Just In
- 2 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 2 hrs ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 3 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 4 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
Don't Miss!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- News விவசாயிகளுக்கு நல்ல சேதி.. பயிர்க்கடன் தேவை? "அடங்கல்" இருக்கா? கூட்டுறவு வங்கிகளில் சூப்பர் மாற்றம்
- Movies Baakiyalakshmi: ஐயய்யோ.. கர்ப்பமா.. ஏன் இப்படி பண்ணினே.. ராதிகாவிடம் கோபி கேட்ட கேள்வி!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கார் கலரை மாற்றி வாடிக்கையாளரின் தலையில் மிளகாய் அரைத்த டீலர்... இப்படியும் கூட ஏமாற்றுகிறார்கள்...
கார் கலரை மாற்றி வாடிக்கையாளரை ஏமாற்றியவர்களுக்கு தக்க தண்டனை கிடைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் (Renault) நிறுவனம் இந்தியாவில் பல்வேறு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதில், க்விட் (Renault Kwid) மற்றும் டஸ்டர் (Renault Duster) ஆகிய இரண்டு கார்கள் மட்டுமே விற்பனையில் ஓரளவிற்காவது சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
இதில், ரெனால்ட் டஸ்டர் எஸ்யூவி ரக கார் ஆகும். இந்த சூழலில், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் உள்ள ஒயிட்பீல்டு பகுதியில் செயல்பட்டு வரும் ரெனால்ட் டீலர்ஷிப் ஒன்றில், கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதியன்று, வாடிக்கையாளர் ஒருவர் டஸ்டர் காரை புக்கிங் செய்தார்.
அன்றைய தினம் முன்பதிவு தொகையை செலுத்திய அவர், பச்சை நிற டஸ்டர் கார் வேண்டும் என டீலரிடம் கூறியிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட டீலர்ஷிப் நிர்வாகம், 2017ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதியன்று பச்சை நிற ரெனால்ட் கார் டெலிவரி செய்யப்பட்டு விடும் என உறுதியளித்திருந்தது.
இதனை முழுமையாக நம்பிய அந்த வாடிக்கையாளர் தன்னிடம் இருந்த வாகனத்தை விற்பனை செய்து விட்டார். டீலர்ஷிப் நிர்வாகம் உறுதியாக கூறியதால், தனக்கு விருப்பமான பச்சை நிற ரெனால்ட் கார், குறித்த தேதியில் கிடைத்து விடும் என அந்த வாடிக்கையாளர் எதிர்பார்த்தார்.
இந்த நம்பிக்கையில்தான் ஏற்கனவே வைத்திருந்த வாகனத்தை அவர் விற்பனை செய்தார். 2017ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதியன்று அவரது பழைய வாகனம் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் மறுநாள் அந்த வாடிக்கையாளரை, டீலர்ஷிப் பணியாளர்கள் தொடர்பு கொண்டனர்.
அப்போது பச்சை நிற டஸ்டர் கார் வேறு ஒரு வாடிக்கையாளருக்கு விற்பனை செய்யப்பட்டு விட்டதாகவும், எனவே புதிய பச்சை வண்ண டஸ்டர் காருக்கு நீங்கள் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும் எனவும் அந்த வாடிக்கையாளர்களிடம் அவர்கள் தெரிவித்தனர்.
அல்லது வேறு வண்ணத்தில் வேண்டுமானால் உடனே டெலிவரி எடுத்து கொள்ளலாம் எனவும் டீலர்ஷிப் தரப்பில் கூறப்பட்டது. அந்த சமயத்தில் அவசர தேவை இருந்ததால், தனக்கு விருப்பம் இல்லாத நிறத்தில், டஸ்டர் காரை டெலிவரி எடுத்து கொள்ள அவர் ஒப்புக்கொண்டார்.
அப்படியான ஒரு சூழ்நிலைக்கு அவர் ஆளாக்கப்பட்டார் என்றும் கூட சொல்லலாம். இதன்பின் வேண்டா வெறுப்பாக ஆரஞ்ச் வண்ண டஸ்டர் காரை அவர் டெலிவரி எடுத்தார். இருந்தபோதும் டெலிவரி எடுத்த பின்பாக, ரெனால்ட் நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வாடிக்கையாளர் தொடர்ந்து வழக்கில் தீர விசாரணை நடத்திய நுகர்வோர் நீதிமன்றம், கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதியன்று தனது தீர்ப்பினை வழங்கியது. வழக்கு தொடர்ந்து வாடிக்கையாளருக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.
இதன்படி ஆரஞ்சு வண்ண டஸ்டர் காருக்கு பதிலாக பச்சை நிற டஸ்டர் காரை மாற்றி வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 10 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவுகளுக்காக 5 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஆரஞ்ச் டஸ்டர் காரின் இன்சூரன்ஸ், சாலை வரி, பதிவு வரி, ஸ்டாண்டர்டு ஆக்ஸஸரீஸ் மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி உள்ளிட்ட பேக்கேஜ்களை, பச்சை காரின் பேக்கேஜ்களுடன் மாற்றி தர வேண்டும் எனவும் நுகர்வோர் நீதிமன்றத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட சேவையில், ரெனால்ட் தரப்பில் குறைபாடு இருப்பதாக நுகர்வோர் நீதிமன்றம் கருதியுள்ளது. எனவேதான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 60 நாட்களுக்கு உள்ளாக இந்த உத்தரவிற்கு இணங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டீம் பிஎச்பி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
Note: Images used are for representational purpose only.
பொதுவாக காரை உங்கள் தலையில் கட்ட டீலர்கள் பல்வேறு பொய்களை சொல்வார்கள்.கார் மார்க்கெட்டில் அதிகரித்துள்ள போட்டியை சமாளிக்க வாடிக்கையாளர்களை மதி மயக்கும் வித்தைகள் டீலர்களில் இருக்கும் விற்பனையாளர்களுக்கு கைவந்த கலை.
ஓடாத காரை ஓட்டுவதற்கும், இல்லாத பொய்களை சொல்லி தலையில் கட்டுவதிலுமே பல டீலர்களில் உள்ள விற்பனை பிரதிநிதிகள் குறியாக இருப்பதை காண முடிகிறது. அதிலும் குறிப்பாக, மாதக் கடைசியில் விற்பனை இலக்கை கடப்பதற்காக கூடுதல் பொய்களும் வந்து விழுவதுண்டு.
கார் ஷோரூம்களுக்கு செல்லும்போது அதிகம் விற்பனையாகும் கார்களுக்கு டீலர்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அதற்கு நேர்மாறாக ஓடாத கார்களை தள்ளுவதிலேயே குறியாக இருப்பர்.
அந்த கார்களை பற்றி டீலர் பிரதிநிகள் அளப்பதை நம்பி ஏமாந்து போகும் வாடிக்கையாளர்கள் ஏராளம். எனவே, கார் வாங்கும்போது டீலர்களில் எச்சரிக்கையாக இருப்பதற்காக பின்வரும் ஸ்லைடர்களில் சில விஷயங்களை கொடுத்துள்ளோம். இவை உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.
விலையேறப்போவுது...
ஆண்டில் இரண்டு அல்லது மூன்று முறை கார் விலை உயர்த்தப்பட்டு வருவது உண்மைதான். ஆனால், சில சமயம் ஷோரூம்களில் அமர்ந்து விலை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களை திசை திருப்புவதற்காக, கார் விலை விரைவில் உயரப் போகிறது என்ற பிட்டை போடுவர்.
எனவே, உடனடியாக முன்பதிவு செய்து கொள்வது நல்லது என்று பீதியை கிளப்பும் சம்பவங்களும் நடந்து வருகிறது. விற்பனை பிரதிநிதி சொன்னதை நம்பி அவசரப்படாமல், உண்மையிலேயே விலை உயர்வு அமலுக்கு வர இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.
நீண்ட காத்திருப்பு காலம்...
சில ஷோரூம்களில் கார் வாங்கும் நோக்கத்தில் வாடிக்கையாளர்கள் இருப்பதை தெரிந்துகொண்டால், 2 வாரத்தில் காரை டெலிவிரி கொடுத்து விடுகிறோம் என்று கூறி ஏமாற்றுவதும் உண்டு. நீங்களும் கார் விரைவாக கிடைக்கப் போகிறது என்ற கற்பனையில் வீட்டிற்கு சென்றால், 2 வாரங்கள் அல்ல 4 வாரங்கள் கடந்தாலும், லோடு வந்து கொண்டிருக்கிறது என்று ஏதாவது ஒரு சமாளிப்பு பதில் கிடைக்கும். பல தடவை தொங்கிய பின்பு ஒரு வழியாக காரை டெலிவிரி தருவார்கள்.
அதுவும் வாடிக்கையாளர்களின் பின்புலத்தை அனுமானித்து டெலிவிரி கொடுப்பர். அதேவேளை, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் தற்போது ஆன்லைனில் முன்பதிவு மற்றும் டெலிவிரி டிராக்கிங் சிஸ்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது காத்திருப்பு நிலையை தெரிந்து கொள்ளும் வசதியை வழங்குகின்றன. ஆன்லைனில் பார்க்க முடியாதவர்கள் டீலர் பற்றி பிற வாடிக்கையாளர்கள் அல்லது நட்பு வட்டத்தில் ஒரு விசாரணை செய்து கொள்வது நலம்.
ஆக்சஸெரீஸ்கள் கட்டாயமா?
டீலர்களுக்கு அதிக வருவாய் ஈட்டித் தருவதில் ஆக்சஸெரீஸ்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, பல டீலர்களில் கூடுதல் ஆக்சஸெரீஸ்களை இன்வாய்ஸில் இணைத்து விற்பனை செய்கின்றனர். சில டீலர்களில் வெளியில் ஆக்சஸெரீஸ் வாங்கி பொருத்தினால் வாரண்டி கிடைக்காது என்று பயமுறுத்தி தங்களது ஆக்சஸெரீஸ்களை விற்கின்றனர்.
குறிப்பாக, ஸ்கஃப் பிளேட், மிதியடிகள் உள்ளிட்டவை வெளி மார்க்கெட்டில் மிகக் குறைந்த விலையில் ஏராளமாக கிடைக்கின்றன. இதேபோன்று, மியூசிக் சிஸ்டமும் அதிக விலை வைத்து விற்கப்படுகின்றன. ஆனால், வெளி மார்க்கெட்டில் நீங்கள் நினைத்ததை விட ஏராளமான மாடல்களில் மியூசிக் சிஸ்டம்களை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்புகள் இருக்கின்றன.
சூப்பர் இன்ஸ்யூரன்ஸ்
காருக்கு ஒருங்கிணைந்த காப்பீடு போட வேண்டியது அவசியம். பல டீலர்களில் இதுதான் சிறப்பான காப்பீட்டு திட்டம் என்று கூறி குறிப்பிட்ட நிறுவனத்தை பரிந்துரை செய்வது வழக்கம்.
இதுபோன்று பரிந்துரை செய்யப்படும் காப்பீட்டு திட்டங்களின் பின்னணியில், இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் கார் டீலர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு கூடுதல் பிரிமியத்துடன் கூடிய காப்பீட்டு திட்டங்களை நம் தலையில் கட்டுவதற்கு முனைகின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
மார்க்கெட்டில் இருக்கும் சிறந்த காப்பீட்டு திட்டங்களை தேர்வு செய்து கொள்வது அவசியம். இதேபோன்று, கடனுதவி தரும் நிறுவனங்களை தேர்வு செய்யும் போது விழிப்புடன் இருக்க வேண்டும்.
நீட்டிக்கப்பட்ட வாரண்டி
குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை கார்களுக்கு வாரண்டி கிடைக்கின்றன. இத்துடன் சேர்த்து நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டங்களை வாங்கிக் கொள்வது நல்லதுதான். இல்லையென்று கூறவில்லை. ஆனால், சில டீலர்களில் நீட்டிக்கப்பட்ட வாரண்டியை வாங்குவதற்கு காருடன் வாங்குவது போன்ற மாயை ஏற்படுத்துகின்றனர்.
ஆனால், கார் வாங்கும்போது நீட்டிக்கப்பட்ட வாரண்டியை வாங்குவது அவசியமில்லை என்பதே உண்மை. கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டு பின்னர் அவர்களிடம் பேரம் பேசி வாங்குவதற்கான வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ரீசேல் மதிப்பு
விற்பனையில் பின் தங்கி ஷோரூம்களில் நிற்கும் மாடல்களை இதற்கு அதிக ரீசேல் மதிப்பு இருக்கிறது என்று கூறி நம் தலையில் கட்டும் முயற்சிகளும் ஆங்காங்கே நடக்கின்றன. எனவே, அது உண்மைதானா என்று தெரிந்து கொண்டு வாங்குவதும் நலம்.
கலர் தேர்வு
சில குறிப்பிட்ட கார் கலருக்கு அதிக டிமான்ட் இருக்கும். சில கலர் கொண்ட கார்கள் டீலர்களில் இருப்பில் தேங்கி இருக்கும். எனவே, இருப்பில், தேங்கி இருக்கும் காரை தள்ளும் விதமாக, அதிக டிமான்ட் இருக்கும் கலர் அல்லது நீங்கள் விரும்பி கேட்கும் கலரை ஸ்டாக் இல்லை என்று கூறிவிடுவர்.
மேலும், தற்போது கிடைக்காது என்பதோடு, அதற்கு வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு காத்திருப்பு காலத்தை சொல்லிவிடுவர். அப்படியே, விற்பனை பிரதிநிதி சொல்லும் காரை வாங்கும்போது தயாரிப்பு தேதி உள்ளிட்டவற்றை சரிபார்த்து வாங்குவது நலம்.
தள்ளுபடி சலுகைகள்
பல டீலர்களில் தள்ளுபடி சலுகைகள் குறித்து விமரிசையாக விளம்பரம் செய்வதோடு, ஷோரூம்களிலும் விலாவரியாக சொல்வார்கள். ஆனால், இந்த சலுகைகளை வேறு விதத்தில் அட்ஜெஸ்ட் செய்வதும் உண்டு. எனவே, கார் வாங்கும்போது தள்ளுபடி சலுகைகள் விபரத்தை நன்கு தெரிந்துகொண்டு, ஏதேனும் உள்குத்தல் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம்.
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..