Just In
- 44 min ago ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- 1 hr ago டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
- 1 hr ago இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
- 2 hrs ago ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
Don't Miss!
- News நாளை மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் அனைவரும் வாக்களிக்கலாம்! சத்யபிரத சாகு தகவல்
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Lifestyle பளபளப்பான முகத்திற்கு தயிர்-எலுமிச்சை ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Movies சர்வதேச திரைப்பட விழாவில் வடக்கன்.. படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சி.. குவியும் பாராட்டு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மாருதி வழியில் டீசல் கார் உற்பத்தியை நிறுத்தும் டாடா!
மாருதியை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் சிறிய வகை டீசல் கார் உற்பத்தியை நிறுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதற்கு தக்கவாறு கார் எஞ்சின்களை மேம்படுத்தும் முயற்சியில் அனைத்து கார் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. இந்த சூழலில், பெட்ரோல் எஞ்சின்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தும் முயற்சியில் கார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
ஆனால், டீசல் கார் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கு அதிக முதலீடு தேவைப்படுவதால் பல நிறுவனங்களும் டீசல் கார் உற்பத்தியை தொடர்வது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகின்றன. குறிப்பாக, சிறிய வகை டீசல் கார் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கான முதலீடு அதிகமாக இருக்கும் என்பதால், கார் விலையை அதிகமாக நிர்ணயிக்க வேண்டி இருக்கும்.
எனவே, அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் டீசல் கார் உற்பத்தியை கைவிடுவதற்கு முடிவு செய்துள்ளதாக மாருதி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே வழியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இப்போது டீசல் கார் உற்பத்தியை கைவிடுவதற்கு திட்டமிட்டுள்ளது.
டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களில் பயன்படுத்தப்படும் 1.05 லிட்டர் டீசல் எஞ்சினை மேம்படுத்துவதை தவிர்க்க டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. அதேபோன்று, போல்ட், ஸெஸ்ட் உள்ளிட்ட கார்களில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினை பயன்படுத்தி வருகிறது.
மாருதி போன்றே, இந்த எஞ்சினை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெற்று வருகிறது. இந்த எஞ்சினை மேம்படுத்தப் போவதில்லை என்று ஃபியட் ஏற்கனவே தெரிவித்துள்ளது. எனவே, டாடா கார்களில் பயன்படுத்தப்படும் 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகியவை உற்பத்தியிலிருந்து விலக்கப்பட இருக்கிறது.
மேலும், பட்ஜெட் கார் சந்தையில் 80 சதவீதம் அளவுக்கு பெட்ரோல் கார்களே விற்பனையாகின்றன. எனவே, இந்த ரகத்தில் டீசல் கார்களுக்கான மவுசு குறைவாக இருப்பதும், அதிக முதலீடு செய்வது பலன் தராது என்ற முடிவுக்கு டாடா மோட்டார்ஸ் வந்துள்ளது.
எனினும், டாடா நெக்ஸான் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினும், டாடா ஹாரியர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினும், டாடா ஹெக்ஸா காரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சினும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின்களை டாடா மோட்டார்ஸ் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்திவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பெங்களூருக்கு போறவங்க ஒரு முறையாவது இந்த பஸ்ஸில் டிராவல் பண்ணி பாருங்க!! மொத்தமும் எலக்ட்ரிக்...
-
உடனே திருப்பி கொண்டு வாங்க! பிரபல நிறுவனம் திடீர் அறிவிப்பு! விலை கம்மினு வாங்கீட்டு புலம்பும் உரிமையாளர்கள்!
-
குடும்பத்தோட போக பஸ்ல டிக்கெட்டை தேடி அலைய வேண்டியதில்ல!.. 9பேர் போற மாதிரியான கார் விற்பனைக்கு அறிமுகம்!!