Just In
- 3 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 4 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 6 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 12 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலைகாட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கேரளாவை ரோல் மாடலாக காட்டி புதிய விதியை அமல்படுத்திய மாநிலம்... எந்த மாநிலம் - அது என்ன விதி என தெரியுமா..?
கேரளாவை ரோல் மாடலாகக் காட்டி புதிய விதி ஒன்றை குறிப்பிட்ட மாநிலம் ஒன்று அமல்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
வாகனங்கள் சார்ந்து ஒவ்வொரு நாளும் புதிய புதிய சட்டங்களும், விதிகளும் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தற்போது வாகனங்களின் இருப்பிடத்தை கண்டறியக் கூடிய ஜிபிஎஸ் தொழில்நுட்ப கருவியை இந்தியாவின் குறிப்பிட்ட மாநிலம் ஒன்று கட்டாயப்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநில அரசே இந்த புதிய விதியை அறிவித்துள்ளது. இந்த புதிய விதி வணிக ரீதியாக இயங்கும் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். இதன்படி, கால் டாக்சி சேவையில் ஈடுபடுத்தப்படும் வாகனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள், சுற்றுலாப் பேருந்துகள், லாரிகள் மற்றும் டிரக்குகள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக வாகனங்களில் இது கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில போக்குவரத்து ஆணையர் அவினாஷ் தக்னே கூறியதாவது, "ஜிபிஎஸ் கருவிகள் வாகனங்களின் நடமாட்டத்தைக் கண்கானிக்க உதவும். மேலும், போக்குவரத்து விதிமீறல்களை குறைக்கவும் இது உதவும். தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது. அங்கு ஜிபிஎஸ் கருவியின் மூலம் செய்த கண்காணிப்பில் பல முறைகேடான ஓட்டுநர்கள் கண்டறியப்பட்டிருக்கின்றனர்"
"இதனை மாநிலத்தில் செயல்படுத்துவதன் மூலம் இங்கும் விதிமீறல்கள் கட்டுக்குள் கொண்டுவரப்படும். மேலும், வாகனங்களையும் எளிதில் கண்கானிக்க முடியும். ஒரு வாகனம் நெடுஞ்சாலையில் வேகமாகச் செல்கிறதா அல்லது விதிகளை மீறி செயல்படுகிறதா என்பதை மிக சுலபமாக அறிந்து கொள்ள முடியும்".
"அவ்வாறு, ஓர் வாகனம் விதிமீறலில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அதே வழியில் இருக்கும் போக்குவரத்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்படும். அவர் உடனடியாக வாகனத்தைக் கண்டறித்து அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பார். இது பெரும் குற்ற சம்பவங்களைக் கூட களையெடுக்க உதவும்" என்றார்.
இந்த புதிய விதியைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களையும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களின் மூலமாக மட்டுமே ஜிபிஎஸ் கருவி வாங்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த கருவிகள் நேரடியாக மஹாராஷ்டிரா போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும். அங்கு வாகனங்கள் அனைத்து இயக்கமும் கண்கானிக்கப்பட இருக்கின்றது.
இந்த கருவியைப் பொருத்தவதன் மூலம் வாகனதிருட்டு போன்ற கசப்பான சம்பவங்களைக் கூட தடுக்க முடியும். எனவேதான் தற்போது விற்பனைக்கு வரும் புதிய வாகனங்களி இந்த கருவியை வாகன உற்பத்தி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன.
அந்தவகையில், குறிப்பாக புதிதாக விற்பனைக்கு வரும் மின்சார வாகனங்களில் இக்கருவி கட்டாயம் இடம்பெற்றுவிடுகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோன்று புதுமுக விலையுயர்ந்த கார்களிலும் இக்கருவி இடம்பெற்றுவிடுகின்றது. அதேசமயம், சந்தையில் மிக குறைந்த விலையில் இக்கருவிகள் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன.
குறிப்பு: புகைப்படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை.
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!