Just In
- 45 min ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 5 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 5 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 6 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
300 கார்களை நாசமாக்கிய பெங்களூர் பேரழிவு... பரிதவிக்கும் உரிமையாளர்களை நெகிழ வைத்த டொயோட்டா...
பெங்களூர் தீ விபத்து சம்பவத்தில், 300க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாயின. இதனால் பரிதவித்து கொண்டிருக்கும் கார் உரிமையாளர்களுக்கு, டொயோட்டா நிறுவனம் உடனடியாக உதவிக்கரம் நீட்டியுள்ளது.
பெங்களூர் எலகங்கா பகுதியில் உள்ள விமான படை தளத்தில், ஏரோ இந்தியா-2019 என்ற சர்வதேச ஏர் ஷோ மற்றும் விமான கண்காட்சி, கடந்த 20ம் தேதி தொடங்கியது. 5 நாள் நிகழ்ச்சியான இது நேற்றுடன் (பிப்ரவரி 24) நிறைவடைந்தது.
இதில், நூற்றுக்கணக்கான விமானங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் ரபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி, பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தன. இந்த சூழலில் 4ம் நாள் நிகழ்ச்சிகள், நேற்று முன் தினம் (பிப்ரவரி 23) நடைபெற்று கொண்டிருந்தன.
சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அங்கு குழுமியிருந்தனர். இதனால் பார்க்கிங் ஏரியாவில் வாகனங்கள் நிரம்பி வழிந்தன. ஆனால் துரதிருஷ்டவசமாக திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 300 கார்கள் எரிந்து நாசமாயின.
மதியம் சரியாக 12.17 மணியளவில் தீ விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூர் கண்ட மிக மோசமான தீ விபத்து சம்பவங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. ஹாலிவுட் பட பாணியில் கார்கள் பற்றி எரியும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது. அதனை நீங்கள் கீழே காணலாம்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இருந்தபோதும் தீ விபத்தில் கார்களை பறிகொடுத்த அதன் உரிமையாளர்கள் பலர் என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கி போய் நின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், டொயோட்டா நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்டியுள்ளது. பெங்களூர் ஏரோ இந்தியா நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்ய டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளது.
பெங்களூர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட டொயோட்டா வாடிக்கையாளர்கள், 180042500001 அல்லது 08066293001 என்ற ஹெல்ப்லைன் எண்கள் மூலம், டொயோட்டா நிறுவனத்தின் வாடிக்கையாளர் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
அத்துடன் தனது இன்சூரன்ஸ் பிரிவு மூலமாக, நேற்று காலை 8.30 மணி முதல் (பிப்ரவரி 24), சம்பவ இடத்தில் ஆன்-சைட் அஸிஸ்டன்ஸ் (On-site Assistance) சேவையையும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் வழங்கியது.
இதுதவிர இன்சூரன்ஸ் ஆய்வு மற்றும் சிறப்பு டோவிங் உதவி (Special Towing Assistance) உள்ளிட்ட ஒருங்கிணைப்பு பணிகளுக்காக, சம்பந்தப்பட்ட பெங்களூர் டீலர்களின் வாடிக்கையாளர் தொடர்பு அமைப்புகளுடனான கான்ஃபரன்ஸ் காலுக்கும் (Conference Call) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் இந்த உடனடி நடவடிக்கைகளுக்கு, பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் என்பது ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது டொயோட்டா நிறுவன வாடிக்கையாளர்கள் அனைவரும் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு எப்படி சேவையாற்றுகிறோம்? என்பதில்தான் ஒரு கார் நிறுவனத்தின் வெற்றியே அடங்கியுள்ளது.
கார்களை வாடிக்கையாளர்களின் தலையில் கட்டி, பணத்தை வாங்கி கல்லா பெட்டியில் போடுவதுடன் மட்டும் ஒரு நிறுவனத்தின் பணி முடிந்து விடுவதில்லை. விற்பனைக்கு பிந்தைய சேவையையும் வாடிக்கையாளர்களுக்கு முறையாக வழங்க வேண்டும்.
அதனை டொயோட்டா நிறுவனம் சிறு பிழையும் இன்றி கனகச்சிதமாக செய்து கொண்டுள்ளது. இதன் காரணமாகதான் டொயோட்டா நிறுவனத்தால் உலகம் முழுக்க வெற்றி கொடி நாட்ட முடிகிறது.
இதனிடையே பெங்களூர் தீ விபத்து சம்பவத்திற்கு உறுதியான காரணம் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. அணைக்காமல் வீசப்பட்ட சிகரெட் துண்டு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இது தீவிரவாதிகளின் நாசவேலையாக இருக்க கூடுமோ? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே வாகனங்களை நிறுத்துவதற்கு முறையான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!