Just In
- 20 min ago 6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
- 1 hr ago ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
- 1 hr ago ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
- 3 hrs ago இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?
Don't Miss!
- Sports எங்களை ஏமாற்ற பார்க்காதீங்க! நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனி.. GT போட்டியில் நடந்தது என்ன?
- Movies இதை சொல்ல கூச்சமே இல்லை.. அப்பாவால்தான் வாய்ப்பு கிடைத்தது.. பிருத்விராஜ் ஓபன் டாக்
- Lifestyle உங்க தலையணை இந்த மாதிரி இருந்தா நீங்க தலைவலி முதல் பல ஆபத்தான பிரச்சினைகள் வரை சந்திக்க வேண்டியிருக்குமாம்...!
- News திருமாவளவன், சீமானுக்கு பலமுறை தூது விட்டாராமே எடப்பாடி.. கூட்டணி பற்றி உடைத்துப் பேசிய அன்புமணி!
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவதுகூட முட்டாள்தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
இந்தியாவின் முதல் பாதுகாப்பு நிறைந்த காரில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்த டாடா...
டாடா நிறுவனம், வாடிக்கையாளர்களின் வேண்டுகோளை அடுத்து, அதன் பாதுகாப்பு நிறைந்த காரான நெக்ஸான் மாடலில் கூடுதல் சிறப்பம்சங்களை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாடா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடல்களில் நெக்ஸான் காரும் ஒன்று. இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வருகின்றது. இதற்கு, இந்த கார் கடந்த ஆண்டில் நடைபெற்ற க்ராஷ் டெஸ்ட்டில் பெற்ற ரேடிங்கே முக்கிய காரணமாக இருக்கின்றது. அந்தவகையில், டாடா நெக்ஸான் கார் பாதுகாப்பு ரேட்டிங்கில் ஐந்திற்கு ஐந்து நட்சத்திரங்கள் பெற்று, இந்தியாவின் முதல் பாதுகாப்பான கார் என்ற பெருமையைப் பெற்றது.
சப்-4 மீட்டர் ரகத்திலான இந்த எஸ்யூவி மாடல் தற்போது சில அப்டேட்டுகளைப் பெற்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், நெக்ஸான் காரின் டிசைன் கணிசமாக மாற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. அதேபோன்று, கூடுதலாக சில சிறப்பம்சங்களும் இணைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த அதிரடி மாற்றத்தை, டாடா நிறுவனம், அதன் வாடிக்கையாளர்கள் அளித்த கோரிக்கையை அடுத்து மேற்கொண்டுள்ளது. அந்தவகையில், வேரியண்டிற்கேற்ப அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், வேரியண்ட் வாரியாக டாட நெக்ஸான் கார்கள் பெற்றிருக்கும் அப்டேட்களைக் கீழே காணலாம்....
டாடா நெக்ஸானின் எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் மாடலில் புதிய வசதியாக, பவர் அவுட்லெட்டுகள் அதன் பின்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பவர் அவுட்லெட் 12V திறன் கொண்டது. அதேபோன்று, டூர் ட்ரிம்மர்களின் நிறமும் மாற்றப்பட்டுள்ளது. அவ்வாறு, சாட்டின் க்ரோம் நிறத்திலிருந்து ப்யானோ கருப்பு க்ளாஸி ப்னிஷ் கொடுக்கப்ட்டுள்ளது.
எக்ஸ்டி, எக்ஸ்இசட், எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் ஆகிய மாடல்களுக்கு புதிய ரூஃப் ரெயில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், இந்த வேரியண்ட்களின் பின்பக்க ஏசி வெண்ட்டுகள் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளன. இதனால், முந்தைய மாடலைக் காட்டிலும், தற்போது புதிதாக அறிமுகமாகியிருக்கும் இந்த வேரியண்டில் அதிகளவு குளிர்ச்சி வெளிப்படும். மேலும், அந்த ஏசி வெண்டின் காற்றடிக்கும் திசையை மாற்றியமைக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
அழகு மேம்படுத்தலாக எக்ஸ்எம், எக்ஸ்எம்ஏ மற்றும் எக்ஸ்டி வேரியண்ட்களில், தொடுதிரை அல்லாத இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் அப்கிரேட் செய்யப்ட்டுள்ளது. அதேபோன்று, இந்த காரின் அன்டெனாவினுடைய அளவு கூட்டப்பட்டுள்ளது. இதே மாற்றங்களுடன், எக்ஸ்இசட் வேரியண்டில் டேஸ்பேரின் மையபகுதி பேட் நிறம் அப்கிரேட் செய்யப்ட்டுள்ளது. அவ்வாறு, சில்வர் நிறத்திலிருந்து க்ளாஸ்ஸி ப்னிஸிங்குடன் கூடி வார்ன் க்ரே நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.
இத்துடன், டாடா மோட்டார்ஸ் கியர் ஷிஃப்ட் லிவர் க்னாப் மற்றும் சென்ட்ரல் கன்சோலை புதிய வண்ணத்திற்கு மாற்றியமைத்துள்ளது. அவ்வாறு, முன்னதாக இருந்த சில்வர் நிறம் மாற்றப்பட்டு பியானோ க்ளாஸி நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, இந்த காரின் ஏசி கன்ட்ரோல் பேனலின் நிறம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஏசி க்னாப்பிற்கு பியானோ பிளாக் நிறம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களானது ஹை என்ட் வேரியண்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, நெக்ஸான் மாடலை பிஎஸ்-6 தரத்திற்கு ட்யூன் அப் செய்யும் பணயிலும் டாடா நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. ஆகையால், பிஎஸ்-6 தரத்திலான எஞ்ஜின் அறிமுகமாகும் வரை, தற்போதைய பிஎஸ்-5 எஞ்ஜினே விற்பனையில் இருக்கும். மேலும், இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி ஆப்ஷனிலும் கிடைக்கும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அதன் தயாரிப்புகளின் சிலவற்றின் விலையை உயர்த்தி அறிவித்திருந்தது. அந்தவகையில், போல்ட், ஜெஸ்ட், ஹெக்ஸா மற்றும் நெக்ஸான் ஆகிய மாடல்களின் விலையை ரூ. 10 ஆயிரம் வரை உயர்த்தியது. அதேபோன்று, புகழ்வாய்ந்த ஹாரியர் மாடலின் விலையை ரூ. 30 ஆயிரம் வரை உயர்த்தியது.