Just In
- 49 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 55 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- News "டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி?" கவர்னர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஆம் ஆத்மி பதிலடி.. சட்டம் சொல்வது என்ன
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கலக்குங்க... ஜெர்மனி அரசின் சூப்பர் மூவ்... மக்கள் இனி தன்னால எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவாங்க...
மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டும் என்பதற்காக ஜெர்மனி அரசு சூப்பரான நடவடிக்கையை எடுத்துள்ளது.
பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து இந்த உலகம் வெகு வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகிறது. பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் சுற்றுச்சூழலை பாதிக்கின்றன. உலகின் காற்று மாசுபாடு பிரச்னைக்கு, பெட்ரோல், டீசல் வாகனங்கள் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றன.
அத்துடன் பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக உலக நாடுகள் பெரும் தொகையை செலவிட வேண்டியுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது. இதனால் இந்த இரு பிரச்னைகளுக்கும் முடிவு கட்டும் விதமாக, எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை உலக நாடுகள் அதிகரித்து வருகின்றன.
ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் வாங்குவதில் பல்வேறு தடைகள் இருந்து வருகின்றன. முதலாவது விலை. பெட்ரோல், டீசல் வாகனங்களை காட்டிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக உள்ளது. இரண்டாவது காரணம் ரேஞ்ச் பற்றிய பயம். தற்போது பெட்ரோல் பங்க்குகளின் எண்ணிக்கைக்கு நிகராக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லை.
எனவே நடுவழியில் சார்ஜ் தீர்ந்து வாகனம் நின்று விட்டால் சிக்கல்தான். இந்த இரு பிரச்னைகளுக்கும் முடிவு கட்டினால் மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் ஏற்படும். இதனால் இந்த இரண்டு பிரச்னைகளையும் களைவதற்கு, உலக நாடுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.
இந்த வரிசையில் ஜெர்மனி தற்போது வெளியிட்டுள்ள அதிரடி உத்தரவுகள் கவனம் பெற்றுள்ளன. ஜெர்மனி முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜிங் ஸ்டேஷன் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அந்நாட்டு அரசு தற்போது அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஜெர்மனியில் 14,118 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன.
இந்த பெட்ரோல் பங்க்குகள் அனைத்திலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருப்பது தற்போது கட்டாயமாக்கபட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் பற்றி மக்களுக்கு இருக்கும் பயத்தை போக்கவும், மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதை ஊக்குவிக்கவும், ஜெர்மனி அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அத்துடன் ஐசி (Internal Combustion - IC) இன்ஜின் உடன் பெரிய எஸ்யூவி கார்களை வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு வரி விதிக்கவும் ஜெர்மனி அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கினால் மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெர்மனியில் கடந்த 2019ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட புதிய பயணிகள் கார்களில், எலெக்ட்ரிக் கார்களின் பங்கு வெறும் 1.8 சதவீதம் மட்டுமே. அதே சமயம் பெட்ரோல் கார்களின் எண்ணிக்கை 59.2 சதவீதமாகவும், டீசல் கார்களின் எண்ணிக்கை 32 சதவீதமாகவும் இருந்தது. இது ஜெர்மனியில் காற்று மாசுபாடு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
எனவேதான் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இத்தகைய நடவடிக்கைகளை ஜெர்மனி அரசு எடுத்து வருகிறது. ஜெர்மனி தவிர உலகின் மற்ற நாடுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இதற்காக தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன.
இதன்படி இங்கிலாந்து அரசு வெகு விரைவில் புதிய கார் ஸ்கிராப்பேஜ் பாலிசியை வெளியிடவுள்ளது. இதில், பெட்ரோல், டீசல் கார்களை எக்ஸ்சேஞ்ச் செய்து விட்டு எலெக்ட்ரிக் கார்களை வாங்குபவர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் 5.70 லட்ச ரூபாயை ஊக்க தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் ஜூலை 6ம் தேதி புதிய கார் ஸ்கிராப்பேஜ் பாலிசியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அரசும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்