Just In
- 20 min ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 1 hr ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 3 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- 4 hrs ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
Don't Miss!
- Movies விபத்துதான் கருங்காலி மாலை அணிய காரணம்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- News பில் கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துகளை பரிசளித்த மோடி.. கையில் உள்ள மற்றொரு கிப்ட் என்ன பாருங்க
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கார் கண்ணாடிகளுக்கு ஐஎஸ்ஐ முத்திரை கட்டாயமாகிறது!
கார்களின் பாதுகாப்பு தரத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், அடுத்து ஒரு அதிரடி முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் உற்பத்தியாகும் கார்களின் தரம் படுமோசமாக இருந்து வந்தது. இதனை கொஞ்சம் கொஞ்சமாக சர்வதேச அளவிற்கு உயர்த்தும் முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கார்களில் சில அடிப்படை பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மத்திய அரசு கட்டாயமாக்கியது.
இதன்படி, ஏர்பேக், ஏபிஎஸ் உள்ளிட்ட பல முக்கிய பாதுகாப்பு வசதிகள் அனைத்து கார்களிலும் கட்டாயமாக்கப்பட்டது. அத்துடன், கட்டமைப்பு தரத்திலும் பல புதிய விதிகளை மத்திய அரசு கொண்டு வந்தது.
இதைத்தொடர்ந்து, கார்களின் பாதுகாப்பு தரத்தை மேலும் அதிகரிக்கும் முயற்சிகளையும், திட்டங்களிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, கார்களின் பயன்படுத்தப்படும் விண்ட்ஷீல்டு எனப்படும் முன்புற, பின்புற கண்ணாடிகள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளுக்கு புதிய தர விதிமுறை கொண்டு வரப்பட உள்ளது.
அதாவது, கார்களில் பயன்படுத்தப்படும் விண்ட்ஷீல்டு மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் ஐஎஸ்ஐ தர முத்திரை இருப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது. இதன்மூலமாக, தரம் குறைந்த அல்லது போலி உதிரிபாகங்களை ஒழிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்த புதிய விதிமுறை அமலுக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் அல்லது அசெம்பிள் செய்யப்படும் கார்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விற்பனைக்கு பிந்தைய சேவை சந்தையில், போலி உதிரிபாகங்களை ஒழிப்பதற்கும் இந்த புதிய விதிமுறை பெரிதும் பயன்படும் என்று கருதப்படுகிறது.