Just In
- 9 min ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 47 min ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 2 hrs ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 5 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
Don't Miss!
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
புதிய தார் காருக்காக ஆனந்த் மஹிந்திராவிற்கு ஐஸ் வைத்த இளைஞர்... என்ன செய்தார் தெரியுமா?
புதிய தார் காருக்காக இளைஞர் ஒருவர் இணையம் வாயிலாக ஆனந்த் மஹிந்திராவுக்கு ஐஸ் வைத்த சம்பவம் வைரலாகி வருகின்றது. அதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
நீண்ட கால எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மஹிந்திரா நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த தார் ஆஃப்-ரோடர் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஆகஸ்டு 15ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இக்கார் வருகின்ற அக்டோபர் மாதத்தில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும் என கூறப்படுகின்றது. இந்த நிலையில், இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது.
ஆம், நடிகர்கள் முதல் முக்கிய தொழிலதிபர்கள் வரை இக்காரின் விற்பனை அறிமுகத்திற்காக காத்திருப்பதாக தங்களின் ஆவலைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், மிக சமீபத்தில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் கலக்கிக் கொண்டிருக்கும் பிரித்விராஜ், மஹிந்திரா தார் காரை டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளியிருந்தார். இவ்வாறே பலர் இக்கார் மீது இனம்புரியாத ஆவலைச் செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், சாமானியர்கள் சிலரும் தங்களது விருப்பத்தை டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவுக்கு தெரிவித்து வருகின்றார். அவ்வாறு, மிஸ்டர் பைலட் எனும் டுவிட்டர் பயனர் ஒருவர் செய்த டுவிட் ஒன்று ஆனந்த் மஹிந்திராவை வெகுவாக கவர்ந்துள்ளது.
பொதுவாக, ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் மிகவும் துடிப்புடன் செயல்படும் ஓர் நபர் ஆவார். எனவே, அவரை டேக் செய்து போடப்படும் பதிவிற்கு அவரிடம் இருந்து உடனடி பதிலை நம்மால் எதிர்பார்க்க முடியும். அந்தவகையிலேயே தார் கார்குறித்த மிஸ்டர் பைலட் எனும் நபரின் கலாய்ப்பு கலந்த டுவிட்டிற்கு ஆனந்த் மஹிந்திரா வரவேற்பு மற்றும் உடனடி பதிலை அளித்துள்ளார்.
இந்தி திரைப்படங்களில் மிகவும் பிரபலமான படமான ஷோலே-வில் வரும் முக்கிய காட்சியைக் கொண்டே அந்த நபர் ஆனந்த் மஹிந்திராவிற்கு ஐஸ் வைத்துள்ளார். இப்படத்தில் வரும் தாகூர் எனும் கதாபாத்திரத்தின் கைகளை, வில்லன் துண்டிப்பார். கை துண்டிப்பதற்கு முன்னர் 'உன் கைகளைக் கொடுத்துவிடு தாக்கூர்' என மிகவும் ஆவேசமாக அந்த நபர் கூறுவார்.
இந்த நிகழ்வை மையப்படுத்தியே அந்த நபர், ஆனந்த் மஹிந்திராவின் புகைப்படத்துடன் சித்தரித்து வெளியிட்டுள்ளார். அதாவது, தாகூர் முகத்திற்கு பதிலாக ஆனந்த் மஹிந்திராவின் முகத்தை போட்டு, அவருக்கு பின்னால் இரு கார்களை நிறுத்தி வைட்டு, உங்களின் இரு கைகளையும் கொடுத்துவிடுங்கள் என கூறியிருக்கின்றார். அந்த புகைப்படத்தை நீங்கள் கீழே காணலாம்.
மிஸ்டர் பைலட் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தையே தனது சேமிப்பு புகைப்படங்களில் இணைக்க இருப்பதாக ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். மஹிந்திரா தார் எஸ்யூவி கார் ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை மஹிந்திரா நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. மஹிந்திரா தார் இரு விதமான எஞ்ஜின் தேர்வில் கிடைக்க இருக்கின்றது. 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் டிஜிடிஐ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் ஆகிய எஞ்ஜின் தேர்வில் கிடைக்க உள்ளது.
இத்துடன், 6 ஸ்பீடு டார்க் கன்வர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆகிய தேர்வுகளும் அதில் வழங்கப்பட இருக்கின்றன. புதிய தார் எஸ்யூவி அறிமுகத்தின்போது அதை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு ஆட்டோமொபைல் துறை பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
அவ்வாறு மஹிந்திரா தார் காரை ஓட்டிப்பார்த்த அனைவரும், புதிய தார் எஸ்யூவி அனைத்து தரப்பிலும் சிறப்பானதாக இருப்பதாக நற்சான்று வழங்கினார்கள். அவ்வாறு சோதித்து பார்த்த பலரே அக்காரை சொந்தமாக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!