Just In
- 41 min ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 1 hr ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 3 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 8 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
Don't Miss!
- News எடப்பாடி பேசுவதை விடுங்க!ரிசல்ட்டுக்கு முன்பே அதிமுக பெரிய தலை போட்டுடைத்த மேட்டர்!இரட்டை இலை பதறுதே
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Movies டாடா பட நடிகை அபர்ணா தாஸின் ஹல்தி கொண்டாட்டம்..களைகட்டிய திருமணம்!
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
4 மணி நேரம் நடந்த தீவிர வேட்டை... என்னென்ன சிக்கியது தெரிஞ்சா ஆடிப்போய்ருவீங்க... பீஹார் போலீஸ் கலக்குறாங்க!
பீஹார் மாநில காவல்துறை நடத்திய அதிரடி வேட்டையில் பல குற்றவாளிகள் மற்றும் குற்ற பின்னணிக் கொண்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
காவல்துறை நடத்திய நான்கு மணி நேர தீவிர கண்கானிப்பில் முன்னதாக களவு செய்யப்பட்ட கார்கள் மற்றும் குற்ற வழக்கு பின்னணி கொண்ட நபர்கள் பலரை போலீஸார்கள் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிடிபட்டிருக்கும் குற்றவாளிகள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கையை வைத்து பார்க்கையில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட பரிசோதனையைப் போன்று காட்சியளிக்கின்றது.
ஆனால், வட மாநிலங்களில் ஒன்றான பீஹாரில் மட்டுமே இச்சோதனை நடத்தப்பட்டிருக்கின்றது. இங்கே 4 மணி நேரம் நடந்த தீவிர கண்கானிப்பில் 65 குற்றவாளிகள் மற்றும் 67 திருடப்பட்ட வாகனங்கள் மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன. பீஹார் காவல்துறையின் இந்த தீவிர பரிசோதனை அம்மாநில குற்றவாளிகளை நடு-நடுங்க செய்திருக்கின்றது.
தற்போது பிடிபட்டிருக்கும் குற்றவாளிகள் அனைவரும் பல்வேறு குற்றங்களின்கீழ் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் ஆவர். இதுமட்டுமின்றி, கடத்தல், வழிபறி, கொள்ளை போன்ற சம்பவங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
வெறும் நான்கு மணி நேரம் மட்டுமே நடத்தப்பட்ட பரிசோதனையில் இத்தனை வாகனங்கள் மற்றும் குற்றவாளிகளை காவல்துறை பிடித்திருக்கின்றதா?, என்ற கேள்வியும், ஆச்சரியமும் மக்கள் மத்தியில் எழும்பியுள்ளது. மேலும், போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் பேராதரவு கிடைக்கத் தொடங்கியுள்ளது.
மேலும், ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் செய்தியில், "சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 3,570 லிட்டர் மதுபான பாட்டில்கள் மற்றும் 159 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுதவிர 92,000 ரூபாய் ரொக்கத்தையும் குற்றவாளிகளிடத்தில் இருந்து போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
பீஹார் மாநிலத்தின் 38 மாவட்டங்களில் அதிரடியாக நடத்தப்பட்ட தீவிர சோதனையிலேயே இவையனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற தீவிர கண்கானிப்பு நம் மாநிலங்களிலும் நடைபெறாதா என பிற மாநில வாசிகளை இச்சம்பவம் ஏங்க வைத்திருக்கின்றது. குறிப்பாக, வாகனங்களைத் திருடர்களிடம் பறிகொடுத்துவிட்டு நிற்கும் உரிமையாளர்கள் மத்தியில் இந்த ஏக்கத்தைக் காண முடிகின்றது.
தொழில்நுட்பம் மற்றும் தீவிர பரிசோதனை உள்ளிட்டவை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையிலும் வாகன திருட்டு மற்றும் வாகனங்கள் சார்ந்து நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இம்மாதிரியான சூழ்நிலையிலேயே எத்தகைய யுக்தியைக் கையாண்டால் தலைவலியை ஏற்படுத்தி வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதை பீஹார் காவல்துறை விளக்கியிருக்கின்றது.
அதேசமயம், பிற மாநிலங்களில் திருடப்பட்ட வாகனங்களை மீட்க போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டாலும் திருடர்களின் விநோத யுக்தி காவல்துறையினரை அதிக அலைக்கழிப்பிற்கு ஆளாக்குகின்றது. சிசிடிவி கேமிரா இல்லாதது மற்றும் முரண்பட்ட தகவல்கள் உள்ளிட்டவற்றால் வாகனத்தை மீட்பதில் தொய்வு ஏற்படுகின்றது.
இதுபோன்ற அவல நிலையை கலையவே ஜிபிஎஸ் மற்றும் நேவிகேஷன் கருவிகளைப் பயன்படுத்துமாறு வாகனத்துறை வல்லுநர்களும், காவல்துறையும் வலியுறுத்தி வருகின்றன. இவற்றைப் பொருத்துவதன் மூலம் திருடப்படும் வாகனங்களை மிக எளிதில் மீட்க முடியும். குறிப்பாக, வாகனம் எந்த இடத்தில் இருக்கிறது, எந்த பகுதியை நோக்கி பயணிக்கின்றது என அனைத்து தகவல்களையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
குறிப்பு: புகைப்படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!
-
பணங்காரங்க கண்ணு முழுக்க இந்த கார் மேல தான்! பிஒய்டி சீல் கார் எப்படி இருக்குது?
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!