டொயோட்டா பிராண்டில் வரும் மாருதி பலேனோ காரின் புதிய பெயர் இதுதான்
டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாருதி பலேனோ காருக்கு க்ளான்ஸா என்று பெயரிடப்பட்டு உள்ளது. கூடுதல் விபரங்களை காணலாம்.

மாருதி பலேனோ கார் டொயோட்டா பிராண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது தெரிந்ததே. இந்த நிலையில், ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல் எதிர்பார்த்தற்கு முன்னதாகவே அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ரீபேட்ஜ் மாடலானது டொயோட்டா க்ளான்ஸா என்ற பெயரில் வர இருக்கிறது. மேலும்,
இந்த காரின் உற்பத்தி இந்தியாவில் துவங்கப்பட்டு உள்ளது.

டொயோட்டா க்ளான்ஸா காரின் உற்பத்தி குஜராத் மாநிலத்தில் உள்ள சுஸுகி கார் ஆலையில் துவங்கப்பட்டு உள்ளது. இது முதல் கட்டப் பணியாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த சில மாதங்களில் க்ளான்ஸா காரின் உற்பத்தி பெங்களூர் அருகே உள்ள டொயோட்டா ஆலைக்கு மாற்றப்படும். அதாவது, உதிரிபாகங்கள் சப்ளை பிரச்சினை சரியான பின்னர் பெங்களூர் ஆலையில் தான் க்ளான்ஸா கார் உற்பத்தி செய்யப்படும்.

டொயோட்டா க்ளான்ஸா கார் பெட்ரோல் மாடலில் மட்டுமே வர இருக்கிறது. மாருதி பலேனோ காரின் ஸீட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய இரண்டு பெட்ரோல் வேரியண்ட்டுகள் டொயோட்டா க்ளான்ஸா காரில் வழங்கப்படும். ஆனால், வேறு வேரியண்ட் பெயரில் அறிமுகம் செய்யப்படும்.

டொயோட்டா க்ளான்ஸா காரில் வழங்கப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பலரையும் 115 என்எம் டார்க் திறனை அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட இருக்கின்றது. சிலியில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வாய்ப்பு உள்ளது.

டொயோட்டா க்ளான்ஸா காரின் உற்பத்தி துவங்கிய நிலையில், விரைவில் டீலர்களுக்கு இந்த கார் வந்துவிடும் என்று தெரிகிறது.
இந்த மாத இறுதியில் அல்லது மே மாத துவக்கத்தில் வாடிக்கையாளர்கள் டெஸ்ட் டிரைவ் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்
Via - Rushlane


Click it and Unblock the Notifications








