Just In
- 1 hr ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 1 hr ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 2 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 4 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மோசமான நிலையில் மதுரவாயல்- வாலாஜா நெடுஞ்சாலை... 50% மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை - வாலாஜா இடையிலான நெடுஞ்சாலையில் 50 சதவீதம் மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையிலிருந்து பெங்களூர் நகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரையிலான தேசிய நெடுஞ்சாலை பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது. பல இடங்களில் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், அதிக விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
பல முக்கிய தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்து நிறைந்துள்ள இந்த சாலை முறையாக பராமரிக்கப்படவில்லை என்று வாகன ஓட்டிகள் தொடர்ந்து புகார் அளித்தும், இதுதொடர்பான எந்த நடவடிக்கையையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
இந்த நிலையில், அண்மையில் பெய்த கனமழையால் இந்த சாலை மேலும் மோசமான நிலைக்கு மாறி இருக்கிறது. இதுதொடர்பான புகார்களையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் மதுரவாயல்- வாலாஜா வரையிலான சாலை முறையான பராமரிப்பில் இல்லாதது குறித்து தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
மேலும், இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது மதுரவாயல்- வாலாஜா சாலையின் அவல நிலை குறித்த புகைப்பட ஆதாரங்கள் நீதிபதிகள் முன்பு சமர்ப்பிக்கப்பட்டது.
பல இடங்களில் விளக்குகள் எரியாத நிலை மற்றும் சாலைக்கு நடுவே செடி வளர்க்காதது உள்ளிட்ட குறைகளை நீதிபதிகளிடம் சுட்டிக் காட்டப்பட்டடது. தேசிய நெடுஞ்சாலையின் இந்த நிலையை பார்த்து நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
ஏன் சாலை பராமரிக்கப்படவில்லை என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, அடுத்த 10 நாட்களில் மதுரவாயல் - வாலாஜா சாலை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மதுரவாயல் - வாலாஜா இடையிலான இரண்டு சுங்கச் சாவடிகளில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தில் 50 சதவீதம் மட்டுமே வாகன ஓட்டிகளிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.
சென்னை - பெங்களூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலை தங்க நாற்கரத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய நான்கு முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக அமைக்கப்பட்ட இந்த தேசிய நெடுஞ்சாலை இந்தியாவின் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!