Just In
- 24 min ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 2 hrs ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 3 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
Don't Miss!
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
19 நாளே ஆன புதிய எம்ஜி ஹெக்டர்.. நடுரோட்டில் தீ பிடித்து நாசம்.. காரணம் தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க..!
மணிக்கு ஒரு முறை முட்டாள் அமைச்சர் என்பதை நிரூபித்திக் கொண்டிருக்கிறீர்கள் என வடிவேலு காமெடியில் கூறுவதைப் போன்று எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் எஸ்யூவி கார் அவ்வப்போது 'மேட் இன் சைனா' என்பதை நிரூபிக்கும் வகையில் பிரச்னைகளை வழங்கி வருகின்றது. ஆனால், தற்போது நடந்துள்ள இந்த சம்பவத்தில் ஒரு டுவிஸ்ட் இருக்கு. அது என்ன என்பதை கீழே காணலாம்.
இங்கிலாந்தைச் சேர்ந்த எம்ஜி நிறுவனம், இந்தியாவில் கால் தடம் பதித்ததையடுத்து முதல் காராக ஹெக்டர் எஸ்யூவி ரக மாடலை அறிமுகம் செய்தது. இந்நிறுவனம், இங்கிலாந்தை மையமாகக் கொண்டு இயங்கினாலும், அது ஓர் சீனரின் தயாரிப்பாகும்.
ஏனென்றால், இது சீனாவை சேர்ந்த செயிக் குழுமத்தின் கீழ் செயல்படுகிறது. செயிக் குழுமத்தால், சீனாவில் தயாரிக்கப்பட்ட பவ்ஜுன் 530 எஸ்யூவி கார்தான் தற்போது ஒரு சில மாற்றங்களுடன் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலாக எம்ஜி பிராண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு அறிமுகமான இந்த கார் இந்தியாவின் முதல் கனெக்டெட் என்ற சிறப்பந்தஸ்தைப் பெற்று களமிறங்கியது.
இது, இன்ஃபோடெயின்மென்ட் சாதனம்மூலம் நேரடி இணைய வசதியை வழங்கும். இதுமட்டுமின்றி, பயணிகளை என்டர்டெயின்மெண்ட் செய்யவும் இது உதவும்.
தொடர்ந்து, பிரிமியம் மற்றும் லக்சூரி வசதியிலும் பிரம்மிக்க வைக்கும் வகையில் இது காட்சியளிக்கின்றது. இதன்காரணமாகவே யாரும் எதிர்பாராத ஓர் டிமாண்டை இந்தியர்கள் இந்த கார் பெற்று வருகின்றது. இதுமட்டுமின்றி, குறைவான விலையில் விற்பனைக்கு கிடைப்பதும் ஓர் காரணமாக உள்ளது.
எனவே, இந்தியர்கள் இந்த காருக்கான சந்தையை சிவப்பு கம்பளம் விரித்து ஏற்படுத்திக் கொடுத்தனர். எனவே, இந்த காருக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் இமாலய அளவில் உயர தொடங்கியது.
இவ்வாறு, நினைத்துகூட பார்க்காத இலக்கை எட்டியதால், எம்ஜி நிறுவனம் இந்த காருக்கான உற்பத்தியை அதிகரிக்க தொடங்கியது. தொடர்ந்து, காத்திருப்பு காலத்தைக் குறைக்கும் விதமான பல்வேறு முயற்சிகளில் அது களமிறங்கியது.
இந்த சூழ்நிலையில், எம்ஜி ஹெக்டரின் புகழுக்கு கரும்புள்ளியை ஏற்படுத்தும் விதமாக ஒரு சில சம்பவங்கள் நிகழத் தொடங்கியுள்ளன.
அந்தவகையில், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரில் தொழில்நுட்பம் மற்றும் எஞ்ஜின் கோளாறுகள் ஏற்படுவது தொடர் கதையாகி வந்தது.
இந்நிலையில், தொடர் தீ பிடிப்பு சம்பவங்களும் அரங்கேறத் தொடங்கியுள்ளது. முன்னதாக, வாங்கிய சில நாட்களே ஆன எம்ஜி ஹெக்டர் காரின் மேற்கூரையில் இருந்து மழை நீர் ஒழுகுவதைப் போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகியது.
இதையடுத்து, எஞ்ஜின் செயல்படாத ஹெக்டரை அதன் உரிமையாளர் கழுதையை வைத்து இழுத்து செல்லும் காட்டூத் தீயாய் பரவியது.
இதையடுத்து, தற்போது நடு ரோட்டில் வாங்கி 19 நாட்களே ஆன புத்தம் புதிய கார் ஒன்று தீ பிடித்து எரிவதைப் போன்ற வீடியோக் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜி ஹெக்டர் கார் இவ்வாறு திடீரென தீப்பிடித்து எரிவது இதுதான் முதல் முறையா..? என்றால், இல்லை.
இதற்கு முன்பாகவும் நடு ரோட்டில் திடீரென எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி கார் தீ பிடித்து எரிந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த டிசம்பர் மாதம்தான் அரங்கேறியது. இது நடைபெற்று ஒரு மாதமே ஆன நிலையில் மீண்டும் ஒரு தீப்பிடிப்பு சம்பவத்தால் எம்ஜி நிறுவனத்திற்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, இந்த கார் மீது பல்வேறு முரண்பட்ட கருத்துகள் பரவ ஆரம்பித்திருக்கும் வேலையில், இந்த தீ விபத்து கூடுதல் கலங்கத்தை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது.
ஆனால், தற்போது ஹரியானாவில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம், ஹெக்டரின் உரிமையாளாராலேயே நிகழ்ந்துள்ளது.
இந்த புத்தம் புதிய ஹெக்டர் எஸ்யூவி கார் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞருக்குச் சொந்தமானதாகும்.
அவர், டீலர்கள் ஷோரூம் வாயிலாக கூடுதல் அக்ஸசெரீஸ்களை ஹெக்டரில் இணைத்துள்ளார். இதன் காரணத்தினாலேயே காரில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார். மேலும், எம்ஜி ஹெக்டர் காரில் எந்தவொரு கோளாறும் இல்லை என்பதையும் தெரியபடுத்தினார்.
இவற்றை கடிதம் வாயிலாக அவர் உறுதி செய்துள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த கடிதத்தை நீங்கள் கீழே காணலாம்.
மேலும், இந்த தீ விபத்தை அடுத்து எம்ஜி நிறுவனம் உடனடியாக தன்னைத் தொடர்புகொண்டு தக்க நடவடிக்கை எடுத்திருப்பதையும் அவர் அதே கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார். இதேபோன்ற நடவடிக்கையை, கழுதை முரண்பாட்டிலும் எம்ஜி நிறுவனம் மேற்கொண்டது குறிப்பிடத்தகுந்தது.
இதனால், புத்தம் புதிய ஹெக்டர் காரின் தீ விவகாரத்தில் நிலவி வந்த மாறுபட்ட கருத்துகளுக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து சம்பவம்குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார். தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், காரின் முன்பகுதி முழுவதுமாக எரிந்து நாசமாகியது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார். விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது தீ பற்றியிருப்பது ஹெக்டரின் பிஇ 1.5 டிசிடி ஷார்ப் வேரியண்ட். இது இந்த பிராண்டின் உயர்நிலை வேரியண்ட் ஆகும்.
ரூ. 13.48 லட்சம் என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும் இந்த கார் அதிகபட்சமாக 17.18 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.
எம்ஜி நிறுவனத்தின் இந்த ஹெக்டர் ஜம்பவான் நிறுவனத்தின் தயாரிப்பான டாடா ஹாரியருக்கு கடுமையான போட்டியைக் கொடுத்து வருகின்றது. இதுமட்டுமின்றி, ஜீப் காம்பஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட கார்களுக்கும் கடும் நெரக்கடியை எம்ஜி ஹெக்டர் கொடுத்து வருகின்றது.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350