Just In
- 2 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 4 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 6 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 9 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- News சென்னையை சுற்றி 128 ரயில் நிலையங்களில் வருகிறது சூப்பர் வசதி.. இன்னும் 3 மாதத்தில் எல்லாமே மாறுது
- Movies தமன்னா அதற்கு செட் ஆகமாட்டார்.. ஓபனாக பேசிய இயக்குநர் லிங்குசாமி
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்தியாவில் 5வது டயர் ஆலையை திறந்தது அப்போலோ!
இந்தியாவில் புதிய டயர் ஆலையை திறந்துள்ளது அப்போலோ நிறுவனம். இந்த ஆலையில் டயர் உற்பத்திப் பணிகளும் முறைப்படி துவங்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக அப்போலோ டயர்ஸ் நிறுவனம் உள்ளது. அனைத்து ரக வாகனங்களுக்கும் டயர்களை அப்போலோ நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. மேலும், வாகன உற்பத்தி நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் டயர்களை சப்ளை செய்து வருகிறது.
இந்த நிலையில், ஏற்கனவே 4 டயர் ஆலைகளுடன் இந்தியாவில் டயர் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் அப்போலோ நிறுவனம் தற்போது 5வது ஆலையையும் இந்தியாவில் திறந்துள்ளது.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னபன்டுரு என்ற கிராமத்தில் புதிய டயர் ஆலையை அப்போலோ அமைத்துள்ளது.இந்த ஆலையில் நேற்று முதல் டயர் உற்பத்தி துவங்கப்பட்டு இருக்கிறது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்களுடன் பசுமை ஆலையாக இது அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையானது 256 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையின் கட்டமைப்பு மற்றும் விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.3,800 கோடி வரை முதலீடு செய்வதற்கு அப்போலோ திட்டமிட்டுள்ளது.
இந்த ஆலையில் அடுத்த 12 முதல் 18 மாதங்களில் டயர் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்படும். வரும் 2022ம் ஆண்டு முழுமையான உற்பத்தி திறனுடன் இயங்கும் என்று அப்போலோ தெரிவித்துள்ளது.
இந்த பசுமை ஆலை நாள் ஒன்றுக்கு 15,000 கார் டயர்களையும், 3,000 டிரக் மற்றும் பஸ்களுக்கான ரேடியல் டயர்களையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
ஹரியானா மாநிலம் குர்கானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அப்போலோ டயர் நிறுவனத்திற்கு உலக அளவில் 7 டயர் ஆலைகள் உள்ளன. அதில், 5 டயர் ஆலைகள் இந்தியாவில் உள்ளன. நெதர்லாந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளில் தலா ஒரு டயர் உற்பத்தி ஆலைகள் உள்ளன.
அப்போலோ டயர் நிறுவனத்தில் 16,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவில் வர்த்தக வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் விதத்திலும், குறித்த நேரத்தில் சப்ளை செய்யும் வகையிலும் இந்த ஆலையை அமைத்துள்ளது அப்போலோ டயர் நிறுவனம்.
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!