தலையை பந்துபோல் தாங்கும்! இதுதான் உலகின் முதல் அதிக பாதுகாப்பு நிறைந்த முன்னிருக்கை ஏர் பேக்!
முன்னிருக்கையில் அமர்பவருக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் வகையில் ஓர் பேக் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

நாம் அறியாத வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல உலக நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அம்மாதிரியான ஓர் வாகன உற்பத்தி நிறுவனம்தான் அகுரா (Acura). ஆனால், இது உலக நாடுகள் பலவற்றிற்கு பரீட்சையமான நிறுவனமாக இருந்து வருகின்றது. ஏனென்றால் பிரபல ஹோண்டா மோட்டார் நிறுவனத்தின் தாய் நிறுவனம் இதுவே ஆகும்.

ஆகையால் ஹோண்டாவைப் போலவே அகுரா-வும் ஜப்பான், டோக்யோவை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது. இது அகுரா பிராண்டைக் கொண்டே லக்சூரி ரக வாகனங்களை உற்பத்திச் செய்து வருகின்றது. மேலும், அதனை உலக நாடுகள் பலவற்றிலும் விற்பனைக்கும் களமிறக்கி வருகின்றது.

இந்நிலையில், அகுரா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களின் உயிருக்கு அதிக பாதுகாப்பை அளிக்கும் விதமாக அதிநவீன ஏர்பேக் ஒன்றை உருவாக்கியுள்ளது. இது, முன் இருக்கைக்காக தயாரிக்கப்பட்ட பித்யேக ஏர் பேக்காகும்.

எதிர்பாராத அசம்பாவிதங்களில் காரின் முன்னிருக்கையில் அமர்பவர்களுக்கு அதிகப்படியான அச்சுறுத்தும் காணப்படுகின்றது. இதை நீக்கும் வகையிலேயே காரின் முன்னிருக்கைக்கான தனித்துவமான ஏர் பேக்கை அகுரா தயாரித்துள்ளது.

உலகிலேயே காரின் முன்னிருக்கைக்காக இதுபோன்ற தனித்துவமான வடிவமைப்பில் ஏர்பேக் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த புத்தம் புதிய அதிக பாதுகாப்பு நிறைந்த ஏர்பேக்குகளை 2021 டிஎல்எக்ஸ் ஸ்போர்ட் செடான் மாடலில் பயன்படுத்தப்பட இருப்பதாக அது தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஏர்பேக்குகள் எதிர்கால ஹோண்டா நிறுவனத்தின் உயர்நிலை (விலையுயர்ந்த) கார்களிலும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதேசமயம், இந்த ஏர்பேக்கை உருவாக்கியதில் ஹோண்டாவின் ஆர்&டி அமெரிக்கா மற்றும் ஆட்டோலிப் (வாகனம் சார்ந்த பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனம்) ஆகிய நிறுவனங்களின் பங்கு அதிகளவில் காணப்படுகின்றது.

இந்த அதிக பாதுகாப்பு நிறைந்த ஏர் பேக்குகள் பிற வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் விற்பனைச் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுகுறிப்பாக, முன் பக்க பயணிகளின் தலை மற்றும் கழுத்து பகுதிக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மார்பக பகுதிக்கும் அந்த ஏர் பேக் பாதுகாப்பை வழங்கும். குறிப்பாக, எதிர்பாராத அசம்பாவிதங்கள் காரணமாக முன்னிருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் எளிதில் பாதிப்படைய நேரிடுகின்றது. அது, பல நேரங்களில் அவர்களை மூலைச் சாவு உள்ளிட்ட கடுமையான நிலைக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றது. இதுபோன்ற கசப்பான அனுபவங்களை நிச்சயம் இந்த ஏர் பேக் நீக்கும் என அகுரா உறுதியளிக்கின்றது.

கார்களில் இருக்கும் முக்கியமான பாதுகாப்பு அம்சங்களில் ஏர் பேக்கும் ஒன்று. இது, எதிர்பாராத அசம்பாவிதங்களில் இருந்து சிறு காயம்கூட ஏற்படாமல் காக்க உதவும். எனவேதான் புதிய வாகனங்களில் குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதிச் செய்யும் விதமாக கட்டாயம் ஏர் பேக்குகள் இருக்க வேண்டும் என்பதை இந்திய ஆட்டோமொபல்ஸ்துறை உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

அவ்வாறு தற்போது வழங்கப்படும் ஏர் பேக்குகளைக் காட்டிலும் அதிக பாதுகாப்பு நிறைந்ததாக அகுரா நிறுவனத்தின் புதிய ஏர் பேக் இருக்கும் என கூறப்படுகின்றது. இந்த ஏர்பேக் மட்டுமின்றி அது முதன் முதலில் அறிமுகமாக இருக்கும் டிஎல்எக்ஸ் மடால் காரும் அதிக பாதுகாப்பு நிறைந்ததாக உருவாகிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செயல்பாடு:
இந்த ஏர் பேக்கில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?, எப்படி வேலை செய்யும் என்ற பல சந்தேகங்கள் உங்களுக்கு எழந்திருக்கலாம். குறிப்பாக, இந்த ஏர் பேக் கால் பந்தாட்டத்தில் கோல் கீப்பர் அணிந்திருக்கும் கையுறைப் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கின்று. இது, எதிர்பாராத அசம்பாவிதங்கள் தானாக விரிந்து முன்னிருக்கை பயணியன் தலையை ஓர் பந்து போந்து தாங்கிப்பிடிக்கும்.

இதில் நாம் கவனிக்க வேண்டியது, கோல் கீப்பரின் கையுறைகூட பந்தைத் தவறவிடலாம். ஆனால், இந்த ஏர் பேக் எந்தவொரு நொடியிலும் பயணியின் தலையை தாங்கிப்பிடிக்க தவறாது. இதுதான் இந்த ஏர் பேக்கின் மிகச் சிறந்த செயல்பாடாக உள்ளது.
இதற்காக மூன்று கம்பார்ட்மெண்ட் போன்ற அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதவாது பெரிய வடிவ 'ப' தோற்றத்தில் அது இருக்கும். இதன் உட்பகுதி பயணியின் முகத்தையும், மற்ற இரு சுவர் புறங்களும் தலையையும் தாங்கிப் பிடிக்கும். குறிப்பாக எதிலும் மோதிவிடாத வண்ணம் அது தாங்கிபிடிக்கும்.

இந்த புத்தம் புதிய அதிக பாதுகாப்பு நிறைந்த ஏர் பேக்குடன் கால் முட்டிகளுக்கான ஏர் பேக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் 2021 டிஎல்எக்ஸ் லக்சூரி காரிலேயே முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது கார் மற்றும் மூட்டு பகுதிக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவும், காரின் முன்பக்க பயணிக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் நிலை நிறுத்தப்பட இருக்கின்றது.


Click it and Unblock the Notifications