும்.
'பசுமை பட்ஜெட்' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பிரதமர் நரேந்திர மோடியே ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார். அந்த அளவிற்கு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியிருந்தார் நிர்மலா சீதாராமன். பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அள்ளி கொடுக்காவிட்டால் பரவாயில்லை, கிள்ளியாவது கொடுங்கள் என்பதுதான் ஆட்டோமொபைல் துறையின் எதிர்பார்ப்பு.
ஆனால் மத்திய அரசு கிள்ளி கூட கொடுக்கவில்லை. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் (Society of Indian Automobile Manufacturers - SIAM) மிக முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று.
இண்ட்ஸ்ட்ரீ சரிவில் இருந்து மீண்டு வர இது உதவும் என்பது எஸ்ஐஏஎம் அமைப்பின் எண்ணம். ஆனால் இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகவில்லை. போதாக்குறைக்கு பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை வேறு நிர்மலா சீதாராமன் லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தி விட்டார். அது மட்டுமா? சில உதிரி பாகங்களுக்கான சுங்க வரியையும் சேர்த்தே உயர்த்தியுள்ளார் நிர்மலா சீதாராமன்.
சரி, மத்திய அரசின் திட்டம்தான் என்ன? ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் பெட்ரோல், டீசல் வாகனங்களை விட்டு விட்டு எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு மாற வேண்டும். மாறியே ஆக வேண்டும். இதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கும் ஃபேம்-2 திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு என பல்வேறு சலுகைகளை அள்ளி வீசுகிறது மத்திய அரசு.
ஆட்டோமொபைல் துறையினரும் இதனை வரவேற்கின்றனர்தான். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பது என்னவென்றால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது என்பது படிப்படியாக இருக்க வேண்டும் என்பதுதான். சுமூகமாக மாறுவதை விடுத்து விட்டு, உந்தி தள்ளக்கூடாது என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இனி தாமதிப்பதற்கு நேரமில்லை. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது.
இந்த சூழலில் ஜிஎஸ்டியை குறைக்காததால் அதிர்ச்சியடைந்துள்ள எஸ்ஐஏஎம், மீண்டும் அரசிடம் சென்று முறையிட திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்து எஸ்ஐஏஎம் தலைவர் ராஜன் வதேரா கூறுகையில், ''ஜிஎஸ்டி குறைப்பை நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ஐசிஇ சார்ந்த இண்டஸ்ட்ரீ 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆனால் எங்களுக்கு உதவி கிடைக்கவில்லை.
எனவே நாங்கள் மீண்டும் அரசிடம் செல்ல போகிறோம். ஜிஎஸ்டியை குறைப்பது பற்றி மீண்டும் பரிசீலனை செய்யும்படி அவர்களிடம் வலியுறுத்த போகிறோம். சில நடவடிக்கைகளை எடுங்கள் என்றும் சொல்லப்போகிறோம். ஆட்டோமொபைல் விற்பனை குறைவாக இருந்தால், அதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் ஜிஎஸ்டி வரி வருவாயும் குறைந்து விடும்'' என்றார்.
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு