கொரோனாவை கண்டு அஞ்சாத ஃபெராரி... மீண்டும் கார் உற்பத்தியை துவங்க நாள்குறித்தது!
இத்தாலியில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், மீண்டும் கார் உற்பத்தியை துவங்குவதற்கு ஃபெராரி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இத்தாலியை சேர்ந்த ஃபெராரி கார் நிறுவனம் சூப்பர் கார் தயாரிப்பில் உலக அளவில் மிகவும் பிரலமானதாக உள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னையால் இத்தாலி பெரிய அளவில் பாதிப்பையும், உயிரிழப்புகளையும் சந்தித்து வருகிறது.

அங்கு இதுவரை 86,500 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். இன்று வரை 9,134 பேர் கொரோனாவின் கோரப்பசிக்கு உயிரை பறிகொடுத்துவிட்டனர்.

அங்கு இதுவரை 86,500 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். இன்று வரை 9,134 பேர் கொரோனாவின் கோரப்பசிக்கு உயிரை பறிகொடுத்துவிட்டனர்.

கொரோனா பிரச்னையால் அதிகரித்த நிலையிலும், தொடர்ந்து கார் உற்பத்தி செய்து வந்தது ஃபெராரி. ஆனால், கடந்த 15ந் தேதி முதல் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தது. மேலும், கொரோனா பிரச்னை அங்கு நாளுக்கு நாள் தீவிரமாகவே இருந்து வருகிறது.

இந்த சூழலில், அடுத்த மாதம் 14 முதல் இத்தாலியில் உள்ள தனது ஆலையில் கார் உற்பத்தியை துவங்குவதற்கு ஃபெராரி கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. உதிரிபாகங்கள் சப்ளை சீரடைந்தால், உற்பத்தியை துவங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

கொரோனா பிரச்னையால் ஏற்பட்டுள்ள நிலை, அடுத்த மாத மத்தியில் சீரடைந்துவிடும் என்று கருதி, இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பணியாளர்கள் நலன் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பிரச்னையால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், உற்பத்தி இழப்பை ஈடுகட்டுவதற்கான திட்டங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், காலாண்டு வருவாய் குறித்த முடிவுகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான பங்கு வழங்குவது குறித்த முடிவுகளை வரும் மே 4ந் தேதி ஃபெராரி அறிவிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள நிச்சயமற்றத் தன்மையால் பெரும் பாதிப்புகளை சந்திக்க வேண்டிய சூழலும் உருவாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








