Just In
- 1 hr ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 3 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 6 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 8 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
Don't Miss!
- News போலி பத்திரம்.. ஆன்லைனிலேயே பத்திர மோசடியை கண்டுபிடிக்கலாமா? இதை கவனியுங்க.. தமிழக அரசு சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்தியாபோல் மோசமான மந்த நிலையில் சிக்கி தவிக்கும் சீனா.. இதற்கு காரணம் என்ன தெரிஞ்சா பதறிபோய்டுவீங்க
இந்தியாவை அடுத்து சீன வாகனத்துறையும் மிக மோசமான மந்தநிலையில் சிக்கி தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
உலகின் வாகனங்களுக்கான மிகப்பெரிய சந்தையாக இருந்து வந்த இந்தியா, கடந்த ஆண்டு மிகப்பெரிய விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்த வீழ்ச்சி இந்திய வாகன சந்தையின் வரலாற்றிலேயே இல்லாதளவிலான மிகப்பெரியாக சரிவாக சித்தரிக்கப்பட்டது.
இந்த மிகப்பெரிய வீழ்ச்சியில் இருந்து இந்தியாவின் மிகப்பெரிய ஜாம்பவான் நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள்கூட தப்பிக்கவில்லை.
இதனால், உற்பத்தியைக் குறைத்தல், தற்காலிகமாக தொழிற்சாலையை மூடுதல், நிரந்தரமில்லா பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்புதல் உள்ளிட்ட பலகட்ட நடவடிக்கையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபட்டன.
இதனால், பல லட்சம் பேர் வேலையை இழந்தனர். ஒரு சிலர் வாகன ஷோரூம்களை மூடிவிட்டு மாற்று தொழிலுக்கு விரைந்தனர். இதுபோன்ற பல்வேறு இக்கட்டான சூழ்நிலையை இந்திய வாகனத்துறைச் சந்தித்தது. இந்த மந்தநிலையை ஒரு சில நிறுவனங்கள் நடப்பாண்டிலும் சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், இந்திய வாகனத்துறை சந்தித்த இதே மாதிரியான வீழ்ச்சியை சீன வாகனத்துறையும் சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதற்கு உலக நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்தான் மூல காரணம் என கூறப்படுகின்றது.
கொரோனாவால் எப்படி வாகன சந்தை மந்த நிலையை அடையும் என்று தானே கேட்கிறீர்கள்... இதற்கான பதிலைதான் நாங்கள் உங்களுக்கு வழங்கவிருக்கும்.
உலக நாடுகள் அனைத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ், மிக எளிதில் சக மனிதர்களுக்கு பரவும் தன்மைக் கொண்டதாக உள்ளது. இதன்காரணமாகவே, இதன் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவின் வுஹான் நகரம் முழுமையாக அந்நாட்டில் இருந்து தனிமைப் படுத்தி, அடைக்கப்பட்டுள்ளது.
அந்நகரத்தில் வசிக்கும் பெரும்பாலான மனிதர்களை சீன அரசு வீட்டுடன் அடைத்து, சீல் வைத்திருக்கின்றது. கொரோனா வைரஸ் எளிதில் மற்றவர்களிடம் பரவாமல் இருப்பதற்கே இந்த கடுமையான நடவடிக்கையை சீனா கையாண்டு வருகின்றது.
தற்போதைக்கு, இந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என கூறப்பட்டு வரும்வேலையில், ஒரு சில தனியார் அமைப்புகள் எச்ஐவி மற்றும் மற்ற நோய் தடுப்பு மருந்துகளை வைத்து கொரோனாவிற்கு மாற்று மருந்து தயாரித்திருப்பதாக ஆறுதல் வார்த்தை கூறி வருகின்றன.
இந்த நோய் மிக வேகமாக பரவி வருவதன் காரணத்தால் சீனாவின் குறிப்பிட்ட நகரங்களில் வசித்து வரும் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. சில நகரங்களில் பொது போக்குவரத்து பயன்படுத்தாமல் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வுஹான் மற்றும் ஷாங்காய் நகரங்களைக் மையமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை முழுமையாக நிறுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், எம்ஜி போன்ற ஒரு சில நிறுவனங்களின் உற்பத்தி கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மேலும், வெவ்வேறு நாடுகளில் இயங்கும் அதன் உற்பத்தியாலைகளுக்கு தேவையான உபகரணங்கள் அனுப்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றது.
இந்நிலையிலேயே, கொரோனா வைரஸின் தாக்கத்தால் அந்நாட்டின் வாகனத்துறை 18 சதவீத விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம், இந்த விற்பனை வீழ்ச்சியை சீன வாகனத்துறை கடந்த 18 மாதங்களுக்கு மேலாக சந்தித்து வருவது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ச்சியாக, 19 வது மாதமாக கடந்த ஜனவரியிலும் இது விற்பனைச் சரிவைச் சந்தித்துள்ளது. ஆனால், இம்முறை கடந்த மாத வீழ்ச்சியைக் காட்டிலும் உச்சபட்சமாக 18 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.
இதுபோன்ற பல்வேறு காரணங்களால் அந்நாட்டில் இயங்கும் மிக முக்கியமான வாகன உற்பத்தி நிறுவனங்களான டாங்ஃபெங் மோட்டார் குழுமம் மற்றும் இதன் கூட்டணி உற்பத்தியாளரான ஹோண்டா மோட்டார்ஸ், ரெனால்ட் எஸ்ஏ மற்றும் பீஜோ உள்ளிட்ட நிறுவனங்கள் உற்பத்தியை கணிசமாக குறைத்திருக்கின்றன. இதில், எம்ஜி நிறுவனத்தின் தாய் நிறுவனமான செயிக் நிறுவனமும் அடங்கும்.