காதலனை காண இந்தியா வந்த யுஎஸ் பெண்.. காரை ஓட்ட முடியாமல் திக்குமுக்காடிய அவலம்! இப்படி பன்றீங்களேமா!
காதலனை சந்திப்பதற்காக அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு பறந்து வந்த இளம்பெண் ஒருவர் இந்திய சாலையில் முதல் முறையாக பயணித்த அனுபவத்தைப் பற்றி வீடியோ வாயிலாக கூறியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி500 என்ற எஸ்யூவி ரக காரை அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்திய சாலையில் வைத்து இயக்கியுள்ளார். இந்திய சாலையில் முதல் முறையாக காரை ஓட்டிய அவருக்கு கிடைத்த அனுபவங்களை அவரது இந்திய ஆண் நண்பர் வீடியோ வாயிலாக காட்சிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகின்றது.

வெளிநாட்டவர்களால் இந்திய சாலையில் வாகனத்தை இயக்குவது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. ஏனென்றால், வளர்ந்த நாடுகளில் உள்ள சாலைகள் சீரான முறையில் கட்டமைக்கப்பட்டிருக்கும். மேலும், போக்குவரத்து விதிகள் அனைத்தும் முறையாக கடைபிடிக்கப்படும். ஆகையால், அங்கு வாகனங்களை இயக்குவது என்பது மிகவும் சுலபமான ஓர் காரியம்.

இதனை இந்தியாவுடன் ஒப்பிட்டு பார்த்தால், வெளிநாட்டவர்களால் ஏன் இந்தியாவில் வாகனத்தை இயக்க முடியாது என்பது நமக்கு தெரிந்துவிடும். ஏன், நம்மில் பலருக்கே நம் நாட்டில் உள்ள சில சாலைகளில் வாகனத்தை இயக்குவது என்பது நூடுல்ஸில் உள்ள சிக்கலை அவிழ்ப்பதைப் போன்ற சூழலை ஏற்படுத்தி விடுகின்றது.

இதற்கு, வளர்ச்சியடையாத உள்கட்டமைப்பு மற்றும் விதிகளை மீறி வளைந்து நெளிந்து பறக்கும் வாகன ஓட்டிகள் ஆகியவையே மிக முக்கியமான காரணங்களாக இருக்கின்றன.

இதுபோதாதென்று, சாலையில் உல்லாசமாக சுற்றி திரியும் மாடுகள் மற்றும் பாதசாரிகளால் ஆகியவற்றாலும் இந்திய சாலையில் பயணிப்பதை அசாதாரணமாக சுழலாக உருவாக்கிவிடுகின்றது.
இப்படிபட்ட சூழ்நிலையில் வெளிநாட்டவர்கள் இந்தியாவில் வாகனத்தை இயக்குவது என்பது அவ்வளவு சுலபமான ஒன்றாக இருக்காது.

இந்நிலையிலேயே, அமெரிக்காவிலேயே பிறந்து, வளர்ந்த இளம்பெண்ணின் முதல் இந்திய பயண அனுபவத்தை அவரது ஆண் பதிவு செய்துள்ளார். வாருங்கள், ஷானெல் என்ற அந்த இளம்பெண் இந்திய சாலையில் எத்தகைய சிக்கைலையெல்லாம் சந்தித்தார் என்பதை காணலாம்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லுதியானா என்ற பகுதியில்தான் ஷானெல் அவரது ஆண் நண்பருடன் (கிஷனெல்) இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

பொதுவாக, வெளிநாட்டில் உள்ள சாலைகளில் போக்குவரத்து விதிமீறல், விலங்குகள் (ஆடு, மாடு) சாதாரணமாக சாலையில் சுற்றித் திரிவதை பார்க்க முடியாது. ஆனால், ஷானெல் முதல் முறையாக காரை ஓட்டிச் செல்லும்போது இவையனைத்தையும் ஒரே நேரத்தில் கண்டு மிரண்டு போய்விட்டார்.
குறிப்பாக, பாதையை விடாமல் சென்ற சைக்கிள் ஓட்டியால் அவர் திக்குமுக்காடிவிட்டார். அதுமட்டுமின்றி, ஓர் குறுகிய தெருவை கடப்பதற்கு மட்டும் சில விநாடிகள் காத்திருந்து அவர் கடந்தார்.

அவருக்கு முன்பாக வந்த இரு சக்கர வாகனங்கள் கார் வருவதை அறிந்தும் வலது, இடதுமாக தவறான பாதையில் சென்று ஷானெல்லை ஒரு முறை உரைந்துபோகவே வைத்துவிட்டனர். இதையடுத்து, அவர் அந்த சாலையை கடந்தபோது ஏதே ஒலிம்பிக்கில் வெற்றிப்பெற்று வாகை சூடியதைப் போன்று உற்சாகத்துடன் சத்தமிட்டு கத்தினார்.
இதையடுத்து, ஷானெல் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் கடைவீதிக்கு சென்று அப்பகுதியின் பிரபலமான உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.

vஷானெல் மற்றும் கிஷனெல் இருவரும் காதலர்கள் என்று கூறப்படுகின்றது. கிஷனெல்லை சந்திக்கவே அமெரிக்க இளம்பெணம் ஷானெல் இந்தியா வந்துள்ளார். இந்த தருணத்திலேயே புதுவிதமான அனுபவத்தை ஏற்படுத்தும் விதமாக லூதியாவின் இடுக்கான சாலைகளில் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரை ஷானெல் இயக்கியுள்ளார்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரின் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்டை ஷானெல் இயக்கினார். அவர், அமெரிக்காவில் அதிகபட்சம் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ள வாகனத்தை மட்டுமே இயக்குவதாக வீடியோவில் தெரிவித்தார்.

மேலும், கார் ஓட்ட பழகும் ஆரம்பகட்டத்தில் மட்டுமே இதுபோன்று மேனுவல் கியர்பாக்ஸ் உள்ள கார்களை இயக்கியதாகவும் அவர் கூறினார். ஆகையால், மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரை இயக்க சற்றே சிரமத்திற்கு உள்ளாகினார் ஷானெல்.

அதேசமயம், இந்த காரை ஒரு சில பகுதியில் இயக்க முடியாத என்ற காரணத்தால் கிஷனெல் கூறும் பாதையை மாற்றி வேறு பாதையில் சென்றதையும் நம்மால் காண முடிகின்றது.
இதற்கு காரணமாக போக்குவரத்து விதிமீறல் வாதிகள் ஒருபுறத்தில் இருக்க, மறுபக்கத்தில் சீரான உள்கட்டமைப்பு இல்லாத சாலைகளும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








