Just In
- 52 min ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 1 hr ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 1 hr ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 3 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அமெரிக்காவிற்கு ஷாக் கொடுத்த 2 இந்திய இளைஞர்கள்... என்ன செய்தார்கள் என தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்
இந்தியாவை சேர்ந்த 2 இளைஞர்கள், அமெரிக்காவிற்கு பெரிய ஷாக் ஒன்றை கொடுத்துள்ளனர். அவர்கள் என்ன செய்தார்கள் என தெரிந்தால், நீங்கள் நிச்சயமாக பெருமைப்படுவீர்கள்.
இந்தியாவை சேர்ந்த 2 இளைஞர்கள், அமெரிக்காவிற்கு பெரிய ஷாக் ஒன்றை கொடுத்துள்ளனர். அவர்கள் என்ன செய்தார்கள் என தெரிந்தால், நீங்கள் நிச்சயமாக பெருமைப்படுவீர்கள்.
இந்தியாவில் டூவீலர், கார், பஸ் மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக வாகனங்கள் இயங்க தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களின் தேவையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
ஆனால் இந்தியாவிடம், பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் வளம் போதிய அளவிற்கு இல்லை. எனவே சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்துதான் இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது.
இந்தியா தனது மொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதத்தை, இறக்குமதியின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்து கொள்கிறது. இதன்மூலம் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு உலகிலேயே கச்சா எண்ணெய்யை மிக அதிக அளவில் இறக்குமதி செய்யும் 3வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ஒரு ஆண்டுக்கு மட்டும் இந்தியா செலவிடும் தொகை எவ்வளவு என தெரியுமா? சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்கள். கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இவ்வளவு பெரிய தொகையை செலவிடுவதால், இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
எனவே பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்தியா மிக தீவிரமாக முயன்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு வெகுவாக குறையும். இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதுகாக்கப்படும். அதனுடன் சேர்த்து சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம், பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகை, நாம் சுவாசிக்கும் காற்றை வெகுவாக மாசுபடுத்தி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவின் தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் தற்போது காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கி தவித்து கொண்டுள்ளன.
ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்கள் புகையை வெளியிடாது என்பதால், காற்று மாசுபாடு தவிர்க்கப்படும். ஒட்டுமொத்தத்தில் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தவை.
பொருளாதாரத்துடன் சேர்த்து சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்பதால்தான், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. முதலில் 2030ம் ஆண்டிற்குள், இந்தியாவில் இயங்கும் அனைத்து வாகனங்களும், எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு வைத்திருந்தது.
ஆனால் 100 சதவீத எலெக்ட்ரிக் வாகனங்கள் என்ற இந்த மெகா இலக்கை, 2030ம் ஆண்டிற்குள் எட்டுவது மிக கடினம் என்பதை மத்திய அரசு சற்று தாமதமாக உணர்ந்து கொண்டது. எனவே சமீபத்தில் இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
இதன்படி 100 சதவீத எலெக்ட்ரிக் வாகனங்கள் என்ற நிலையில் இருந்து, 30 சதவீத எலெக்ட்ரிக் வாகனங்கள் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது 2030ம் ஆண்டிற்குள், இந்தியாவில் இயங்கும் மொத்த வாகனங்களில், 30 சதவீத வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும்.
ஆனால் இந்த இலக்கையாவது இந்தியா எட்டுமா? என்பதும் சற்று சந்தேகமாகதான் பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில், மக்கள் மத்தியில் நிலவி கொண்டிருக்கும் பெரிய தயக்கமே இதற்கு மிக முக்கியமான காரணம்.
இந்தியாவில் தற்போதைய நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்கள் சற்று அதிகப்படியான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் ஒரு முறை சார்ஜ் செய்தால் பயணம் செய்யும் தூரமும் மிக மிக குறைவாகவே உள்ளது. இதனை ரேஞ்ச் என அழைக்கின்றனர்.
அதாவது ஒரு எலெக்ட்ரிக் வாகனம் ஒரு முறை சார்ஜ் செய்தால், 100 கிலோ மீட்டர்கள் பயணம் செய்கிறது என வைத்து கொள்வோம். அப்போது 100 கிலோ மீட்டர்கள் என்பதுதான் அதன் ரேஞ்ச். ஆனால் தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் மிக குறைவாக உள்ளது.
போதாக்குறைக்கு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் இன்னும் போதிய அளவிற்கு அதிகரிக்கப்படவில்லை. எனவே நடு வழியில் எங்கேயாவது வாகனம் நின்று விட்டால் எப்படி சார்ஜ் செய்வது? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.
இதுவே பெட்ரோல், டீசல் வாகனங்கள் என்றால் பிரச்னையே இல்லை என பொதுமக்கள் நினைக்கின்றனர். ஏனெனில் ஆங்காங்கே பெட்ரோல் பங்க்குகள் இருக்கும். ஆனால் இந்தியாவில் பெட்ரோல் பங்க்குகளின் எண்ணிக்கைக்கு நிகராக சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லை.
அப்படியே இருந்தாலும் கூட, எலெக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் ஏற மிக அதிக நேரம் எடுத்து கொள்கின்றன. எனவே சார்ஜ் ஏறி முடியும் வரை காத்திருக்க வேண்டும். இதுபோன்ற காரணங்களால்தான் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற பொதுமக்கள் தயங்குகின்றனர்.
ஆனால் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் இந்த தொழில்நுட்பத்தில் வெகுவாக முன்னேறி விட்டன. அங்கு உற்பத்தி செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகள் வெகு விரைவாக சார்ஜ் ஏறிவிடும். அத்துடன் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தாலே மிக நீண்ட தூரம் பயணம் செய்யலாம்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் டெஸ்லா நிறுவனத்தை இதற்கு உதாரணமாக எடுத்து கொள்ளலாம். டெஸ்லா மாடல் எஸ் 100டி என்ற காரில், ஒரு முறை சார்ஜ் செய்தால், சுமார் 550 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யலாம்!!
ஆனால் இந்தியாவில் தற்போது உற்பத்தி செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் மிக குறைவாக உள்ளது. அத்துடன் அவை சார்ஜ் ஏற அதிக நேரம் எடுத்து கொள்கின்றன. போதாக்குறைக்கு விலையும் சற்று அதிகம்.
எனவேதான் இந்தியாவில் எதிர்பார்த்த அளவிற்கு இன்னும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்காமல் உள்ளது. ஆனால் இந்த பிரச்னைகள் அனைத்திற்கும் தற்போது தீர்வு கண்டறியப்பட்டுள்ளது. இந்த தீர்வு உலக நாடுகள் அனைத்தையும் திரும்பி பார்க்க வைப்பதாக உள்ளது.
மும்பை நகரை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் ஜிகாடைன் எனர்ஜி (Gegadyne Energy) என்ற நிறுவனம், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான அதிநவீன பேட்டரி ஒன்றை தற்போது உருவாக்கியுள்ளது. ஜூபின் வர்ஜீஸ், அமேயா கடிவான் என்ற 2 இளைஞர்களால் தொடங்கப்பட்ட நிறுவனம் இது.
தற்போது இவர்கள் உருவாக்கியுள்ள எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரியின் சிறப்பம்சங்கள் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளன. இதில் முதலாவது சிறப்பம்சம் என்னவென்றால், இவர்கள் உருவாக்கியுள்ள பேட்டரி வெறும் 15 நிமிடங்களில் முழுவதும் சார்ஜ் ஆகிவிடும்.
தற்போதைய நிலையில் பெரும்பாலான எலெக்ட்ரிக் வாகனங்களில் லித்தியம் இயான் என்ற பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் வழக்கமான சார்ஜர்களை பயன்படுத்தினால், லித்தியம் இயான் பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் ஆக அதிக நேரம் எடுத்து கொள்ளும்.
அதுமட்டுமில்லாமல் லித்தியம் இயான் பேட்டரிகளின் விலை மிக அதிகம். ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தின் மொத்த உற்பத்தி செலவில், சுமார் 40 சதவீதம் வரையிலான தொகை, லித்தியம் இயான் பேட்டரிகளுக்கு மட்டுமே சென்று விடுகிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
இதன் காரணமாகதான் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை மிக அதிகமாக உள்ளது. ஆனால் ஜூபின் வர்ஜீஸ், அமேயா கடிவான் ஆகியோர் கண்டறிந்துள்ள பேட்டரி, லித்தியம் இயான் பேட்டரிகளை காட்டிலும் நன்கு மேம்பட்டது.
லித்தியம் இயான் பேட்டரிகளில், எலெக்ட்ரோ கெமிக்கல் முறையில் ஆற்றல் சேமிக்கப்படுகிறது. ஆனால் ஜூபின் வர்ஜீஸ், அமேயா கடிவான் கண்டறிந்துள்ள பேட்டரியில், எலெக்ட்ரோ ஸ்டாட்டிக் (Electro Static), எலெக்ட்ரோ கெமிக்கல் ஆகியவற்றின் கூட்டு செயல்முறை மூலம் ஆற்றல் சேமிக்கப்படுகிறது.
இதன்மூலம் லித்தியம் இயான் பேட்டரிகளை காட்டிலும், இந்த புதிய பேட்டரியில், 50 சதவீத அதிக நேரம் சார்ஜ் நீடித்து நிற்கும் என கூறப்படுகிறது. அப்படியானால் ஒரு முறை சார்ஜ் செய்தால், மிக நீண்ட தொலைவிற்கு பயணம் செய்ய முடியும்.
ஆனால் எவ்வளவு தூரம்? என்ற தகவல் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை. ஜூபின் வர்ஜீஸ், அமேயா கடிவான் ஆகியோர் கண்டறிந்துள்ள இந்த புதிய தொழில்நுட்பம் தற்போது காப்புரிமை பெறுவதற்காக காத்து கொண்டுள்ளது.
அனேகமாக காப்புரிமை கிடைத்தபின் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும் மேலே குறிப்பிட்டுள்ளபடி இந்த பேட்டரி வெறும் 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகி விடும் என்ற தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதுதவிர இந்த பேட்டரியின் விலை மிகவும் குறைவாகதான் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பேட்டரியை பயன்படுத்தும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் நிச்சயமாக பெரும் அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக மொத்தத்தில் மிகவும் குறைந்த செலவில், மிக விரைவாக சார்ஜ் ஏறக்கூடிய அதே நேரத்தில் ஒரு முறை சார்ஜ் செய்தால் மிக அதிக தொலைவு பயணிக்க கூடிய வகையிலான பேட்டரி தொழில்நுட்பத்தை இந்த 2 இந்திய இளைஞர்களும் கண்டறிந்துள்ளனர்.
இந்த புதிய பேட்டரி அடுத்த ஆண்டு முதல், அதாவது 2020ம் ஆண்டு முதல் வணிக ரீதியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு இணையான புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ள 2 இந்திய இளைஞர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இதுகுறித்து ஜூபின் வர்ஜீஸ் கூறுகையில், ''பேட்டரியின் விலை மிக அதிகமாக இருப்பதால்தான் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் அதிகமாகிறது. எனவே பேட்டரி உற்பத்தி துறையை இந்தியா ஊக்குவிக்க வேண்டும்'' என்றார்.
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி