Just In
- 6 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 6 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 9 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 9 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிஎஸ்4 வாகன விற்பனையை நீடிக்க உச்ச நீதிமன்றத்தை நாடிய டீலர்கள் கூட்டமைப்பு!
கொரோனா வைரஸ் பிரச்னையால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, பிஎஸ்4 வாகன விற்பனைக்கான காலக்கெடுவை நீடித்து தருமாறு உச்சநீதிமன்றத்தில் டீலர்கள் கூட்டமைப்பு மனுதாக்கல் செய்துள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் பிரச்னை பூதாகரமாக மாறி இருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, பொருளாதார ரீதியிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சூழலில், வரும் ஏப்ரல் 1 முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கும் நிலையில், பிஎஸ்4 வாகனங்களின் விற்பனைக்கான காலக்கெடு வரும் 31ந் தேதியுடன் முடிகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதால், வாகன விற்பனை பெரும் சரிவை சந்தித்துள்ளது.
இந்த அசாதாரணமான சூழலை மனதில் வைத்து பிஎஸ்4 வாகன விற்பனைக்கான காலக்கெடுவை நீடித்து தருமாறு அகில இந்திய வாகன டீலர்கள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பிரச்னையால் கடந்த சில நாட்களாக வாகன விற்பனையானது 60 முதல் 70 சதவீதம் சரிந்துவிட்டதாகவும், நடப்பு வர்த்தகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், இருப்பில் உள்ள பிஎஸ்4 வாகனங்களை வரும் 31ந் தேதிக்குள் விற்பனை செய்வது கடினமாக இருக்கும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க அறிவுறுத்தல்களின்படி, டீலர்களில் விற்பனை செயல்பாடுகளை நிறுத்தி வைக்கவும் பல டீலர்கள் முடிவு செய்துள்ளதால், பல டீலர்கள் நிலைமை மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டு இருக்கிறது.
மேலும், இருப்பில் உள்ள பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்யவில்லை என்றால், பல டீலர்களை நிரந்தரமாக மூடும் நிலைக்கு கூட தள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு வரும் மே 31ந் தேதி வரை இருப்பில் உள்ள பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கும், பதிவு செய்வதற்கும் அனுமதி வழங்குமாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
கடந்த மாதமும், பிஎஸ்4 வாகன விற்பனையை நீடித்து தருவதற்காக டீலர்கள் கூட்டமைப்பு அளித்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பிரச்னையை காரணம் காட்டி, காலக்கெடுவை நீடித்து தருவதற்கு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த மனுவை உச்ச நீதிமன்றம் அவசர நிலையாக கருதி விசாரணை செய்து உரிய தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்ப்பதாக இந்திய வாகன விற்பனையாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!