Just In
- 1 hr ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 1 hr ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 2 hrs ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- 3 hrs ago ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சென்னை பிஎம்டபிள்யூ கார் ஆலை மீண்டும் திறப்பு... உற்பத்திப் பணிகள் துவங்கியது!
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டு இருந்த, சென்னை பிஎம்டபிள்யூ கார் ஆலையில் உற்பத்திப் பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு விதிமுறைகளுடன் டீலர்களும் விரைவில் திறக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததையடுத்து, தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றரை மாதங்களாக நீடித்து வரும் இந்த ஊரடங்கு வரும் 17ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கார் ஆலைகள் மற்றும் டீலர்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நிறுவனங்களுக்கு பெரும் பொருளாதார இழப்பும், ஊழியர்களுக்கு சம்பள குறைப்பும் ஏற்படுவதை மனதில் வைத்து, உரிய வழிகாட்டு முறைகளை பின்பற்றி உற்பத்திப் பணிகளை துவங்குவதற்கு அரசு ஊரடங்கு விதிகளில் தளர்வு வழங்கி வருகிறது.
இதனையடுத்து, வாகன உற்ப்ததி நிறுவனங்களும், டீலர்களும் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. அரசு சிறப்பு அனுமதி பெற்று உற்பத்திப் பணிகள் கடந்த சில தினங்களாக துவங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பிஎம்டபிள்யூ சொகுசு கார் நிறுவனத்தின் சென்னை ஆலையில் இன்று முதல் உற்பத்திப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
சென்னை ஆலையில் 50 சதவீதத்திற்கும் குறைவான தொழிலாளர்களுடன் உற்பத்திப் பணிகள் துவங்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரே ஷிஃப்ட் முறையில் கார் உற்பத்திப் பணிகள் நடைபெறும்..
கிருமி நாசினி தெளிப்பு, சமூக இடைவெளி விதிகளை பின்பற்றி உற்பத்திப் பணிகள் நடக்கும் என்று பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது. மேலும், ஆலைக்கு வரும் பணியாளர்களின் உடல் பரிசோதனை செய்வது, முக கவசங்கள் அணிவது உள்ளிட்ட வழிகாட்டு முறைகளும் பின்பற்றப்படும் என்று பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், குர்கானில் உள்ள தலைமையகத்தில் பணிபுரியும் பிஎம்டபிள்யூ இந்தியா பைனான்சியல் சர்வீசஸ் நிறஉவனம் மற்றும் விற்பனைப் பிரிவு பணியாளர்கள் தொடர்ந்து வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.
இதனிடையே, நாடு முழுவதும் உள்ள பிஎம்டபிள்யூ, மினி கார் ஷோரூம்களும், பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஷோரூம்களும் விரைவில் திறக்கப்பட்டு, விற்பனைப் பணிகள் துவங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு வழங்கி உள்ள பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி, விற்பனைப் பணிகள் துவங்கப்பட உள்ளதாக பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!