Just In
- 46 min ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 3 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 3 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 3 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- News ‛‛திமுக கண்ணில் வந்த தோல்வி பயம்’’.. வாக்காளர்கள் பெயர்களை நீக்கியது ஏன்? எல் முருகன் விமர்சனம்
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- Movies கில்லி படத்தில் வரும் விஜய்யின் வீடு எங்க இருக்கு தெரியுமா? செய்யாறு பாலு சொன்ன சுவாரசியத் தகவல்!
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
அடுத்த ஆண்டு 5 புதிய கார்களை அறிமுகப்படுத்துகிறது ஸ்கோடா!
அடுத்த ஆண்டு 5 புதிய கார்களை அறிமுகப்படுத்துவதற்கு ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் புரொஜெக்ட் 2.0 திட்டத்தின் கீழ் வர இருக்கும் இந்த 5 புதிய கார் மாடல்களின் விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
இந்தியாவில் கார் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான புரொஜெக்ட் 2.0 திட்டத்தை ஸ்கோடா ஆட்டோ கையில் எடுத்துள்ளது. அதன்படி, ரூ.8,000 கோடி முதலீட்டில் ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா நிறுவனங்கள் இந்தியாவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. மேலும், பல புதிய கார் மாடல்களையும் அறிமுகம் செய்ய இருக்கின்றன.
இந்த நிலையில், ஸ்கோடா இந்தியா விற்பனை, சர்வீஸ் மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு இயக்குனர் ஸாக் ஹொல்லிஸ் பத்திரிக்கை பேட்டி ஒன்றில் முக்கியத் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதன்படி, அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் 5 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், வரும் 2025ம் ஆண்டிற்குள் இந்தியாவில் கார் டீலர்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்தவும் முடிவு செய்துள்ளதாக கூறி இருக்கிறார். தற்போது நாட்டிலுள்ள 53 நகரங்களில் 63 விற்பனை நிலையங்களும், 61 சேவை மையங்களும் செயல்பட்டு வருவதாகவும், இதனை வெகுவாக உயர்த்த உள்ளதாகவும் கூறி இருக்கிறார்.
ஸாக் ஹொல்லிஸ் தெரிவித்துள்ள திட்டத்தின்படி, இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் 5 புதிய கார்களில் இரண்டு புத்தம் புதிய மாடல்களாகவும், 3 மேம்படுத்தப்பட்ட கார் மாடல்களாகவும் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
அதாவது, கமிக் மற்றும் கரோக் என்ற இரண்டு புத்தம் புதிய எஸ்யூவி மாடல்கள் அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது. மேலும், ரேபிட் காருக்கு மாற்றாக முற்றிலும் புதிய தலைமுறை மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவுவம் தெரிய வருகிறது.
அத்துடன், ஸ்கோடா ஆக்டேவியா மற்றும் சூப்பர்ப் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் எனப்படும் புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட இரண்டு கார் மாடல்களும் இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கருதப்படுகிறது.
அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2021ம் ஆண்டு முதல் பாதியில் இந்த கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரூ.120 கோடி செலவில் இந்தியாவில் உள்ள ஷோரூம்களை புதுப்பித்து புதிய அடையாளத்தை கொடுக்கும் முயற்சியில் ஸ்கோடா ஆட்டோ இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Source: ET Auto
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!