Just In
- 2 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 3 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 5 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 12 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலை காட்டா முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!
தமிழக அரசு, மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படுவதை உறுதி செய்யும் வகையில், ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படுவதையே வாடிக்கையாக வைத்திருப்பதாக எதிர்கட்சியினர் அவ்வப்போது குற்றம் சாட்டு வைத்து வருகின்றனர். இதனை, உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட உள்ளது.
இந்த விவகாரத்தில், தமிழகம் மட்டுமின்றி தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா மற்றும் வட மாநிலங்கள் என நாடே மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்பட ஆரம்பித்துள்ளது. இதைத்தொடர்ந்தே, தமிழக அரசும் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்தவகையில், பண மதிப்பிழப்பு, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அது அறிவித்துள்ளது. இதில், பல திட்டங்களுக்கு பெரும்பான்மையான மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழலே நிலவி வருகின்றன.
ஆனால், இதில் மாற்றமாக ஒரு சில திட்டங்களுக்கு மட்டும் மக்கள் வரவேற்பு அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதில், மின் வாகன திட்டம் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.
அண்மைக் காலங்களாக அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டின் காரணமாக, நாடு பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றது. முக்கியமாக புவி வெப்ப மயமாதல், காற்று மாசடைதல் போன்ற பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றது.
இதற்கு தீர்வு காணும் விதமாக எரிபொருள் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்கிவிட்டு, இவற்றிற்கு மாற்றாக மின் வாகனங்களைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதற்கான பணிகள்தான் தற்போது சூடிபிடிக்க ஆரம்பித்துள்ளது. இத்துடன், மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அண்மையில்கூட, மின்வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் 12 சதவீத ஜிஎஸ்டி வரிக்கு பதிலாக 5 சதவீதமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு, பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் மத்திய, எரிபொருள் வாகனங்களை அடியோடு ஒழித்துகட்டும் வகையிலான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இதுகுறித்த நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ்குழு சிறப்பு செய்தி ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தது இதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு இணங்க தமிழக அரசு ஓர் அறிவிப்பை வெளியட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், மாநிலத்தில் மின் வாகனங்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகள் வழங்கும் கொள்கை குறித்த தகவலை தமிழக அரசு வெளியட உள்ளது.
இதுகுறித்து, ஆட்டோ எகானமிக்ஸ் டைம்ஸ் ஆங்கில தளத்திற்கு மூத்த அரசு அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், "மின் வாகனங்களை ஊக்குவிக்கும் விதமாக முதலீட்டாளர்கள் மற்றும் மின் உற்பத்தியில் பங்களிக்கும் நிறுவனங்களுக்கு சலுகை வழங்கும் விதமாக இந்த கொள்கை உருவாக்கப்பட உள்ளது. அவ்வாறு, அவர்களுக்கு ஜிஎஸ்டி வரி திரும்ப அளித்தல் (Refund), மூலதன மானியம் மற்றும் ஊதியம் அடிப்படையிலான ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகை வழங்கப்பட உள்ளது" என அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "இந்த சலுகை முதல் 3-5 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது. முன்னதாக நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் கூட்டத்தில், முதல் இரண்டு திட்டங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. ஆனால், மூன்றாவதாக ஓர் புதிய திட்டத்தையும் தமிழக தற்போது அறிவிக்க உள்ளது. இந்த சலுகையை எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பெற வேண்டுமானால் குறைந்தது ரூ. 500 கோடி முதலீடு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் அந்த கொள்கையில் இடம்பெற உள்ளது" என தெரிவித்தார்.
அதேசமயம், இந்த கொள்கையில் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமின்றி, மின் வாகனங்களை வாங்கும் பொதுமக்களுக்கு சலுகை வழங்கப்பட உள்ளது. அந்தவகையில், மின் வாகனங்களுக்கு சாலை வரியை தள்ளுபடி செய்ய அதில் பரிந்துரைக்கப்பட உள்ளது.
புதிய கொள்கையில் மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் மூலதன மானியம் பாரம்பரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுவதை விட சற்று அதிகமாக இருக்கும். மேலும், பேட்டரி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அது இன்னும் கூடுதலாக வழங்கப்படும் என கூறப்படுகின்றது.
இந்த வரைவுக் கொள்கை தற்போது நிதி துறையின் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதுகுறித்த இறுதி அறிவிப்பாணையை தமிழக அரசு இம்மாத இறுதிக்குள் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னதாககூட, 1990களில் தமிழக அரசு இதேபோன்று சில சலுகைகளை அறிவித்து, வாகனதுறையை தன் வசம் கவர்ந்து இழுத்தது. அப்போது, வரியில் சலுகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள்மூலம் ஹூண்டாய், ஃபோர்டு, பிஎம்டபிள்யூ, டைம்ளர் மற்றும் நிஸ்ஸான் போன்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களை கவர்ந்திழுத்தது. ஆனால், 2017க்கும் பின்னர் ஜிஎஸ்டி வரி மூலம் இதை தலை கீழாக மாறியது.
ஆகையால், தற்போது மின் வாகன திட்டத்திற்காக புதிய கொள்கையை அறிவித்து தமிழகத்தில் மின் வாகன உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க தமிழக திட்டம் தீட்டி வருகின்றது.
அதேசமயம், நாட்டில் செயல்பட்டு வரும் முக்கியமான வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய், அதன் கோனா எலெக்ட்ரிக் காரை தயாரிக்க ஆரம்பித்துவிட்டது குறிப்பிடத்தகுந்தது.
-
இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?