Just In
- 28 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 39 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 3 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Movies ஹீரோ மாதிரி இருக்கும் அப்பாஸ் மகன்.. களத்தில் இறங்கிடுவாரோ.. ட்ரெண்டாகும் புகைப்படம்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
கொரோனா எஃபெக்ட்... கார் உதிரிபாகங்களை சூட்கேஸ்களில் எடுத்து வரும் ஜாகுவார் லேண்ட்ரோவர்!
கொரோனா வைரஸ் பாதிப்பால், கார் தயாரிப்புக்கான உதிரிபாகங்களை சூட்கேஸ்களில் வைத்து எடுத்து வருவதாக ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் வேகமாக பரவிய கொரோனா வைரஸ் உயிர்கொல்லி தொற்று நோயால், இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் கொரோனோ வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் தாக்கம் இப்போது உலக அளவில் எதிரொலிக்க துவங்கி இருக்கிறது. உலகின் அனைத்து முன்னணி கார் நிறுவனங்களுக்கும் பல முக்கிய உதிரிபாகங்கள் சீனாவிலிருந்துதான் பெறப்படுகின்றன.
இந்த சூழலில், அங்கு ஆலைகள் தொடர்ந்து மூடப்பட்டு இருப்பதால், உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் ஆலைகளுக்கு உதிரிபாகங்கள் சப்ளை தடைபட்டுள்ளது. இதனால், பல முன்னணி நிறுவனங்களின் கார் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை எழுந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்பட்டு வரும் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் இதுகுறித்து தனது கவலையை வெளிப்படுத்தி இருக்கிறது. அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரால்ஃப் ஸ்பெத் கூறுகையில்,"அடுத்த இரண்டு வாரங்களுக்கான உதிரிபாகங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதற்கடுத்த வாரத்திற்கான உதிரிபாகங்கள் போதுமான அளவு இல்லை. சீனாவிலிருந்து கார் உதிரிபாகங்களை சூட்கேஸ்களில் வைத்து விமானம் மூலமாக எடுத்து வருகிறோம். இதன்மூலமாக, தற்காலிகமாக கார் உற்பத்தி பணிகளில் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்கிறோம். இதே நிலை நீடித்தால், நிச்சயம் கார் உற்பத்தி முடங்கும் வாய்ப்புள்ளது.," என்று தெரிவித்துள்ளார்.
சீன உதிரிபாகங்கள் சப்ளை பிரச்னையால், இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் செயல்பட்டு வரும் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆனால், இந்திய ஆலைகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று கருதுகிறோம் என்று டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கன்ட்டெர் பட்செக் தெரிவித்துள்ளார்.
சீனாவில் எழுந்துள்ள நெருக்கடியான நிலையையும், கார் உற்பத்தியில் எழும் சிக்கல்கள் குறித்தும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். தேவைப்பட்டால், உற்பத்தி பணிகளில் புதிய முறைகளை கடைபிடிக்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, ஃபியட் க்றைஸ்லர், ஜேசிபி எந்திர உற்பத்தி நிறுவனம், ஆப்பிள் ஐபோன் நிறுவனங்களும் சீன உதிரிபாகங்கள் தட்டுப்பாட்டால் உற்பத்தி பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கவலை தெரிவித்துள்ளன.
சீனாவில் செயல்பட்டு வரும் பல கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது ஆலைகளை மூடி வைத்துள்ளன. அடுத்த வாரத்தில் கார் ஆலைகளை திறக்க ஹோண்டா உள்ளிட்ட சில நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. படிப்படியாக உற்பத்தியை சீராக்குவதற்கு திட்டமிட்டுள்ளன.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!