Just In
- 1 hr ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 1 hr ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 2 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 3 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு... ஸ்தம்பித்து நிற்கும் ஆசியாவின் 'டெட்ராய்ட்'!
கொரோனா வைரஸ் பிரச்னையால் தமிழகத்தில் ஆட்டோமொபைல் துறை பெரும் இழப்பையும், பாதிப்புகளையும் சந்தித்து வருகிறது.
கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்படுத்தி உள்ள பொருளாதார இழப்புகள் சொல்லி மாளாத அளவு ஏற்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழியாக ஊரடங்கு எனும் ஆயுதத்தை அனைத்து நாட்டு அரசுகளும் கையில் எடுத்துள்ளன.
ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!இந்த நிலையில், நம் நாட்டில் அமல்படுத்தப்பட்டு இருந்த 21 நாள் ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வர இருக்கிறது. இதனால், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநில அரசுகள் ஊரடங்கு காலத்தை நீட்டித்து வருகின்றன. அந்த வகையில், தமிழகத்திலும் ஊரடங்கு காலம் வரும் 30ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
ஊரடங்கு நீட்டிப்பால் அனைத்து தரப்பு மக்களும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். அதேபோன்று, சிறு, குறு தொழில்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை இந்த கொரோனா பிரச்னையால் பெரும் பாதிப்பை சந்தித்து இருக்கின்றன.
இந்த நிலையில், தமிழக பொருளாதாரத்திலும், வேலை வாய்ப்பிலும் பெரும் பங்களிப்பை ஆட்டோமொபைல் துறை வழங்கி வருகிறது. குறிப்பாக, சென்னையை சுற்றி உலகின் முன்னணி கார், பைக் நிறுவனங்களும், அதன் சார்புடைய உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன.
ஹூண்டாய் மோட்டார், பிஎம்டபிள்யூ, ஃபோர்டு, ரெனோ - நிஸான் உள்ளிட்ட கார் நிறுவனங்களும், ராயல் என்ஃபீல்டு, யமஹா உள்ளிட்ட இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களும் இங்குதான் செயல்பட்டு வருகின்றன. பாரத் பென்ஸ் உள்ளிட்ட கனரக வாகன உற்பத்தி ஆலைகளும் செயல்பட்டு வருகின்றன.
மேலும், இந்தியாவில் 30 சதவீத நான்கு சக்கர வாகனங்கள் சென்னையில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதேபோன்று, நாட்டின் மொத்த வாகன ஏற்றுமதியில் 50 சதவீதத்திற்கும் மேலான பங்களிப்பை சென்னை பெற்றிருக்கிறது.
சென்னை மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் செயல்படும் வாகன உற்பத்தி நிறுவனங்களில் பல லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில், கொரோனா பிரச்னையால் போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, சென்னையை சுற்றி உள்ள ஆலைகளில் வாகன உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 20ந் தேதி வரை ஓரளவு உற்பத்தி நடந்தது. ஆனால், இந்த மாதம் ஊரடங்கு முழுவதுமாக இருப்பதால், ஒரு வாகனம் கூட உற்பத்தி செய்ய இயலாத நிலையில் வாகன நிறுவனங்கள் உள்ளன. இதனால், பல்லாயிரம் கோடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று, இந்த நிறுவனங்களில் பணியாற்றுவோரும் பெரும் சிக்கல்களையும் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆட்குறைப்பு நடவடிக்கையை வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால், தற்காலிக பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்படும் அவல நிலை ஏற்படும்.
வாகன உற்பத்தி ஆலைகளை நம்பி இருக்கும் பிற வர்த்தக நிறுவனங்களும் பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலை உருவாகி இருக்கிறது. சிறிய பெட்டிக் கடை முதல் போக்குவரத்து சேவையை வழங்கி வரும் நிறுவனங்கள் வரை பெரும் பாதிப்பையும், வேலை பறிப்பு பிரச்னையையும் ஏற்படுத்தும் நிலை உருவாகி இருக்கிறது.
ஒருபுறம் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டாலும், மறுபுறத்தில் தங்களால் முயன்ற அனைத்து உதவிகளையும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. முக கவசங்கள் உற்பத்தி, வென்டிலேட்டர் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.
அடுத்த மாத மத்தியிலிருந்து கொரோனா பாதிப்பிலிருந்து விடுபடுவோம் என்ற நம்பிக்கையுடன் அனைத்து தரப்பு மக்களும், வர்த்தக ஸ்பானங்களும் காத்திருக்கின்றன. மேலும், பொருளாதார இழப்பிலிருந்து படிப்படியாக மீள்வதற்கும் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பிரச்னையிலிருந்து சரி செய்து மீள்வதற்கு ஓர் ஆண்டுக்கு மேல் ஆகும் என்று தெரிகிறது.
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!