Just In
- 1 hr ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 4 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 5 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 5 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பட்ஜெட் கார்... டாடா டிகோர் ஜேடிபி காரை டெஸ்ட் டிரைவ் செய்ய வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு...
டாடா டிகோர் ஜேடிபி கார் ஷோரூம்களுக்கு வர தொடங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான டாடா நிறுவன டீலர்ஷிப்களில் அதனை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு தற்போது வாடிக்கையாளர்களுக்கு கிடைத்துள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டியாகோ மற்றும் டிகோர் ஜேடிபி மாடல் கார்களை டாடா நிறுவனம் கடந்த வருடம் அறிமுகம் செய்தது. ஜேடிபி டிவின்ஸ் கார்கள் வரிசையில் சிறப்பம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட மாடலாக இந்த கார்கள் கருதப்படுகின்றன.
இந்த ஜேடிபி டிவின்ஸ் கார்களை கோவை ஜெயம் இன்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து டாடா மோட்டார்ஸ் உருவாக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, வரும் காலங்களில் தயாரிக்க உள்ள வாகனங்களையும் இந்த நிறுவனத்துடன் இணைந்தே டாடா தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடாவின் டிகோர் ஜேடிபி மாடல் கார் முன்னதாக வெளிவந்த மற்ற செடான்களின் வரிசையில் மிகவும் வித்தியாசமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த அதிசக்தி வாய்ந்த மாடலில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
டாடா டிகோரின் முன்புறத்தில் க்ரில் அமைப்பு மற்றும் ஜேடிபி பேட்ஜ் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும், இதில் சிறப்பம்சமாக பனி விளக்குகள், இரு புரொஜெக்டர் ஹெட்லைட், பெரிய ஏர்டேம் அமைப்பு ஆகியவை இந்த புதிய மாடலில் அமைக்கப்பட்டுள்ளன.
பின்புறத்தில் கிளியர் லென்ஸ் உடைய எல்இடி மின் விளக்கு மற்றும் முக்கிய அம்சமாக இரட்டை குழல் சைலென்சர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, மற்ற டாடா கார் தயாரிப்புகள் போலவே டிகோரிலும் சிறப்பான இடவசதி அளிக்கப்பட்டுள்ளது.
டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி மாடல்களில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 112 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸில் இயங்கும் இந்த கார் வெறும் 10 செகண்ட்டில் 0-100 கிமீ வேகத்தை தொட்டுவிடும்.
மேலும், இந்த கார்களில் சிட்டி மற்றும் ஸ்போர்ட் என்ற இரண்டு டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், சிட்டி மோட் சாதாரண வேகத்திலும், ஸ்போர்ட் மோட் அதிவேகத்தில் காரை செலுத்தவும் பயன்படுகிறது.
இதைத்தொடர்ந்து, வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக, டியாகோ மற்றும் டிகோர் ஜேடிபி மாடல்களில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு உள்ளன. மேலும், முதல்முறையாக கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் என்னும் புதிய வசதியை டாடா கார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியானது வளைவுகளில் கார் கவிழாமல் பாதுகாப்பாக செல்ல உதவுகிறது.
இந்நிலையில், டியாகோ காரின் டெலிவரியை டாடா நிறுவனம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்நிலையில், தற்போது டிகோர் ஜேடிபி மாடல் கார்கள் விற்பனைக்கு வர ஆரம்பித்துள்ளன. மேலும், இந்த புதிய டிகோர் ஜேடிபி செடானை டெஸ்ட் டிரைவ் செய்ய அதன் டீலர்கள் சந்தையில் வெளியிட்டுள்ளனர்.
டாடா டிகோர் ஜேடிபியின் இந்த வருகை அதன் போட்டி நிறுவனங்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!