Just In
- 1 hr ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 3 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 4 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 4 hrs ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆசியாவில் முதல்முறையாக... பொது சாலைகளில் ரோபோ டாக்சிகள் சோதனை ஓட்டம்!
ஆசிய கண்டத்தில் முதல்முறையாக ரோபோ டாக்சிகள் பொது சாலைகளில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பான முழுமையான விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.
ஓட்டுனர் துணை இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும் கார் உள்ளிட்ட வாகனங்களை உருவாக்கும் ஆராய்ச்சிகள் உலக அளவில் நடந்து வருகின்றன. வாகன நிறுவனங்கள் மட்டுமின்றி, தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஜாம்பவான் நிறுவனங்களும் வாகனங்களுக்கான தானியங்கி தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றன.
சில நிறுவனங்கள் தானியங்கி தொழில்நுட்பம் கொண்ட வாகனங்களை பொது சாலைகளில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தி வருகின்றன. ஆனால், நகர்ப்புறத்தில் இந்த சோதனை ஓட்டம் நடத்துவதற்கு குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே மிகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில், லெவல்-5 எனப்படும் மேம்பட்ட தானியங்கி தொழில்நுட்பம் கொண்ட கார்களை அலிபாபா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆட்டோஎக்ஸ் நிறுவனம் சோதனை ஓட்டம் நடத்தி வருகிறது.
சீனாவிலுள்ள சென்ஸென் நகரில் பொது சாலைகளில் வைத்து இந்த ரோபோ டாக்சிகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. ஆசியாவில் முதல்முறையாக லெவல் 5 தானியங்கி தொழில்நுட்பம் கொண்டதாக இந்த ரோபோ டாக்சி சோதனைத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.
சோதனை ஓட்டம் தொடர்பாக வீடியோ ஒன்றையும் ஆட்டோஎக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், சாலையோரம் விதிமீறி நிறுத்தப்பட்டு இருக்கும் கார்கள், டிரக்குகளை அடையாளம் கண்டு பாதுகாப்பாக இந்த தானியங்கி தொழில்நுட்பம் இயக்குவது ஆகச் சிறந்த விஷயமாக பார்க்கப்படுகிறது.
அதேபோன்று, சாலையை கடக்கும் பாதசாரிகள், சாலை கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள பாதுகாப்பற்ற யூ-டர்ன் எடுக்க வேண்டிய இடங்களையும் துல்லியமாக கண்டறிந்து முன்னேறி செல்கிறது.
இதுவரை நெடுஞ்சாலைகளில் செல்வதற்கான தானியங்கி தொழில்நுட்பங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால், நகர்ப்புறத்தில் உள்ள சிக்கல்கள், பாதுகாப்பை கருத்தில்கொண்டு அனுமதிக்கப்படவில்லை. ஆனால், தற்போது இந்த ஆட்டோஎக்ஸ் ரோபோ டாக்சி சிறப்பாக அனைத்து சூழல்களையும் கையாள்வதால் ஓர் முழுமையான தானியங்கி வாகனத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வேமோ நிறுவனம் பயன்படுத்தும் அதே ஃபியட் க்றைஸ்லர் பசிபிக்கா என்ற கார் மாடல்களையே, ஆட்டோஎக்ஸ் நிறுவனமும் பயன்படுத்துவதாக தெரிகிறது. இந்த கார்களில் அதி உயர்தரத்தில் பதிவுகளை வழங்கும் கேமராக்கள், ரேடார் சிஸ்டம், ஆபத்துக்களை முன்கூட்டியே கண்டறிந்து செயல்படுவதற்கான சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த சோதனை ஓட்டங்கள் வெற்றி பெறும் பட்சத்தில், அடுத்த சில ஆண்டுகளில் சீனாவின் டாக்சி போக்குவரத்தில் இந்த ரோபோ டாக்சிகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதைத்தொடர்ந்து, பிற நாடுகளிலும் இந்த கார்கள் விரைவாக பயன்பாட்டிற்கும் கொண்டு வர அனுமதி பெற முடியும்.
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!