Just In
- 33 min ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 1 hr ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 1 hr ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 4 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
Don't Miss!
- News இத்தனை நாளா எங்க போனீங்க? ஓட்டுக்கேட்க போன ஜோதிமணிக்கு கரூரில் எதிர்ப்பு! சமாளித்த திமுக
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
இந்தியாவுக்கு எலெக்ட்ரிக் கார்.. ஜீப் நிறுவனத்தின் திட்டம் இதுதான்!
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்வது குறித்த திட்டத்தை ஜீப் நிறுவனம் பகிர்ந்து கொண்டுள்ளது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. ஹூண்டாய் கோனா, எம்ஜி இசட்எஸ், டாடா நெக்ஸான் ஆகிய எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால், பிற கார் நிறுவனங்களும் எலெக்ட்ரிக் கார் அறிமுகத்தில் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்த நிலையில், எலெக்ட்ரிக் கார் அறிமுகம் குறித்து ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் இந்தியப் பிரிவு தலைவர் பார்த்தா தத்தா மணிகன்ட்ரோல் பத்திரிக்கைக்கு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், "உலகளாவிய கார் சந்தையை மனதில் வைத்து ஃபியட் க்றைஸ்லர் குழுமம் எலெக்ட்ரிக் கார் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆனால், இந்தியாவுக்காக பிரத்யேக எலெக்ட்ரிக் கார் மாடல்களை உருவாக்கும் பணிகள் எதுவும் நடக்கவில்லை. எனினும், எங்களிடம் எலெக்ட்ரிக் காருக்கான தொழில்நுட்பம் உள்ளது.
இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான புதிய கார் மாடல்களில் எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் கொண்டு வருவதற்கான திட்டம் உள்ளது. இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பை கூர்ந்து கவனித்து வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் கீழ் ஃபியட் மற்றும் ஜீப் பிராண்டுகளில் கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில், ஃபியட் நிறுவனத்தின் விற்பனை படுமோசமாக இருப்பதால், விரைவில் ஃபியட் பிராண்டு இந்திய சந்தையிலிருந்து விலக்கப்பட இருக்கிறது.
ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் முழு கவனமும் ஜீப் கார்களை விற்பனை செய்வது நோக்கி செல்ல இருக்கிறது. அதன்படி, ஜீப் நிறுவனத்தின் பிராண்டிலேயே புதிய எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
தற்போது காம்பஸ், காம்பஸ் ட்ரெயில்ஹாக், ரேங்லர், கிராண்ட் செரோக்கீ, கிராண்ட் செரோக்கி எஸ்ஆர்டி உள்ளிட்ட கார் மாடல்களை ஜீப் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. மேலும், ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் புதிய எஸ்யூவி மாடல்களை கொண்டு வருவதற்கும் திட்டமிட்டுள்ளது.
ஃபியட் பிராண்டில் விலை குறைவான பட்ஜெட் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் வருவதற்கு வாய்ப்பில்லை என்றே நம்பலாம். இந்திய சந்தையை தொடர்ந்து உற்று கவனித்து பல புதிய மாடல்களை கொண்டு வர இருப்பதாக ஃபியட் க்றைஸ்லர் குழுமம் தெரிவித்துள்ளது.
Source: Moneycontrol
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!