வெளியே வரவே அச்சப்படும் மக்கள்! விலையுயர்ந்த காரில் கெத்தாக வந்திறங்கிய பிரபல நடிகர்.. ஏன் தெரியுமா?
ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வெளியே தலை காட்டவே அச்சப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரபல நடிகர் ஒருவர் கோடி ரூபாய் மதிப்புள்ளா காரில் கெத்தாக வெளியே வந்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் தற்போது 21 நாள் ஊரடங்கு உத்தரவு நிறைவுற்று 2.0 ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இது வருகின்ற 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (ஏப்ரல்14) காலை 10 மணியளவில் மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அதனை வரும் மே மாதம் 3ம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டார்.
ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!

மே 1ம் தேதி உழைப்பாளர் தினம் பொது விடுமுறை என்பதாலும், அடுத்த நாள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூடுதலாக மூன்று நாட்களையும் சேர்த்து மே 3ம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருப்பதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமலுக்குக் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவு மக்களை ஒரு கை பார்த்துவிட்டு சென்றுள்ளது. இதில், 2.0 என புதிய அவதாரத்துடன் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் என்னவெல்லாம் நேரப் போகின்றதோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்திருக்கின்றனர். அதிலும், அடித்தட்டு மற்றும் தினக் கூலி தொழிலாளர்களின் நிலை சற்றே கூடுதல் கவலைக்கிடமானதாக மாறியுள்ளது.

அதேசமயம், இது ஏழைகளை மட்டுமின்றி சில பணக்காரர்கள் மற்றும் திரை பிரபலங்களையும் லேசாக பாதிப்படையச் செய்துள்ளது.
முன்னதாக, கேளிக்கை மற்றும் விழாக்கள் உள்ளிட்டவைக்காக மட்டுமே வெளியே வந்த பிரபலங்கள் தற்போது அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காகவும் வெளியே வர ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலை பிரபல பாலிவுட் திரைப்பட நடிகரான பர்ஹன் அக்தர்-க்கும் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரசின் காரணமாக அவரது வீட்டில் பணிபுரியும் உதவியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே அவரே அவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான பொருட்களை வாங்க விலையுயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 350டி காரில் வந்திறங்கியுள்ளார்.

இந்த கார் இந்தியாவில் ரூ. 1.02 கோடி என்ற உச்சபட்ச விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது ஓர் சொகுசு அம்சங்களைக் கொண்ட எஸ்யூவி ரக காராகும். இந்த காரில்தான் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்க பர்ஹன் வெளியே வந்துள்ளார். இவருடன் பாடகி சிபனி தந்தேகர் இருந்ததாகக் கூறப்படுகின்றது.

குறிப்பாக, அவர் ஸ்நேக்ஸ் மற்றும் சில கிருமி நாசினிகளை மட்டுமே இந்த பயணத்தின்போது பர்ஹான் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துடன், சமையலுக்கு தேவையான சில பொருட்களும் வாங்கப்பட்டிருக்கின்றன.
இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

குறிப்பாக, நம் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர்கள் வந்த கார் இருந்தாலும், கூடுதல் ஈர்ப்பை பெறும் வகையில் அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. ஆம், அவர்கள் இருவரும் கொரோனா வைரசிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக கையுறை, முகமூடி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தியிருப்பதை நம்மால் காண முடிகின்றது.

தற்போது நாட்டில் அனைத்து மாநில அரசும் இதையேதான் ஊக்குவித்து வருகின்றன. கொரோனாவிடம் தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தி வருகின்றன. அதாவது, அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும் அனைவரும் முகமூடிகளை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

மேலும், இதுபோன்ற பாதுகாப்பு கவசங்கள் அணியாமல் வெளியில் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் அல்லது குறிப்பிட்ட தண்டனைகளை வழங்கும்படி அரசுகள் உத்தரவிட்டு வருகின்றன. தமிழகத்தில்கூட மோட்டார் வாகன சட்டத்தின்படி, ஹெல்மெட்டைப் போல் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கின்றது.
Source: Hindustan Times


Click it and Unblock the Notifications








