Just In
- 2 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 2 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 3 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 4 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எஞ்சினில் தீப்பிடிக்கும் வாய்ப்பு... கார்களை திரும்ப அழைக்கும் வால்வோ!
எஞ்சினில் தீப்பிடிக்கும் வாய்ப்பு இருப்பதையடுத்து, வால்வோ சொகுசு கார்களுக்கு இந்தியாவில் ரீகால் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
உலகின் மிகவும் பாதுகாப்பான கார்களை தயாரிக்கும் நிறுவனம் என்ற பெருமையை வால்வோ பெற்றிருக்கிறது. இந்த நிலையில், குறிப்பிட்ட இடைவெளியில் தயாரிக்கப்பட்ட வால்வோ டீசல் கார்களில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வால்வோ நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட எஸ்60, எஸ்80, வி40, வி70, வி90, எக்ஸ்சி60 மற்றும் எக்ஸ்சி90 ஆகிய கார்களின் எஞ்சின் பகுதியில் உள்ள குறைபாட்டால் தீப்பிடிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
எஞ்சினின் இன்டேக் பகுதியில் இருக்கும் பிளாஸ்டிக் பாகம் அதிக சூடாகும்போது உருகி, தீப்பிடிக்கும் வாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது அரிதாக நிகழும் என்றாலும், முன்னெச்சரிக்கையாக அதனை சரிசெய்து தருவதற்கு வால்வோ முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, கார்களில் உள்ள பிரச்னையை ஆய்வு செய்து சரிசெய்வதற்காக திரும்ப அழைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019 வரை உற்பத்தி செய்யப்பட்ட 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களை வால்வோ திரும்ப அழைக்க இருக்கிறது.
உலக அளவில் 5.07 லட்சம் கார்களை வால்வோ நிறுவனம் திரும்ப அழைக்க இருக்கிறது. இந்தியாவில் 3,000 கார்களை திரும்ப அழைத்து ஆய்வு நடத்த இருக்கிறது வால்வோ கார் நிறுவனம். இதுதொடர்பாக, வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்ப உள்ளது வால்வோ.
காரின் எஞ்சின் பகுதியிலிருந்து வித்தியாசமான வாடை எதுவும் வந்தால் உடனடியாக காரை சர்வீஸ் மையத்திற்கு கொண்டு வருமாறும் கேட்டுக் கொள்ள இருப்பதாக வால்வோ கூறி இருக்கிறது. வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள சர்வீஸ் மையத்தை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!