Just In
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 2 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்தியாவில் முதல் கார் மாடல் அறிமுகம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிஎஸ்ஏ குழுமம்!
இந்தியாவில் முதல் கார் மாடலை விற்பனைக்கு கொண்டு வருவது குறித்த முக்கிய அறிவிப்பை பிஎஸ்ஏ குழுமம் வெளியிட்டு இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ குழுமம் தனது சிட்ரோன் கார் பிராண்டுடன் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க முடிவு செய்தது. சிகே பிர்லா குழுமத்துடன் இந்திய வர்த்தகத்தை நிலைநாட்ட முடிவு செய்தது. கடந்த ஆண்டு சிட்ரோன் பிராண்டில் வர இருக்கும் முதல் மாடலாக சி5 ஏர்க்ராஸ் என்ற எஸ்யூவியையும் சென்னையில் நடந்த நிகழ்ச்சியின் மூலமாக இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வந்தது.
இந்த எஸ்யூவி வடிவமைப்பில் மிகவும் தனித்துவமாகவும், அதிக சிறப்பம்சங்களையும் பெற்றிருந்தது. மேலும், இந்தியர்களின் வாங்கும் திறனுக்கு தக்க பட்ஜெட்டிலும் எதிர்பார்க்கப்பட்டதால், பெரும் ஆவலை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னையால் இயல்பு வாழ்க்கை முடங்கி இருப்பதால், இந்தியாவில் தனது முதல் கார் மாடல் அறிமுகத்தை தள்ளி வைப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு பிற்பாதியில் சிட்ரோன் சி5 ஏர் க்ராஸ் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு பிஎஸ்ஏ குழுமம் திட்டமிட்டு இருந்தது. ஆனால், தற்போது கொரோனாவால் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சிட்ரோன் சி5 ஏர் க்ராஸ் எஸ்யூவியை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி, பொருளாதாரம் மேம்படும் நேரத்தில் கார் மாடலை அறிமுகம் செய்வதே சிறந்ததாக இருக்கும் என்று டீலர்களிடம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலில், கார் மாடலை அறிமுகம் செய்வது உசிதமாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காலத்தை மனதில் வைத்து பணியாளர்கள், டீலர்கள், முதலீட்டாளர்கள் அனைவரின் பாதுகாப்புக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படுவதாகவும், பணியாளர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதற்கும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையிலுள்ள அலுவலகம், திருவள்ளூரில் உள்ள கார் ஆலை மற்றும் ஓசூரில் உள்ள எஞ்சின் உற்பத்தி ஆலைகள் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. நிலைமை பொறுத்து ஆலைகளை திறப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.
இதனிடையே, சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி டிசைன், எஞ்சின், வசதிகள் என அனைத்திலும் இந்தியர்களை வெகுவாக கவரும் வகையில் இருக்கும் என்று தெரிகிறது. எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களின் சந்தையை குறிவைத்து இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!