Just In
- 1 hr ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 4 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 6 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 8 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டொயோட்டா கார்களுக்கு 30 நிமிடங்களில் கடன் வழங்கும் திட்டம்!
புதிய டொயோட்டா கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடங்களில் கடன் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
டொயோட்டா நிறுவனத்தின் கடன் பிரிவு வழியாக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 'தட்கல் லோன்' என்ற பெயரில் இந்த திட்டத்தை டொயோட்டா குறிப்பிடுகிறது. இந்த திட்டத்தின்படி டொயோட்டா கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் மிக எளிதான, விரைவான கடன் திட்டத்தை பெற முடியும்.
புதிய டொயோட்டா கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால், அடுத்த 30 நிமிடங்களில் கடனுக்கு அனுமதி வழங்கப்படும். அதாவது, வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் சிபில் ஸ்கோர் அடிப்படையில் இந்த கடன் உடனடியாக அனுமதிக்கப்படும்.
தட்கல் கடன் திட்டத்தின் மூலமாக காரின் எக்ஸ்ஷோரூம் விலையில் அதிகபட்சமாக 85 சதவீதம் வரை கடன் பெற முடியும். காருக்கான மீதமுள்ள தொகையை முன்தொகையாக செலுத்த வேண்டியிருக்கும். இதனால், கார் கடனுக்காக காத்திருக்கும் கால விரயம் குறையும்.
புதிதாக கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல், ஏற்கனவே டொயோட்டா கார் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களும் இந்த தட்கல் திட்டத்தின் கீழ் கடனுதவி பெறும் வாய்ப்பும் உள்ளது.
பழைய டொயோட்டா கார்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சொந்தமாக வீடு இருத்தல் அவசியம் என்பதுடன், அவர்கள் தனி நபர் பயன்பாட்டிற்காக வாகனத்தை பயன்படுத்த வேண்டும் என்பது நிபந்தனையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளரின் நிழற்படம், இருப்பிடச் சான்று, சொந்தமாக வீடு இருப்பதற்கான ஆவணங்கள், அடையாள அட்டை, வங்கி பரிவர்த்தனைகள் ஆகியவை தேவைப்படும். இந்த கடன் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பானதாக இருக்கும் என்று டொயோட்டா தெரிவித்துள்ளது.
டொயோட்டா லிவா, எட்டியோஸ், க்ளான்ஸா, யாரிஸ் மற்றும் இன்னோவா ஆகிய கார்களுக்கு இந்த சிறப்பு கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை அருகிலுள்ள டொயோட்டா டீலர்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.