Just In
- 26 min ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 45 min ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 3 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 3 hrs ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
Don't Miss!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Movies Actor Kamal haasan: டெல்லியில் துவங்கிய தக் லைஃப் பட சூட்டிங்.. கமல் எப்ப ஜாயின் ஆகுறாரு தெரியுமா?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- News ஆக்கிரமிப்பு நிலமா? எவ வேலுவின் மனைவி தலைவராக உள்ள கல்லூரி உரிமத்தை ரத்து செய்ய மறுத்த ஹைகோர்ட்
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Finance புது ATM கார்டு ரூல்ஸ்.. இனி ஆன்லைன் மோசடிக்கு வாய்ப்பே இல்ல!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனையை துவங்கியது பாரத் பென்ஸ்!
இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட டிரக்குகளை வாங்கி விற்பனை செய்யும் பிரிவை துவங்கி இருக்கிறது பாரத் பென்ஸ் நிறுவனம்.
இந்தியாவின் டிரக் உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக பாரத் பென்ஸ் உள்ளது. தனது உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகள் மூலமாக இந்தியாவின் டிரக் சந்தையை குறுகிய காலத்தில் மாற்றிக் காட்டி அசத்தி உள்ளது. மேலும், விற்பனை, சர்வீஸ் உள்ளிட்டவற்றிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட டிரக்குகளுக்கு இருக்கும் வர்த்தக வாய்ப்பை மனதில் வைத்து, புதிய விற்பனை பிரிவை துவங்கி இருக்கிறது.
Bharat Benz Exchange என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த புதிய வர்த்தகப் பிரிவின் மூலமாக, பயன்படுத்தப்பட்ட டிரக் உள்ளிட்ட தனது வர்த்தக வாகனங்களை எளிதாக வாங்குவதற்கான வாய்ப்பை வாடிக்கையாளர்கள் மற்றும் டிரக் போக்குவரத்து நிறுவனங்கள் பெற முடியும்.
பயன்படுத்தப்பட்ட டிரக்குகளை வாங்கி, அதனை பல்வேறு கட்ட பரிசோதனைகளை செய்து பின்னர் விற்பனைக்கு அனுப்பப்படும். மேலும், பழுதுகள் நீக்கப்படுவதுடன், டிரக்கில் உள்ள அனைத்து குறைகளும் களைந்து விற்பனைக்கு அனுமதிக்கப்படும்.
மேலும், டிரக்கின் ஆவணங்கள் முறைப்படி சரிபார்க்கப்பட்ட பின்னரே விற்பனைக்கு செல்லும். இதனால், பயன்படுத்தப்பட்ட பாரத் பென்ஸ் டிரக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் நிம்மதியான உணர்வை பெற முடியும்.
பயன்படுத்தப்பட்ட டிரக்குகள் புனரமைக்கப்பட்டு வழங்கப்படுவதுடன், அதற்கு வாரண்டியும் வழங்கப்படுவதுடன், ஆண்டு பராமரிப்புத் திட்டங்களுடன் விற்பனை செய்யப்படும். இதன்மூலமாக, டிரக் நீடித்த உழைப்பை வழங்கும்.
தனது பயன்படுத்தப்பட்ட வாகனப் பிரிவின் மூலமாக விற்பனை செய்யப்படும் டிரக்குகளுக்கு சிறந்த நிதி நிறுவனங்கள் மூலமாக கடனுதவி திட்டங்களையும் வாடிக்கையாளர்களுக்கு பெற்றுத் தருவதாக பாரத் பென்ஸ் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பாரத் பென்ஸ் டீலர்களில் இந்த எக்ஸ்சேஞ்ச் என்ற யூஸ்டு டிரக் வாகன விற்பனைப் பிரிவு செயல்படும். பாரத் பென்ஸ் இணையதளம் மூலமாக பயன்படுத்தப்பட்ட டிரக்குகள் குறித்த விபரங்களை பெறலாம். பயன்படுத்தப்பட்ட டிரக் சந்தையில் வாடிக்கையாளர்கள் வட்டத்தை விரிவுப்படுத்தும் வகையில், சில நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து செயல்படும் பாரத் பென்ஸ் திட்டமிட்டுள்ளது.
-
7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!