சொன்ன நம்ப மாட்டீங்க..! கொரோனா பாதிப்பில் இருந்து புத்துணர்வுடன் மீளும் இந்தியா... எப்படி தெரியுமா?

கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டு வருவதை உறுதிச் செய்கின்ற வகையில் ஒரு சில சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கியிருக்கின்றன. வாருங்கள் அதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

சொன்ன நம்ப மாட்டீங்க..! கொரோனா பாதிப்பில் இருந்து புத்துணர்வுடன் மீளும் இந்தியா... எப்படி தெரியுமா..?

ஒற்றை உயிர் கொல்லி வைரஸ் கொரோனா, அதன் கோரப்பிடியால் உலக நாடுகள் அனைத்தையும் தற்போது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால், ஒவ்வொரு நாடும் அதன் மக்களை வைரஸ் தொற்றில் இருந்து காக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகின்றன.

சொன்ன நம்ப மாட்டீங்க..! கொரோனா பாதிப்பில் இருந்து புத்துணர்வுடன் மீளும் இந்தியா... எப்படி தெரியுமா..?

இதேமாதிரியான நிலைதான் தற்போது இந்தியாவிலும் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதனால், நாட்டில் எந்தவொரு துறையுமே இயங்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. குறிப்பாக, இந்திய ஆட்டோத்துறைச் சந்தித்து வரும் இழப்பு மற்றத்துறைகளைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கின்றது.

சொன்ன நம்ப மாட்டீங்க..! கொரோனா பாதிப்பில் இருந்து புத்துணர்வுடன் மீளும் இந்தியா... எப்படி தெரியுமா..?

இதன்காரணமாகவே, மூன்றாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட தேசியளவிலான ஊரடங்கு உத்தரவின்போது ஆட்டோமொபைல்ஸ் துறைக்கு லேசான தளர்வுகள் வழங்கப்பட்டன.

இதன்படி, வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மீண்டும் இயக்க நிலைக்கு திரும்பின.

சொன்ன நம்ப மாட்டீங்க..! கொரோனா பாதிப்பில் இருந்து புத்துணர்வுடன் மீளும் இந்தியா... எப்படி தெரியுமா..?

இதன் ஒரு பங்காக முன்னதாக புக்கிங் செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு டீலர்கள் புதிய வாகனங்களை டெலிவரி வழங்கத் தொடங்கியிருக்கின்றனர். அதாவது, ஏறத்தாழ சுமார் 50 நாட்களுக்கு பின்னர் வாகனங்களை டீலர்கள் டெலிவரி கொடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். சில நாட்கள் வரை ஒரு வாகனம்கூட விற்பனைச் செய்யப்படாத நிலையே காணப்பட்டுவந்த வேலையில் தற்போது மீண்டும் புத்துயிருடன் வாகன விற்பனைத் தொடங்கியிருக்கின்றது.

சொன்ன நம்ப மாட்டீங்க..! கொரோனா பாதிப்பில் இருந்து புத்துணர்வுடன் மீளும் இந்தியா... எப்படி தெரியுமா..?

இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிடிபி-யில் ஆட்டோத்துறை பங்களிப்பு பாதிக்கு பாதி என்ற விகிதத்தில் உள்ளது. கடந்த காலங்களில் இந்தத்துறை பெற்ற நலிவு இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பதம் பார்க்க ஆரம்பித்தது. இதனைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு வாகன சார்ந்து இயங்கும் நிறுவனங்களுக்கும் மட்டும் லேசான தளர்வை வழங்கியது. ஆனால், பொது போக்குவரத்துத்துறைக்காக எந்தவொரு திட்டமும் வகுக்கப்படவில்லை.

சொன்ன நம்ப மாட்டீங்க..! கொரோனா பாதிப்பில் இருந்து புத்துணர்வுடன் மீளும் இந்தியா... எப்படி தெரியுமா..?

அதேசமயம், கொரோனா வைரஸ் காரணமாக நாட்டின் உற்பத்தி மட்டுமின்றி கொள்முதல் அளவும் மிகக் கடுமையான சரிவைச் சந்தித்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையைத் அடுத்தே டி.வி.எஸ் மோட்டார், ராயல் என்ஃபீல்ட் மற்றும் பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனங்கள் அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்கீழ் சரியான பாதுகாப்பு மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுடன் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளன.

சொன்ன நம்ப மாட்டீங்க..! கொரோனா பாதிப்பில் இருந்து புத்துணர்வுடன் மீளும் இந்தியா... எப்படி தெரியுமா..?

மாருதி சுசுகி வருகின்ற மே 12 ஆம் தேதி மானேசரில் தனது உற்பத்தி பணியை மீண்டும் தொடங்க இருக்கின்றது. மேலும், இது சமீபத்தில் இந்தியா முழுவதும் உள்ள டீலர்களுக்கு கொரோனா வைரஸால் ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் எவ்வாறு பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என்ற வழிகாட்டுதலையும் வழங்கியது.

சொன்ன நம்ப மாட்டீங்க..! கொரோனா பாதிப்பில் இருந்து புத்துணர்வுடன் மீளும் இந்தியா... எப்படி தெரியுமா..?

தொடர்ந்து, இதற்காக தனிக்குழு ஒன்றையும் மாருதி உருவாக்கியுள்ளது. அது, அக்குழு ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்கின்ற பணியை மேற்கொள்ளும். இதுபோன்றதொரு நடவடிக்கையில்தான் மற்ற நிறுவனங்களும் மேற்கொள்ள இருக்கின்றன.

சொன்ன நம்ப மாட்டீங்க..! கொரோனா பாதிப்பில் இருந்து புத்துணர்வுடன் மீளும் இந்தியா... எப்படி தெரியுமா..?

மாருதி சுசுகி மட்டுமின்றி நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் நிறுவனமும் புதிய கார்களை டெலிவரி செய்தல் மற்றும் புக்கிங்குகளைப் பெறுதல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றது. இது புக்கிங்கை தொடங்கிய வெறும் இரண்டே நாட்களில் 4,000க்கும் அதிகமானோர் புதிய கார்கள் குறித்த விசாரணையைச் செய்துள்ளனர். மேலும், 200க்கும் அதிகமான புதிய கார்களை அது டெலிவரி செய்துள்ளது.

சொன்ன நம்ப மாட்டீங்க..! கொரோனா பாதிப்பில் இருந்து புத்துணர்வுடன் மீளும் இந்தியா... எப்படி தெரியுமா..?

இந்த நிலையைதான் இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் மற்ற வாகன உற்பத்தி நிறுவனங்களும் பெறத் தொடங்கியிருக்கின்றன. அரசு கட்டுப்பாடுகளை லேசாக தளர்த்தியிருப்பதால் அடுத்த பத்து நாட்களுக்குள் பாதியளவு பணியாட்களுடன் மேலும் பல டீலர்கள் வாகன விற்பனை களத்தில் இறங்க இருக்கின்றனர். இதற்கான அனுமதி பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகிய கொரோனா பாதிப்புகளின் அடிப்படையில் அந்தந்த மாநில அரசுகள் அனுமதி வழங்கி வருகின்றன.

சொன்ன நம்ப மாட்டீங்க..! கொரோனா பாதிப்பில் இருந்து புத்துணர்வுடன் மீளும் இந்தியா... எப்படி தெரியுமா..?

அதே நேரத்தில் ஃபோர்டு இந்தியா 100 க்கும் மேற்பட்ட டச் பாயிண்டுகளைத் தற்போது இந்தியாவில் திறந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்தியாவில் மீண்டும் இயல்பு நிலை திரும்ப ஆரம்பித்திருப்பது வாகன நிறுவனங்களின்மூலம் தெரியவந்துள்ளது. இதுகூடிய விரைவில் மக்களை பழைய நிலைக்கேக் கொண்டுவந்துவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Across India Auto Industry Restart After More Than 45 Days. Read In Tamil.
Story first published: Sunday, May 10, 2020, 15:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X