Just In
- 1 hr ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 8 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 8 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 11 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Sports சாஹலின் மனைவியா இது? நீச்சல் குளத்தில் நண்பருடன் ஜாலி குளியல்.. கோபத்தில் ரசிகர்கள்.. உண்மை என்ன?
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உச்சகட்ட அபராதத்தை பெற்ற லாரி உரிமையாளர்... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!
பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி டெல்லி போலீஸார் லாரி உரிமையாளருக்கு மிக மிக அதிகளவிலான அபராத தொகையை விதித்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
நாடு முழுவதும் மிகப்பெரியளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டம். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது இதன்மூலம் விதிக்கப்படும் உச்சபட்ச அபரதம்தான்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த புதிய அபராத திட்டத்தை கடந்த 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்குக் கொண்டுவந்தது.
இது அறிமுகமமான அன்றிலிருந்து தற்போது வரை நாடே பெரும் பரபரப்பாகவே காணப்படுகின்றது. இதனை உறுதி செய்யும்வகையில், அண்மைக் காலங்களாக வெளிவந்த அபராதம்குறித்த செய்திகள் இருக்கின்றன.
அந்தவகையில், சமீபத்தில் லாரி ஓட்டுநர் ஒருவருக்கு நாட்டிலேயே அதிகபட்ச அபராதமாக ரூ. 86,500 வழங்கப்பட்டிருந்தது. இத்தகைய உச்சபட்ச அபராதத்தை வழங்க போலீஸார் சில காரணங்களை கூறினர்.
அவை, தொடர்பில்லாத நபரை வாகனத்தை இயக்க வைத்தது (ரூ.5 ஆயிரம்). லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது (ரூ.5 ஆயிரம்). அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் எடையில் சரக்கு ஏற்றியது (ரூ.56 ஆயிரம்). சரக்கை ஒழுங்கற்ற வடிவில் வாகனத்தில் ஏற்றி ஆபத்தான முறையில் எடுத்துச் சென்றது (ரூ.20 ஆயிரம்). பொது விதிமீறல் (ரூ.500). உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களின் காரணமாக லாரியின் உரிமையாளருக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 86,500-க்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டது.
இச்சம்பவம், ஒடிசா மாநித்தில் உள்ள சாம்பல்பூர் என்ற அரங்கேறியிருந்தது. இத்தகைய அபராதத்தை அசோக் ஜாதவ் என்ற இளைஞருக்கு அப்பகுதி வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் விதித்திருந்தனர்.
ஆனால், இதில் வெறும் 70 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. மீத தொகைப் பற்றிய தகவல் வெளியாகவில்லை.
இந்த அதீத அபராதத்தினால் அசோக் ஜாதவ் மிகவும் ஸ்பெஷலான நபராக காணப்பட்டார். ஏனென்றால், அதுவரை இந்தளவிற்கான அபராதத்தை யாரும் பெறவில்லை. ஆகையால், நாட்டின் முதல் அதிகபட்ச அபராதத்தைப் பெற்றவராக அவர் மாறினார்.
இந்நிலையில், அதிகபட்ச அபராதத்தைப் பெற்றதில் அசோக் ஜாதவையே தோற்கடிக்கும் வகையில் ஓர் சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது.
பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்ட டிரக்கின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அந்தவகையில், அதிகபட்ச லோடை ஏற்றிவந்த குற்றத்திற்காக ரூ. 20 ஆயிரமும், அனுமதிக்கப்பட்டதை விட 18 டன் எடையுள்ள கூடுதல் பொருட்களை ஏற்றி வந்ததற்காக ரூ. 36 ஆயிரமும் அந்த லாரிக்கு விதிக்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு டன்னிற்கும் ரூ. 2 ஆயிரம் என்ற அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், ஓட்டுநர் உரிமம் இல்லாதது, பியூசி சான்று இல்லாதது, பெர்மிட் முறைகேடு, காப்பீடு இல்லாதது மற்றும் சீட் பெல்ட் அணியவில்லை உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாக கூறி லாரியின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளருக்கு அபராத செல்லாண் வழங்கப்பட்டுள்ளது.
இவையனைத்திற்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ரூ. 2 லட்சத்து 500-க்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்திற்கான தொகையை ரோஹினி நீதிமன்ற வளாகத்தில் கட்டும்படி டிரக்கின் உரிமையாளருக்கு கூறப்பட்டுள்ளது.
இந்த டிரக் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ராம் கிஷான் என்பவருக்கு சொந்தமானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், போக்குவரத்துத் துறையின் அமலாக்க குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட வாகன தணிக்கையின்போதே டிரக்கின் விதிமீறல்கள்குறித்த தகவல் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது.
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!