கொரோனா அச்சம்... ஒரே நாளில் 4 முறை டெஸ்ட் செய்த பிரபலம்... இவர் யாருனு தெரிஞ்ச மெர்சலாய்டுவீங்க!
கொரோனா அச்சம் காரணமாக ஒரே நாளில் நான்கு முறை ஓர் முக்கிய பிரபலம் கோவிட்-19 வைரஸ் பரிசோதனைச் செய்திருக்கின்றார். அவர் யார் என்பது பற்றிய தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மக்கள் சகஜ நிலைக்கு திரும்பினாலும் கொரோனா வைரஸ் அச்சம் தற்போதும் அவர்கள் மத்தியில் நீடித்த வண்ணம் இருக்கின்றது. வைரஸ் தொற்றிற்கான மாற்று மருந்து தற்போது வரை முழுமையாக பயன்பாட்டிற்கு வராத காரணத்தால் மக்களை பாதுகாப்புடன் இருந்துக் கொள்ளுமாறு அரசுகள் வழி நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், பிரபல கார் நிறுவனத்தின் சிஇஓ, ஒரே நாளில் நான்கு முறை கோவிட்-19 வைரஸ் பரிசோதனையைச் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர், யார் என்றுதானே கேட்கிறீர்களா?, பிரபல டெஸ்லா மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க்தான் அவர்.

இவரே ஒரே நாளில் நான்கு முறை கோவிட்-19 பரிசோதனைச் செய்தவர். அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் கார் உற்பத்தி நிறுவனங்களில் டெஸ்லாவும் ஒன்று. இந்த நிறுவனம் மின்சார கார் உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.

டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்புகள் புகழ்வாய்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தயாரிப்புகளையே விற்பனையில் ஓரம் கட்டி வருகின்றன. அந்தளவிற்கு உலக நாடுகளில் இந்த நிறுவனத்தின் மின்சார கார்கள் அசூர வளர்ச்சியை அடைந்து வருகின்றன.

இத்தகைய புகழ்மிக்க நிறுவனத்தின் தலைவராக இருக்கும் எலன் மஸ்கே, தன்னை நான்கு முறை பரிசோதனையில் ஈடுபடுத்தியிருக்கின்றார். இவர் மேற்கொண்ட வைரஸ்குறித்த பரிசோதனையில், நான்கில் இரண்டு அவருக்கு நோய் தொற்று இருப்பதாகவும், மற்ற இரண்டு நோய் தொற்று இல்லையென்றும் முரண்பாடான முடிவுகளை வெளியிட்டிருக்கின்றது.

இதனால் குழப்பமடைந்த அவர் பரிசோதனைகள் போலியானது என்ற கருத்த சமூக வலைதளம் வாயிலாக கூறியுள்ளார். இவர் பரிசோதனைச் செய்ய வெவ்வேறு ஆய்வகங்களைப் பயன்படுத்தியதாக அந்த பதிவில் கூறியிருக்கின்றார்.

கடந்த சில நாட்களாக ஜலதோசம் இவரை வாட்டி வதைத்தை அடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. ஆனால், தன்னைக் குழப்பமடையச் செய்யும் வகையில் அதன் முடிவுகள் வெளியாகியிருப்பதாக வேதனைத் தெரிவித்தார்.

தற்போது வரை ஜலதோசம் மட்டுமே இருப்பதாகவும், அசாதாரணமான அறிகுறிகள் எதுவும் தனக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். உலக நாடுகள் பலவற்றில் தற்போதும் கொரோனா வைரஸ் மிக தீவிர தன்மையுடன் பரவி வருகின்றது. தமிழகத்தில் முன்பைக் காட்டிலும் தற்போது பரவல் எண்ணிக்கைச் சற்று குறைவாகவே இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
குறிப்பு: புகைப்படங்கள் சில உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








