Just In
- 3 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 3 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 3 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 4 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
காக்கா எச்சம் என்னங்க ஆசிட்டையே இந்த பெயிண்ட் தாங்கும்... எதையும் தாங்கும் ஃபோர்டு பெயிண்ட் விரைவில்
பறவையின் எச்சம் மட்டுமில்லாமல் ஆசிட் போன்ற அமிலங்களின் தாக்குதலில்கூட நிலைத்து நிற்கும் திறனுடைய பெயிண்டை ஃபோர்டு நிறுவனம் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
கார் மற்றும் பைக் போன்ற வாகனங்களை வைத்திருக்கும் பெரும்பாலானோர் இடத்தில் பாதுகாப்பான வாகன நிறுத்த வசதி இருப்பதில்லை. இதனால் அவர்கள் பல்வேறு இன்னல்களைச் சந்திக்க நேரிடுகின்றது. அதிலும், மிக முக்கியமாக தூசி படிதல், தேவையற்ற சேதங்களைச் சந்தித்தல் மற்றும் மிக முக்கியமாக பறவை எச்சங்களால் மாசுறுதல் உள்ளிட்ட பிரச்னைகளைச் சந்திக்க நேரிடுகின்றது.
இவற்றில் இருந்து தீர்வு காண வேண்டுமானால் வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் பார்க் செய்தல் அல்லது உரிய கவரைக் கொண்டு வாகனத்தை மூடுதல் உள்ளிட்டவற்றை செய்தால் மட்டுமே முடியும். ஆனால், இது அனைத்து நேரங்களிலும் பொருந்தாது. ஏனென்றால், நாம் செல்லும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பான பார்க்கிங் வசதி இருக்கும் என எதிர்பார்க்க முடியாது.
இதேபோன்று, அனைத்து இடங்களுக்கும் வாகன கவரை கையில் எடுத்துக் கொண்டுபோய் அதை கவர் செய்ய முடியாது. இவ்வாறு பல சிக்கல்கள் இருக்கின்றன. எனவே, பலரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக பறவை எச்சங்கள் இருக்கின்றது.
ஆனால், இந்த நிலைக்கு மிக விரைவில் தீர்வு காண முடியும் என தெரிகின்றது. ஆம், பிரபல வாகன உற்பத்த நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்டு, காலத்தால் அழிக்க முடியாத பெயிண்டை உருவாக்கும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது. இந்த முயற்சியைத் தொடர்ந்து பல்வேறு ஆய்வு அது மேற்கொண்டு வருகின்றது.
இந்த பெயிண்டிங் தொழில்நுட்பம் பறவைகளின் எச்சத்தில் இருந்து மட்டுமின்றி அனைத்து வகையிலான இயற்கை உபாதைகளில் இருந்தும் வாகனத்தைக் காக்க உதவும் என ஃபோர்டு தெரிவித்துள்ளது. இதற்கான தீவிர ஆராய்ச்சிலேயே அது தற்போது களமிறங்கியிருக்கின்றது.
குறிப்பாக வெயில், மழை மற்றும் கடும் குளிர் ஆகியவற்றில் துளியளவும் சேதத்தை சந்திக்காமல் நிலையாக நிற்கும் வகையில் அந்த பெயிண்ட் இருக்க வேண்டும் என ஃபோர்டு விரும்புகின்றது. இதை முன்னிட்டு சில பெயிண்ட் சேம்பிள்கள் சிலவற்றையும் அந்நிறுவனம் தயாரித்து தற்போது சோனை மேற்கொண்டு வருகின்றது.
குறிப்பிட்டு கூற வேண்டுமானால் இதற்காக பல கட்ட ஆய்வை அந்நிறுவனம் செய்து வருகிறது.
குறிப்பாக பெயிண்டிங் தன்மையை அறிந்துக் கொள்வதற்காக புற ஊதா கதிர், சோப்புடன் கலந்த பாஸ்போரிக் ஆசிட் மற்றும் சிந்தெடிக் கலவை உள்ளிட்டவற்றால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோன்று, சிறு பிளாஸ்டிக் குண்டு வைத்து சுடுவது மற்றும் மரத்தின் பிசின்களை கார் மீது பூசி, அதனை நன்கு உலர வைத்த பின்னர் ரிமூவ் செய்வது போன்ற சோதனைகளும் செய்யப்பட்டு வருகின்றது.
இதில், பெயிண்ட் சிரு கீறலையும் சந்திக்கக்கூடாது என்பதே ஃபோர்டு முக்குிய நோக்கமாக உள்ளது.
இதைத்தொடர்ந்தே, பறவையின் எச்சம் வைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக, பறவை எச்சமானது பெயிண்டை மங்கச் செய்தல் மற்றும் ஸ்கிராட்சுகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் தன்மைக் கொண்டதாக இருக்கின்றது.
எனவேதான் இந்த ஆய்வில் மிக முக்கியமான ஒன்றாக பறவைகளின் எச்சம் வைத்து சோதனைச் செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனைகளின் மூலம் தயாரிக்கப்படும் காலத்தால் அழிக்க முடியாத பெயிண்டை ஃபோர்டு நிறுவனம், அதன் எதிர்கால தயாரிப்புகளில் பயன்படுத்த இருக்கின்றது.
அந்த பெயிண்ட் எந்தவொரு சூழ்நிலையிலும் சேதத்தையோ அல்லது பொலிவு இழப்பையோ சந்திக்காது என என கூறப்படுகின்றது. இந்த ஆய்வுகுறித்து விளக்கும் வகையில் கார்ட்டூன் வீடியோ ஒன்றையும் ஃபோர்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த பெயிண்ட் எப்போது பயன்பாட்டிற்கும் என்பதுகுறித்த தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இது தற்போது வரை ஆராய்ச்சியிலேயே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த மாதிரியான பிரச்னைகளைச் சமாளிக்க பல்வேறு லோஷன்கள் விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!