புது கார் வாங்க போறீங்களா...? அப்போ, டாடா அறிமுகம் செய்த இந்த சிறப்பு சலுகை பற்றி தெரிஞ்சிக்கோங்க!!!
டாடா நிறுவனம், அதன் குறிப்பிட்ட மாடல் கார்களுக்கு அதிகளவில் சிறப்பு சலுகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்திய வாகன உலகின் ஜாம்பவானாக செயல்பட்டு வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், வரும் விழாக் காலங்களை சிறப்பிக்கும் விதமாக அதன் குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டும் சலுகை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
அதுவும், இந்த சலுகை திட்டத்தை வருகின்ற 30ம் தேதி வரை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும் என எது அறிவித்துள்ளது.

அந்தவகையில், டாடா நிறுவனம், அதன் ஹெக்ஸா மற்றும் ஹாரியர் மாடல்களுக்குதான் தற்போது சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இவற்றை, நேரடியாக டீலர்களிடம் வாங்குவதைக் காட்டிலும் ஆன்லைனில் புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கே கூடுதல் சிறப்பு தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகை வழங்கப்பட இருப்பதாக அது தெரிவித்துள்ளது.

டாடா நிறுவனம், ஹாரியர் எஸ்யூவி ரக காரை நடப்பாண்டின் ஆரம்பத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது. இந்த கார் விற்பனையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து தனித்துவமாக செயல்பட்டு வருகின்றது. இதற்கு இந்த காரில் இடம்பெற்றிருக்கும் வசதிகயும் உருவாக்கப்பட்ட விதமே முக்கிய காரணமாக இருக்கின்றது.

அந்தவகையில், ஹாரியர் எஸ்யூவி காரை அந்நிறுவனம், லேண்ட்ரோவர் டி8 மாடல்களை உருவாக்கும், அதே ஒமேகா ஆர்க் பிளாட்பாரத்தைக் கொண்டுதான் தயாரித்துள்ளது. ஆகையால், இந்த காரில் சொகுசு கார்களில் இடம்பெற்றிருப்பதைப்போன்று அதிக இட வசதி, நவீன தொழில்நுட்பம் மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளிட்டவற்றைப் பெற்றிருக்கின்றது.

இதனால், ஒவ்வொரு மாதமும் தனித்துவமான விற்பனை விகிதத்தை அந்த கார் பெற்று வருகின்றது. அந்தவகையில், கடந்த மார்ச் மாத விற்பனையின்படி, 2,500 யூனிட்களுக்கான விற்பனையை டாடா ஹாரியர் பெற்றது. ஆனால், எம்ஜி ஹெக்டர் மற்றும் கியா செல்டோஸ் கார்களின் வருகை டாடா ஹாரியருக்கு சற்று நடுக்கத்தைக் கொடுத்தது.

இதனால், ஆகஸ்டு மாத ஹாரியர் விற்பனை மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. அந்த வகையில், அந்த மாதம் வெறும் 635 யூனிட்டுகளுக்கான விற்பனையை மட்டுமே அது பெற்றது. இதனால், முன்னணியில் இருந்த ஹாரியர் எஸ்யூவி கார், அதிக விற்பனையாகும் கார்களின் பட்டியலில் 17 வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இந்த மிகப்பெரிய வீழ்ச்சியை சமாளிக்கும் விதமாகவே தற்போது டாடா நிறுவனம், அதன் குறிப்பிட்ட மாடல்களுக்கு சலுகையை வழங்க திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், அதிகபட்சமாக ஹெக்ஸா மாடலுக்கு ரூ. 1.50 லட்சமும் சலுகை வழங்கப்பட உள்ளது.
தொடர்ந்து, டிகோர் மாடலுக்கு ரூ. 1.15 லட்சமும், நெக்ஸான் மாடலுக்கு ரூ. 85 ஆயிரமும், டியாகோ மாடலுக்கு ரூ. 70 ஆயிரமும், ஹாரியர் எஸ்யூவி மாடல் காருக்கு ரூ. 50 ஆயிரம் சிறப்பு தள்ளுபடி சலுகை வழங்கப்பட உள்ளது.

இந்த சலுகையுடன் டாடா ஹாரியர் மற்றும் ஹெக்ஸா மாடலுக்கு மட்டும் கூடுதல் சலுகையை வழங்க இருப்பதாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. மேற்கூறிய அனைத்து சலுகைகளும் டீலர்களால் வழங்கப்பட உள்ளன. இத்துடன், டாடா நிறுவனம், அதன் பங்காக ஒரு சிறப்பு சலுகையை வழங்க உள்ளது.

அந்தவகையில், இரு மாடல்களுக்கு மட்டும் ரூ. 30 ஆயிரத்திற்கான கூடுதல் கேஷ்பேக்கை அது வழங்க உள்ளது. இந்த சலுகையை ஆன்லைன்மூலம் புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அது வழங்க இருக்கின்றது.

ஆகையால், டீலர்கள் ஹாரியர் காருக்கு வழங்கும் ரூ. 30 ஆயிரம் என்ற சலுகை 80 ஆயிரம் ரூபாயாக மாறியிருக்கின்றது. அதேபோன்று, ஹெக்ஸா காருக்கு ரூ. 1.18 லட்சம் வரை கேஷ்பேக் வழங்கப்பட உள்ளது. இந்த சலுகை வருகின்ற 30ம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








