Just In
- 23 min ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 1 hr ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 2 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- News சின்னம் என்னனே தெரியல.. பிரச்சாரத்தில் சுணங்கிய திமுக கூட்டணி.. திருச்சியில் வேகம் எடுக்கும் அதிமுக!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Movies கேமரா மேனால் குழந்தையோடு தெருவில் நின்றேன்.. வாழ்க்கையே போச்சு..டான்சர் விஜயலட்சுமி கண்ணீர் பேட்டி!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிரதமர் மோடியின் 20 லட்சம் கோடி திட்டம்... ஆட்டோமொபைல் துறைக்கு கைகொடுக்குமா?
பிரதமர் மோடியின் 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரா ஊக்குவிப்புத் திட்டம் ஆட்டோமொபைல் துறைக்கும் பெரும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எவ்வாறு ஆட்டோமொபைல் துறைக்கு பயன் அளிக்கும் என்பது குறித்த தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.
கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கான 20 லட்சம் கோடி ரூபாய்க்கான மெகா பொருளாதார தொகுப்புத் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது அறிவித்தார். இதற்கான விரிவான திட்ட அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பிரதமரின் இந்த அறிவிப்பு தொழிற்துறையினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பால் சிறு மற்றும் நடுத்தர வகை தொழில்களும், பெரும் முதலீட்டு திட்டத்துடன் கூடிய தொழில்களும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்த நிறுவனங்கள் பொருளாதார பாதிப்பிலிருந்து மீண்டு வரும் வகையில் 20 லட்சம் கோடி திட்டம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், தற்சார்பு பொருளாதாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் பிரதமர் மோடியின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இதனால், உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்று தெரிகிறது. மேலும், இந்த திட்டம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை நேரடியாக ஊக்குவிக்கும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, பெரும்பாலான வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனங்கள் பயன் பெறும் வாய்ப்புள்ளது.
இந்த திட்டத்தின்படி, விவசாயிகள், நடுத்தர மக்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால, மறைமுறைமாக இருசக்கர மற்றும் சிறிய ரக கார்களின் விற்பனை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
இது வாகன உற்பத்தி நிறுவனங்களின் பொருளாதார இழப்பை ஈடுகட்ட உதவும். இதுதொடர்பாக, இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பின் (சியாம்) தலைவர் ராஜன் வதேரா கூறுகையில்,"பிரதமரின் இந்த 20 லட்சம் கோடி திட்டம் தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கியதாக அமையும். உள்நாட்டு தேவையை அதிகரித்து உற்பத்தியை பெருக்க உதவும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஆட்டோமொபைல் துறை இந்தியாவின் மொத்த உற்பத்தியில் முக்கிய பங்களிப்பையும், அதிக வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறது. எனவே, ஆட்டோமொபைல் துறை வளர்ச்சிக்கான சிறப்பு திட்டங்களை பிரதமரின் 20 லட்சம் கோடி திட்டம் குறித்த விரிவான திட்ட அறிவிப்பின்போது மத்திய நிதி அமைச்சர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறோம்," என்று கூறி இருக்கிறார்.
பிரதமரின் அறிவிப்பு குறித்து அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விபின் சொந்தி கூறுகையில்," பிரதமரின் அறிவிப்பு உற்சாகத்தையும், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனினும், திட்டம் குறித்த முழுமையான விபரங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.
மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கோ பிரதமரின் பேச்சை மேற்கோள்காட்டி டிவிட்டரில் செய்தியை பதிவு செய்துள்ளார். அதில், வைரஸிடம் பிணயக் கைதியாக இல்லாமல், அதனை முறியடுத்து வாழ வேண்டும். மேலும், உள்நாட்டு பொருட்களை வாங்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் பேச்சை சுட்டிகாட்டியுள்ளார்.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்