Just In
- 1 hr ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 6 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 6 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 7 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நடப்பாண்டில் 2வது முறையாக இதை செய்யும் டொயோட்டா... வாடிக்கையாளர்கள் வருந்த காரணம் இதுதான்...
நடப்பாண்டில் 2வது முறையாக டொயோட்டா நிறுவன கார்களின் விலை உயர்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் கார்கள் உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்குகின்றன. டொயோட்டா நிறுவன கார்களின் விலை சற்று அதிகம் என்றாலும் கூட, அவை விற்பனையில் சக்கை போடு போடுகின்றன. டொயோட்டா நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் நம்பிக்கை, அந்நிறுவன கார்களில் காணப்படும் தரம் ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்கள்.
அதாவது டொயோட்டா நிறுவனத்தின் தயாரிப்புகள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்தவையாக திகழ்கின்றன. தற்போதைய நிலையில் இந்தியாவில் விற்பனையாகும் இன்னோவா கிரிஸ்டா எம்பிவி, பார்ச்சூனர் எஸ்யூவி ஆகிய டொயோட்டா நிறுவன கார்களுக்கு இங்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
இந்த சூழலில் தற்போது இந்தியாவில் விற்பனையாகி கொண்டிருக்கும் ஒரு சில டொயோட்டா கார்களின் விலை விரைவில் அதிகரிக்கவுள்ளது. சில மாடல்களின் விலையை உயர்த்த போவதாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. ஆனால் எந்ததெந்த மாடல்களின் விலை உயரப்போகிறது? விலை எவ்வளவு அதிகரிக்கவுள்ளது? என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னும் உறுதியான விடை கிடைக்கவில்லை. எனினும் 1-2 சதவீதம் வரை மட்டுமே விலை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டில் இரண்டாவது முறையாக டொயோட்டா நிறுவன கார்களின் விலை உயர்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம், சில ஹை-எண்ட் தயாரிப்புகளின் விலையை டொயோட்டா நிறுவனம் 4 சதவீதம் வரை உயர்த்தியது. உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாகவே தற்போது டொயோட்டா நிறுவனம் மீண்டும் விலையை உயர்த்துகிறது.
இதனிடையே இந்திய மார்க்கெட்டில் பிரீமியம் எம்பிவி ரக கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வது தொடர்பாக டொயோட்டா நிறுவனம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நடைபெற்றால், அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு உள்ளாக, 2 ஹை எண்ட் எம்பிவி ரக கார்களை டொயோட்டா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?