ஊரடங்கிலும் அடங்காத காளையர்கள்.. ஒரே விதிமீறலில் ஈடுபட்ட 4.5 லட்சம் பேர்.. வியப்பில் காவல்துறை!
போலீசுக்கே ஷாக் கொடுக்கும் வகையில் ஒரே விதிமீறலில் 4.5 லட்சம் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தின் இறுதியில் தொடங்கிய ஊரடங்கு உத்தரவு ஒரு மாதங்களைக் கடந்து இன்றளவும் நீடித்து வருகின்றது. இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில், தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு புதிய வெர்ஷனில் நீட்டிக்கப்படலாம் என்ற அதிர்ச்சியான தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது.

இதற்கு, முந்தைய காலங்களில் இருந்ததைக் காட்டிலும் பல மடங்கு வீரியத்துடன் உயிர் கொல்லி கொரோனா வைரஸ் பரவி வருவதே முக்கிய காரணமாக உள்ளது.
குறிப்பாக, இந்த வைரஸ் சமூக பரவலை ஏற்படுத்தாத வண்ணம் இருக்க வேண்டும் என்பதற்காகவே, கசப்பான அனுபவமாக இருந்தாலும் இந்த ஊரடங்கு உத்தரவை மத்திய மற்றும் மாநில அரசுகள் நீட்டித்து வருகின்றன.

ஆனால், ஒரு சிலர் அரசின் இந்த நோக்கத்தை நீர்த்துபோக செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவை மீறி ஜாலியாக வலம் வந்த வண்ணம் இருக்கின்றனர். இதுபோன்று வெளியில் சுற்றி திரிபவர்கள்மீது போலீஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதிலும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றுபவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை வெற லெவல் ஆக்சனாக இருக்கின்றது.

இந்நிலையில், ஒரே மாதிரியான விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி போலீஸார் 4.5 லட்சம் வாகன ஓட்டிகளுக்கு அபராத செல்லாணை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி காவல்துறை தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையிலேயே இந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதாவது மற்ற மாநில போலீசார்களைப் போலவே டெல்லி காவல்துறையினரும், ஊரடங்கு உத்தரவின்போது மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கும் விதமான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருபவர்களைத் தண்டிப்பதற்காக பல நூதன யுக்திகளை அவர்கள் கையாண்டனர். அந்தவகையில், மேற்கொள்ளப்பட்டதில் ஒன்றுதான் அபராத செல்லாண்.

இந்த அபராத செல்லாண் பல விதமான விதமீறல்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் அதிக வேகத்திற்கு வழங்கப்பட்ட செல்லாண் மட்டும் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றது. லாக்டவுண் ஆரம்ப தினத்தில் இருந்து தற்போது வரை 4,54,438 பேருக்கு அதிக வேகத்தில் சென்ற விதிமீறலுக்காக அபராத செல்லாண் வழங்கப்பட்டிருக்கின்றது.

இது, டெல்லி போலீசாருக்கே ஷாக்கான தகவலாக அமைந்துள்ளது. இந்த அபராத செல்லாண்கள் மூலம் ரூ. 90 கோடி அபராதம் ஈட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இது மிக கடந்த காலங்களைக் காட்டிலும் மிக அதிகம் ஆகும்.இது, டெல்லி போலீசாருக்கே ஷாக்கான தகவலாக அமைந்துள்ளது. இந்த அபராத செல்லாண்கள் மூலம் ரூ. 90 கோடி அபராதம் ஈட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இது மிக கடந்த காலங்களைக் காட்டிலும் மிக அதிகம் ஆகும்.

இதில், அபராத செல்லாணைப் பெற்ற ஒரு சிலர், ஊரடங்கு உத்தரவு இருப்பதால் நாங்கள் வெளியே செல்லவில்லை. இருப்பினும், அபராத செல்லாண் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என புகார் தெரிவித்துள்ளனர். வாகன ஓட்டிகளின் இந்த குற்றச்சாட்டிற்கு டெல்லி காவல்துறையிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.

தற்போது நகரத்தின் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி இருப்பதன் காரணத்தினால் பலர் வாகனத்தை அதி வேகமாக இயக்குகின்றனர். அவர்களை கட்டுப்படுத்தவே இத்தகைய அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், "தற்போது வழங்கப்பட்டிருக்கும் பல செல்லாண்கள் நகரத்தின் சாலைகளில் பொருத்தப்பட்டிருக்கும் தானியங்கி கேமிராக்கள் மூலமே வழங்கப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்தார். இதனை, ஆன்லைன் மூலமாக செலுத்தலாம் என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








