Just In
- 33 min ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 37 min ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 2 hrs ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 3 hrs ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
நஷ்டங்களை சந்திந்த போதிலும் அரசாங்கத்திற்கு ரூ.41 லட்சத்தை வாரி வழங்கியுள்ள அசோக் லேலண்ட்...
நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக அசோக் லேலண்ட் நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பிரதமர் நிவாரண நிதியில் ரூ.41 லட்சத்தை செலுத்தியுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
கொரோனா வைரஸ் இந்தியா உள்பட பல நாடுகளில் உயிரிழப்புகளையும், அந்தந்த நாடுகளின் பொருளாதாரத்தையும் பெரிய அளவில் பாதித்து இருந்தாலும் இதனால் சில நன்மைகளும் ஏற்பட்டு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
பல கோடி ரூபாய் செலவில் மீட்பு பணிகள் பல சமூக ஆர்வலர்களின் உழைப்பு என எவ்வித முயற்சியிலும் தூய்மைப்படாத கங்கை நதி இந்த ஒரு மாத ஊரடங்கினால் பரிசுத்தமானது போல இந்த கஷ்டமான காலத்தில் சில உண்மையாக உதவி செய்பவர்களின் முகங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
இதனால் உண்மையான எதிரி யார் யார் என்பதையும் நம்மால் அறிய முடிகிறது. சரி நாம் விஷயத்திற்கு வருவோம். இந்தியாவில் பெரும்பான்மையான தொழில் நிறுவனங்களும் அவற்றின் சங்கங்களும் கொரோனா பிடியில் இருந்து மக்களை மீட்க அரசாங்கத்திற்கு பண உதவிகளை வழங்கி வருவதை போல் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட்டும் தனது பங்கிற்கு ரூ.41 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதியின் மூலமாக வழங்கியுள்ளது.
இந்த தொகை இந்நிறுவனத்தின் தொழிலாளர்களாலும், அவர்களது குடும்பத்தினராலும் சேகரிக்கப்பட்ட பணம் ஆகும். இதுமட்டுமின்றி இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க அசோக் லேலண்ட் நிறுவனம் பல விதங்களில் அரசாங்கத்துடன் துணை நின்று வருகிறது.
இந்த வகையில் இந்நிறுவனத்தின் 10 வாகனங்கள் ஓட்டுனர்களுடன் தமிழ்நாடு சுகாதார துறையின் அவசர பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மாஸ்குகள், மீண்டும் மீண்டும் பயன்படுத்தா வகையிலான கையுறைகள், லிக்யூடு ஹேண்ட்வாஷ், சுத்திகரிப்பான்கள் மற்றும் பாடி சூட்கள் உள்ளிட்டவற்றையும் அரசு சுகாதார பணியாளர்களுக்காக வழங்கியுள்ளது.
மேலும் எந்தவொரு நோய்தொற்றும் இல்லாமல் அரசாங்க சுகாரதார மற்றும் தூய்மை பணியாளர்கள் பணியாற்ற பாதுகாப்பான இரசாயன பாதுகாப்பு மேலாடைகள் மற்றும் இரசாயன பாதுகாப்பு கண்ணாடிகளையும் அசோக் லேலண்ட் நிறுவனம் கொடுத்து வருகிறது.
மருத்துவமனைகளில் மின்சார துண்டிப்பு பிரச்சனைகள் எதுவும் நிகழாமல இருக்க சில மருத்துவனைகளில் தொடர் மின்சார விநியோகத்தை இந்நிறுவனம் உறுதி செய்து வருகிறது. இதன்படி சென்னை குரோம்பேட்டை மற்றும் திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமைனைகள் உள்பட மதுரை மருத்துவ கல்லூரியும் இந்நிறுவனத்தின் மின்சாரத்தை பெற்று வருகின்றன.
இவற்றுடன் அசோக் லேலண்ட் தொழிற்சாலைகளின் சமையல் அறையில் சமைக்கப்படும் உணவுகள் தினமும் காவலர்கள், மருத்துவர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தொழிலாளர்களும் டீலர்ஷிப் நிர்வாகிகளும் தங்களது பங்கிற்கு தங்களது சுற்று வட்டாரங்களில் லாக்டவுன் தளர்விற்காக காத்திருப்பில் உள்ள வெளியூர் லாரி ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் ரேஷன் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இதில் இவர்களது பங்கு மட்டுமில்லாமல் இத்தகைய பொருட்களை தேவையான பகுதிகளுக்கு எடுத்து செல்லும் லாரி ஓட்டுனர்களின் பங்கும் இன்றியமையாதது. அசோக் லேலண்ட் நிறுவனம் கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்து வருவது அனைவருக்கும் தெரிந்தது தான். இருப்பினும் இவ்வாறான உதவிகளை இந்நிறுவனம் செய்து வருவது உண்மையில் பாராட்டத்தக்கதே.
-
உலகின் பவர்ஃபுல் ஹார்பர் கிரேன் இதுதான்.. எங்கே வேணும்னாலும் நகர்ந்து போகும்.. 300டன்னைகூட அசால்டா தூக்கிரும்!
-
பொண்ணு ஆசைப்பட்டதற்காக 3 கோடி ரூபாய் காரை பரிசளித்த அப்பா! இதுக்கு முன்னாடி யாருமே இந்த காரை வாங்குனது இல்ல!
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!