Just In
- 2 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 2 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 3 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 4 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நம்ம சன்னி லியோனுக்கு அப்புறம் இவங்தான் டிரெண்ட்... இவங்க இப்படி செய்வாங்கனு யாருமே எதிர்பார்க்கல!
பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சியான சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
நாம் தற்போது நாடு தழுவிய ஊரடங்கின் மூன்றாம் கட்டத்தில் இருக்கின்றோம். இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் நீட்டிக்கப்படலாம் என்ற அச்சமான சூழ்நிலையே மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. அண்மைக் காலங்களாக மிக தீவிரமாக உயர்ந்து வரும் கொரோனா வைரசின் பாதிப்பே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
மூன்றாம் கட்ட தடையுத்தரவை அமலுக்குக் கொண்ட மத்திய அரசு, அத்துடன் லேசான தளர்வையும் குறிப்பிட்ட துறைகளுக்கு வழங்கியது.
நாட்டின் பொருளாதாரத்தை மனத்தில் கொண்டு அளிக்கப்பட்ட இந்த தளர்வினால் பச்சை மண்டலங்களாக கருதப்படும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பித்துள்ள பகுதிகள் மட்டுமே லேசான இயக்க நிலைக்கு திரும்பியிருக்கின்றன.
இருப்பினும், மக்களின் வழக்கமான நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையேக் காணப்படுகின்றது. ஆகையால், போலீஸார் ஆங்காங்கே தடைகளை அமைத்து தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, வீணாக வெளியில் சுற்றி திரியும் பொதுமக்கள் மீது அவர்கள் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கையில் ஒரு சில நேரங்களில் முக்கிய பிரபலங்கள் சிலரும் சிக்கிக் கொள்கின்றனர். அந்தவகையில், தற்போது இந்தியாவின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்துக் கொண்டிருக்கும் பூனம் பாண்டே, லாக் டவுணை மீறி வெளியே சுற்றியக் காரணத்திற்காக போலீசாரால் தண்டிக்கப்பட்டுள்ளார்.
கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு அடுத்தபடியாக இந்திய இளைஞர்களின் மனதைக் கொள்ளையடிக்கும் நடிகை மற்றும் மாடலாக இருந்து வருகின்றார் பூனம் பாண்டே. இவர் தற்போது, மஹாரஷ்டிரா மாநிலம், மும்பையில் வசித்து வருகின்றார்.
இவர் மீதுதான் போலீஸார் தற்போது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மேலும், அரசின் உத்தரவை மீறி வெளியேச் சுற்றித் திரிந்ததன் காரணத்தினால் அவருடைய விலையுயர்ந்த சொகுசு காரையும் (பிஎம்டபிள்யூ 5 செரீஸ்) போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
செடான் ரகத்திலான இந்த காரில் பூனம் பாண்டே மற்றும் அவரது நண்பர்கள் இருவர் ஜாலி ரைடு செய்துக் கொண்டிருந்தபோது மும்பை போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் பூனம் பாண்டே மட்டுமின்றி அவருடைய நண்பர்கள் இருவர் மீதும் போலீஸார் வழக்கு பதிந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக, அவர்கள்மீது 269 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி-188ன் கீழும் பூனம் பாண்டே மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதாவது, உயிருக்கு ஆபத்தான வைரசை பரப்பும் விதமாக செயல்பட்டது மற்றும் அரசு உத்தரை கீழ்ப்படியாதது உள்ளிட்ட காரணங்களுக்காக பூனம் பாண்டே மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
பூனம் பாண்டே மீதான இந்த நடவடிக்கை, அவரின் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒரு சிலர் ஊரடங்கு உத்தரவு நேரத்தில் மக்கள் பெரும்பாலனோர் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும்நிலையில், பூனம் வெளியே வந்தக் காரணத்திற்காக வசைப்பாடிய வண்ணம் இருக்கின்றனர்.
மேலும், போலீசாரின் நடவடிக்கைக்கு வரவேற்பையும் அளித்து வருகின்றனர். பூனம் பாண்டே இதுபோன்று சர்ச்சையில் சிக்குவது முதல் முறையல்ல. முன்னதாக பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கியிருக்கின்றார். அதற்காக நெட்டிசன்களிடம் பலமுறை வாங்கிக்கட்டியும் கொண்டுள்ளார்.
அதேசமயம், லாக்டவுண் விதிமீறலுக்கு வாகனத்தை பறிமுதல் செய்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக பலரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர். இதில், சில முக்கிய பிரபலங்களின் கார்களும் அடங்கும்.
அந்தவகையில், சமீபத்தில் தெலங்கானா மாநில போலீஸார் 1.2 லட்சம் வாகனங்களை விதிமீறிய குற்றத்திற்காக பறிமுதல் செய்ததாக தகவல் வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதேபோன்று, தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிந்த அரசியல்வாதிகள் சிலரின் வாகனங்களையும் போலீஸார் கைப்பற்றிய சம்பவங்கள் சமீபத்தில் அரங்கேறியிருக்கின்றது. வைரஸ் பரவலைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொருவரையும் வீட்டுக்குள்ளேயே தங்குமாறு அரசும், காவல்துறையும் வலியுறுத்தி வருகின்றது.
இருப்பினும், பலர் வெளியே நடமாடிய வண்ணமே இருக்கின்றனர். இதன் விளைவாக கொரோனா வைரஸ் முந்தையக் காலங்களைக் காட்டிலும் மிக அதி வேகமாக தொற்றைப் பரப்பி வருகின்றது. அதுமட்டுமின்றி, மே17 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கும் வகையில் பரப்பும் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றது.