Just In
- 1 hr ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 1 hr ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 2 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இப்படிலாம் செய்றதுக்கு தனி துணிச்சல் வேணும்! தில்லுமுல்லு இளைஞர்கள் கைது... மிரட்டலான ஸ்டோரி!
தில்லுமுல்லு இளைஞர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.
பணக்காரர் கனவு இல்லாத நபர்களை பார்ப்பது மிக மிக கடினம். இதற்காக உழைத்துக் கொண்டிருப்பவர்களே உலகில் அதிகம். ஆனால், ஒரு சிலர் இந்த இலக்கை அடைய குறுக்கு வழியே தேர்ந்தெடுக்கின்றனர். நவீன காலம் வளர தொடங்கியது முதல் இது சற்று கூடுதலாகவே காணப்படுகின்றது. எனவே, விரைவாக பணக்காரர்களாக ஆக வேண்டும் என நினைப்போர்களின் தேர்வில் குறுக்கு வழியே முதன்மையான ஒன்றாக இருக்கின்றது.
Image Courtesy: Punjab Kesari Haryana
இதற்காக அவர்கள் கையிலெடுக்கம் ஆயும் வழிப்பறி, கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் ஏமாற்றுவது ஆகும். தற்போது நாம் பார்க்கவிருக்கும் சம்பவமும் இதில் சம்பந்தபட்டதுதான்.
உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் நகரத்தைச் சேர்ந்தவர் ஹர்மான் சிங். இவர், சமீபத்தில் தனது விலையுயர்ந்த காரான ஆடி ஏ4 களவு செய்யப்பட்டுவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அப்புகாரில், "தன்னுடைய காரை பிரபல ஓஎல்எக்ஸ் தளத்தில் விற்பனைச் செய்வதற்காக விளம்பரப்படத்தியாகவும், அதனைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் டெஸ்ட் டிரைவ் செய்வதாகக் கூறி தப்பிச் சென்றதாகவும்" கூறியிருந்தார்.
கார் சற்று காஸ்ட்லீயானது என்பதால் போலீஸார் தங்களின் விசாரணையை தீவிரப்படுத்தினர். ஆனால், நீண்ட நாட்களாக அவர்களுக்கு எந்த விடையமும் கிடைக்கவில்லை. இதனால், தங்களின் பார்வையை வேறுபக்கம் திருப்பினர். அதேசமயம், விசாரணையையும் அவற்கள் தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் பாதுகாப்பான ஓர் இடத்தில் இருந்து ஆடி ஏ4 பத்திரமாக மீட்கப்பட்டது. இது எப்படி அங்கு என விசாரணையைத் தீவிரப்படுத்தும் வேலையில்தான் காரின் உரிமையாளரான ஹர்மான் சிங்கி சிக்கினர். இவர்களே அக்காரை பாதுகாப்பான இடத்தில் மறைத்துவிட்டு, காணமல் போனதாக நாடகமாடியுள்ளனர்.
அதாவது, இன்சூரன்ஸ் பணத்தைப் பெறுவதற்காகவே அவர்கள் தந்திரமாக இத்தகைய நாடகத்தை அரங்கேற்றியதாக ஒப்புக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, பல்வேறு பிரிவுகளின்கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார். ஹர்மான் சிங்கையும், அவருக்கு உதவியாக இருந்த மற்றுமொரு நபரையும் கைது செய்தனர்.
பொதுவாக இன்சூரன்ஸ் என்பது களவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமின்றி விபத்தில் சிக்கிய வாகனங்களுக்கும் உரிய இழப்பீட்டை பெற வழிவகுக்கும். இது, வாகனத்தின் உரிமையாளர் மட்டுமின்றி குறிப்பிட்ட வாகனத்தால் சேதத்தை மூன்றாம் நபருக்கும் இழப்பை சீர் செய்ய உதவும். இதன் காரணத்தினாலயே இந்திய மோட்டார் வாகனச் சட்டம் வாகன காப்பீட்டை கட்டாயப்படுத்தியுள்ளது.
ஆனால், துஷ்பிரயோகம் செய்யும் விதமாக உபி மாநிலத்தைச் சேர்ந்தவர் பொய் முதல் அறிக்கையைத் தாக்கல் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதனால், மோசடி மற்றும் பொய் வழக்கு உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்துள்ளனர். மீரட்டில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியைல் உறைய வைத்துள்ளது.
தற்போது காணாமல் போனதாகக் கூறி, பத்திரமான இடத்தில் இருந்து மீட்கப்பட்டிருக்கும் ஆடி ஏ4 கார் பழைய தலைமுறை காராகும். இதன் புதிய தலைமுறைதான் தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆறு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.
அது ஆரம்ப விலையாக ரூ. 41.49 லட்சத்தில் இருந்து 46.96 லட்சம் வரையிலான மதிப்பில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. இதனை ஆன்-ரோடில் வாங்கச் சென்றால் இதைவிட கூடுதல் விலையைக் கொண்டதாக இருக்கும்.
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு