நாட்டின் நலனை காக்க டாடா செய்ய இருக்கும் காரியம் இதுதான்... என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
நாட்டின் நலனில் அக்கறை செலுத்தும்விதமாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புது முயற்சியில் இறங்கியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

வாகன உலகத்தின் லெஜண்ட் என்று அழைக்கப்படும் டாடா நிறுவனம், பட்ஜெட் விலையில் வசதிகள் நிறைந்த கார்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றது. அதேசமயம், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், பாதுகாப்பு மிகுந்த வாகனங்களை உற்பத்தி செய்வதில் இந்த நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

அவ்வாறு, இந்த நிறுவனம் வெளியிட்ட நெக்ஸான் கார் கடந்த வருடம், என்சிஏபி அமைப்பு மூலம் நிகழ்த்தப்பட்ட கிராஷ் டெஸ்டில் ஐந்துக்கு 5 நட்சத்திரங்களைப் பெற்று இந்தியாவின் முதல் பாதுகாப்பான கார் என்ற பட்டத்தைப் பெற்றது.

இவ்வாறு, வாடிக்கையாளர்களின் நலனில் அக்கறைக் கொண்டு செயல்படும் டாடா நிறுவனம், தற்போது நாட்டின்மீது அக்கறைக் கொள்ளும் விதமாக, சுற்றுச்சூழலின் நண்பனாக விளங்கும், எலக்ட்ரிக் கார்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவ்வாறு, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அல்ட்ராஸ், எச்2எக்ஸ், டியாகோ மற்றும் டீகோர் மாடல்களில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து வருகிறது. இதுகுறித்து டாடா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ குவெந்தர் பட்ஸ்செக் கூறுகையில்,

"டாடா நிறுவனம் எதிர்கால மின்வாகனங்களை ஆல்பா மற்றும் ஒமெகா பிளாட்பாரங்களில் வைத்து உருவாக்கி வருகிறது. அந்த வகையில், உயர் வகுப்பு மாடல்களான டியாகோ மற்றும் டீகோர் மின் வாகனங்களுக்கு முன்பாக ஆல்பா கட்டமைப்பில் தயாராகி வரும் மின் வாகனம்தான் முதலாவதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது" என்றார்.

டியாகோ மின் காரானது, மாருதியின் எலக்ட்ரிக் வெர்ஷன் வேகன் ஆர் மாடலுக்குப் போட்டியாக களமிறங்க உள்ளது. அதேபோன்று, டீகோர் மின் வாகனம் எந்தவொரு போட்டியுமின்றி தனி காட்டு ராஜாவாக களமிறங்க இருக்கிறது.

இதைத்தொடர்ந்து, அல்ட்ராஸ் எலக்ட்ரிக் கார் பிரீமியம் ரக ஹேட்ச்பேக் எலக்ட்ரிக் காராக களமிறங்க இருக்கிறது. மேலும், எச்2எக்ஸ் எலக்ட்ரிக் கார், எஸ்யூவி/கிராஷோவர் மாடலில் களமிறங்க இருக்கிறது. இது மஹிந்திராவின் இ-கேயூவி100 மாடலுக்கு போட்டியாக இருக்கும்.

இதைத்தொடர்ந்து, அல்ட்ராஸ் எலக்ட்ரிக் கார் பிரீமியம் ரக ஹேட்ச்பேக் எலக்ட்ரிக் காராக களமிறங்க இருக்கிறது. மேலும், எச்2எக்ஸ் எலக்ட்ரிக் கார், எஸ்யூவி/கிராஷோவர் மாடலில் களமிறங்க இருக்கிறது. இது மஹிந்திராவின் இ-கேயூவி100 மாடலுக்கு போட்டியாக இருக்கும்.

அந்த வகையில், டாடா நிறுவனத்தின்மூலம் விற்பனைக்கு வரவிருக்கும் மின் வாகனம் ஆல்பா அல்லது ஒமெகா தளத்தில் இருந்துதான் முதலில் விற்பனைக்கு வர இருக்கின்றது. மேலும், இந்த கார்கள் இந்திய மதிப்பில் ரூ.15 லட்சத்திற்கும் குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








