Just In
- 47 min ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 1 hr ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 1 hr ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 3 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- Movies சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆச்சரியம்... குரலுக்கு கட்டுப்படும் இந்தியாவின் முதல் பாதுகாப்பான கார்... வீடியோ!!!
இந்தியாவின் முதல் பாதுகாப்பான கார் என்ற பட்டத்தைச் சூடிய டாடா நெக்ஸான் கார், குரல் கட்டளைக்கு கீழ்படிவது போன்ற வீடியோக் காட்சி வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
டாடா நிறுவனத்தின் பல புகழ்வாய்ந்த கார்களில் நெக்ஸான் மாடலும் ஒன்றாக இருக்கின்றது. இந்த கார் சப்-4 மீட்டர் எஸ்யூவி ரக காராகும். முன்னதாக அதீத விற்பனை வளர்ச்சியைப் பெற்று வந்த நெக்ஸான், சமீபகாலமாக சந்தை போட்டியின் காரணமாக சரிவைச் சந்தித்து வருகின்றது.
இதில், முக்கியமாக ஹூண்டாய் வெனியூவின் வரவு, டாடா நிறுவனத்தின் பல்வேறு தயாரிப்புகளுக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தியுள்ளது. அதில் நெக்ஸானும் ஒன்று. மேலும், இந்த நிறுவனத்திற்கு மட்டுமின்றி மஹிந்திரா, மாருதி சுஸுகி உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கும் இந்த கார் கடுமையான போட்டியை ஏற்படுத்தியுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் வெனியூ காரும் சப்-4 மீட்டர் எஸ்யூவி ரக காராகும். இந்த கார் மலிவான விலையில் பல்வறு சிறப்பம்சங்களைப் கொண்டதாக களமிறக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாகவே, அசூர விற்பனையை இந்த கார் குவித்து வருகின்றது.
இந்த காரில் முக்கிய சிறப்பம்சமாக ப்ளூ லிங்க் வசதி வழங்கப்பட்டுள்ளது இது தானியங்கி திறன் கொண்டது. இதைக் கொண்டு காரை ஆன் மற்றும் ஆஃப் செய்வதுடன் கேபினுக்குள் வழங்கப்பட்ட பல அம்சங்களை ரிமோட் மூலம் இயக்க முடியும். இத்துடன் வாய்ஸ் கமெண்ட் தேர்வும் இணைக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற திறனை, சமீபத்தில் அறிமுகமாகி புக்கிங்கில் கொடிகட்டி பறந்துவரும் எம்ஜி ஹெக்டர் காரும் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்நிலையில், டாடா நிறுவனத்தின் நெக்ஸான் காரிலும் வாய்ஸ் கமெண்ட் ஆப்ஷன் வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இதனை டாடா நெக்ஸான் காரின் உரிமையாளர் பிரவீன் தப்பிளி என்பவர், கூடுதலாக சேர்த்திருப்பதாக கூறப்படுகின்றது. ஏனென்றால், டாடா நிறுவனம் இதுபோன்ற தேர்வை இந்த காரில் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேசமயம், புதிய நெக்ஸான் காரின் டாப் எண்ட் வேரியண்டில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த தகவலை கடைசியாக காணலாம்...
பிரவீன் தப்பிளி மேற்கொண்ட நடவடிக்கையால் சாதாரண நெக்ஸான், ஸ்மார்ட் நெக்ஸானாக மாறியுள்ளது. அந்தவகையில், ஆட்டோ இன்டலிஜென்ஸ் திறன் கொண்ட வாய்ஸ் கமெண்ட் ஆப்ஷன் இந்த காரில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பம்சம் டாடா நெக்ஸான் காரை, குரல் கட்டளைக்கு கீழ்படிய வைக்கும். அவ்வாறு, அந்த கார் குரல் கட்டளைக்கு கீழ்படிவதுபோன்ற காட்சியை அவர் முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்...
ஆச்சரியமளிக்கும் வகையில் அப்கிரேஷனை செய்திருக்கும் பிரவீன் தப்பிளி, கேரளாவைச் சேர்ந்தவர் ஆவார். மருத்துவராக பணியாற்றி வருகின்றார். இவர், தனது காரை அதிக தொழில்நுட்பம் வாய்ந்ததாக மாற்றும் விதமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இதேபோன்ற, ஆட்டோ இன்டலிஜென்ஸ் திறன் கொண்ட சிறப்பம்சம்தான் சமீபத்தில் அறிமுகமாகி, விற்பனையில் புதிய உச்சத்தைச் சந்தித்து வரும் ஹூண்டாய் வெனியூ, எம்ஜி ஹெக்டர் கார்களிலும் இடம்பெற்றிருக்கின்றது.
டாடா நெக்ஸான் காரில் சேர்க்கப்பட்டிருக்கும், தானியங்கி வாய்ஸ் கமெண்ட் அம்சம், கூகுள் அசிஸ்டண்ட் வாய்ஸ் மூலம் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம், நெக்ஸான் காரின் கணிசமான கருவிகளை இயக்க முடியும். அவ்வாறு, ஆன் மற்றும் ஆஃப் உள்ளிட்ட பல்வேறு செல்களை குரல் கட்டளைமூலம் செய்யமுடியும்.
டாடா நிறுவனத்தின் இந்த நெக்ஸான் கார், இந்தியாவின் முதல் பாதுகாப்பு நிறைந்த காராக இருக்கின்றது. இந்த காருக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக, அதன் டாப் எண்ட் வேரிண்டில் 7.0 இன்ச் கொண்ட தொடுதிரை திறன் கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இணைக்கப்பட உள்ளது. இதற்கு முன்னதாககூட, இந்த டாப் எண்ட் வேரியண்டில் ட்யூவல் டோன் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது.
அந்தவகையில், புதிய அம்சங்கள் எக்ஸ்இசட், எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் இணைக்கப்பட உள்ளது. இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும். இது, போன் அழைப்புகளை ஏற்க, நேவிகேஷன் மற்றும் மியூசிக் சிஸ்டத்தை வாய்ஸ் கமாண்ட் மூலம் கட்டுப்படுத்த உதவும்.
ஆகையால், டாக்டர் பிரவீன் மேற்கொண்டுள்ள இந்த சிறப்பம்சத்தை, டாடா நிறுவனம் நெக்ஸான் காரில் அறிமுகம் செய்திருப்பது, அதன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதைத்தொடர்ந்து, டாடா நிறுவனம், அதன் தயாரிப்புகளை பிஎஸ்-6 தரத்திற்கு ட்யூன் அப் செய்யும் பணயிலும் ஈடுபட்டு வருகின்றது.
-
7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!
-
மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
-
இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!