Just In
- 28 min ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 2 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 3 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 3 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- News கரன்ட் இல்லாத நேரங்களிலும் இயங்குவதுதான் இன்வெர்ட்டர் ஏசியா?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Movies பீரியட்ஸ் நேரத்தில் அதை குடிக்க மாட்டேன்.. நான் ரொம்ப சுயநலக்காரி.. பிகில் நடிகை பகீர்!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
கார்களை போன்று பஸ்களிலும் நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கட்டாயமாகிறது!
சாலைப் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, பஸ்களில் நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களை கட்டாயமாக்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
உலகிலேயே அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
குறிப்பாக, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சராக இருந்து வரும் நிதின் கட்காரி சாலைப் பாதுகாப்புக்கான திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், கார், இருசக்கர வாகனங்களில் பல பாதுகாப்பு தொழில்நுட்பங்களை கட்டாயமாக்குவதற்கான முயற்சிகளில் வெற்றி கண்டிருக்கிறார்.
இந்த சூழலில், தற்போது கனரக வாகனங்களிலும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதன்படி, பஸ்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் பிரேக் அசிஸ்ட் தொழில்நுட்பங்களை கட்டாயமாக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்த பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் பஸ்களை விற்பனை செய்வதை கட்டாயமாக்குவதற்கான முடிவும் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மேலும், வரும் அக்டோபர் மாதம் முதல் குறிப்பிட்ட வகை வாகனங்களில் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டத்தை கட்டாயமாக்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
வாகனங்களுக்கான பரிமாணம் மறறும் தர நிர்ணயம், கட்டுமானத் துறை பயன்பாட்டு வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள், இருசக்கர வாகனங்களுக்கான பாதுகாப்பு அம்சங்களுக்கான புதிய பாதுகாப்பு வழிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.
அவசர சமயங்களில் வாகனங்களில் திடீரென பிரேக் பிடிக்கும்போது, ஒவ்வொரு சக்கரத்திற்கும் சரியான விகிதத்தில் பிரேக் பவரை அனுப்புவதை கட்டுப்படுத்துவதுடன், எஞ்சின் சுழல் வேகத்தை குறைக்கும் தொழில்நுட்பம்தான் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் தொழில்நுட்பம். இதன்மூலமாக வாகனத்தின் நிலைத்தன்மை வெகுவாக தக்கவைக்கப்படும்.
அதேபோன்று, பிரேக் அசிஸ்ட் தொழில்நுட்பமும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் இணைந்து செயல்பட்டு அவசர சமயங்களில் அதிக பிரேக் பவரை செலுத்தி மிக குறைவான தூரத்தில் வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு உதவி புரியும். டயரில் இருக்கும் காற்றழுத்தத்தை எளிதாக கண்டறியவும், காற்றழுத்தவும் குறைவது குறித்த எச்சரிக்கும் வசதியை டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் வழங்குகிறது.
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?