Just In
- 1 hr ago 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- 2 hrs ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 3 hrs ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- 3 hrs ago அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
Don't Miss!
- News அதிமுக வேண்டாம்? பாமக முடிவுக்கு என்ன காரணம்? மொத்த டேட்டா இதோ!
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Movies நாயகன் படத்தில் இருந்து சிவாஜியை தூக்கினாரா கமல்ஹாசன்?.. பல வருட ரகசியத்தை வெளிப்படுத்திய பிரபலம்!
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
இவையனைத்தும் ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டாராக வளம் வந்தவை -காலத்தால் மழுங்கடிக்கப்பட்ட செவ்ரோலே கார்கள்
காலத்தால் மழுங்கடிக்கப்பட்ட செவ்ரோலே நிறுவனத்தின் பிரபல கார்களின் பட்டியலை இந்த பதிவில் காணலாம்.
உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதன் இந்திய வர்த்தகத்திற்கு முடிவுகட்டும் விதமாக உற்பத்தி மற்றும் விற்பனை என அனைத்தும் ஒட்டுமொத்தமாக நிறுத்திவிட்டு, நாட்டை விட்டே வெளியேறியது. இதற்கு போதிய வரவேற்பு கிடைக்காமையே முழு காரணம் என்று கூறப்படுகின்றது.
முன்னதாக இந்நிறுவனம் வெவ்வேறு பிராண்டுகளின் வாயிலாக அதன் பங்களிப்பை இந்தியாவில் கொடுத்து வந்தது. அவ்வாறு அது அறிமுகம் செய்த பிராண்டுகளிலேயே அதிக பிரபலமானது ஓப்பல் ஆகும். இந்த பிராண்டின்கீழ் அறிமுகம் செய்யப்பட்ட பல மாடல்கள் இந்தியர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால், அவை தற்போது ஒரு சில காரணங்களால் இந்தியாவில் இருந்ததற்கான அறிகுறிகூட இல்லாமல் மறைந்துவிட்டன.
இதேபோன்று, அந்நிறுவனம் செவ்ரோலடர் பிராண்டின்கீழும் பல கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்து விற்பனைச் செய்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. தற்போது, இந்த பிராண்டில் தயாரிக்கப்பட்ட ஒரு சில வாகனங்கள் சாலையில் சுற்றித் திரிவதை நம்மால் காண முடிகின்றது.
ஆனால், ஒரு காலத்தில் இந்த பிராண்டில் அதிக விற்பனையான கார்களும் தற்போது இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகியிருக்கின்றன. அந்தவகையில், காலத்தால் மழுங்கடிக்கப்பட்ட கார்களின் பட்டியலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.
ஓப்பல் அஸ்ட்ரா (Opel Astra)
ஓப்பல் பிராண்டின்கீழ் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் முதன்முதலில் களமிறக்கிய கார்தான் இந்த அஸ்ட்ரா. இது சி2 செக்மண்டில் தயாரிக்கப்பட்ட கார் ஆகும். இந்த கார் 1992ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில், விலையுயர்ந்த கார்களில் காணப்படும் அதிநவீன மற்றும் சொகுசு வசதிகள் இடம்பெற்றிருந்தன. இதன்காரணத்தினாலயே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிதில் அமோகமான வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து, இந்த காரின் தோற்றம் ஜெர்மன் நாடுகளில் காணப்படும் விலையுயர்ந்த கார்களுக்கு இணையாக இருந்தமையால், இந்தியர்களைக் கூடுதலாக கவர்ந்து இழுத்தது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு எஞ்ஜின் தேர்விலும் கிடைத்தது. இது இந்தியர்களுக்கு கிடைத்த வரப்பிரசதமாக இருந்தது. மேலும் சன்ரூஃப் ஆப்ஷனும் இதில் வழங்கப்பட்டது. இந்த அம்சம் இப்போது சர்வசாதரணமானதாக இருந்தாலும், அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அம்சமாக பார்க்கப்பட்டது.
ஓப்பல் கோர்ஷா (Opel Corsa)
இந்த காரை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் ஆஸ்த்ரா மாடலுக்கு கீழாக நிலை நிறுத்தியது. அதேசமயம், இந்த காரை ஓப்பல் பிராண்டில் அந்நிறுவனம் கடைசியாக இந்தியாவில் களமிறக்கியது. இதற்கு அடுத்தபடியாக எந்தவொரு மாடலையும் அது அறிமுகம் செய்யவில்லை. தொடர்ந்து, ஓப்பல் பிராண்டையும் சந்தையை விட்டு வெளியேற்றியது.
இந்த ஓப்பல் கோர்ஷா கார் மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ்டீம் மற்றும் ஃபோர்டு ஐகோன் கார்களுக்கு போட்டியாக இந்தியாவில் களமிறக்கப்பட்டது. ஆனால், அதிக தரமான டிரைவிங் தரத்தால் இந்த கோர்ஷா செடான் காருக்கு அப்போது நல்ல வரவேற்பு நிலவியது. இந்த கார் இருவிதமான பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு கிடைத்தது. அவை, 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின்கள் ஆகும்.
ஓப்பல் கோர்ஷா ஸ்விங் (Opel Corsa Swing)
இந்தியாவில் இயங்கிக் கொண்டிருந்த பெரும்பாலான வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்தியர்களின் மன நிலையைப் பற்றி ஆராய்ந்துக் கொண்டிருந்த வேலையில், ஏற்கனவே தயார் செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மிகவும் அசத்தலான காராக ஓப்பல் கோர்ஷா ஸ்விங் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் இந்தியாவில் 2003ம் ஆண்டு விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது.
இது செடான் ரக காராகும். இருப்பினும், அப்போதைய காலகட்டத்தில் இளைஞர்களைக் கவர்கின்ற நோக்கில் ஸ்டைலான லுக்கில் கோர்ஷா ஸ்விங் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டது. இது, அதிகபட்சமாக 92 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த திறனானது அந்த காலகட்டத்தில் அதீத திறனாக பார்க்கப்பட்டது. மேலும், இதுவே அதிவேக காராகவும் காட்சியளித்தது. இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 170 கிமீ ஆகும்.
ஓப்பல் கோர்ஷா செயில் (Opel Cora Sail)
ஓப்பல் கோர்ஷா செயில் ஓர் ஹேட்ச்பேக் காராகும். இதனை ஜெனரல் நிறுவனம் கடந்த 2003ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த கார் பிரிமியம் தரத்தை விரும்பும் இந்தியர்களுக்காக களமிறக்கப்பட்டது. அசத்தலான சொகுசு வசதி மற்றும் உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இருந்த காரணத்தால் இந்த காருக்கு ரூ. 4.39 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டது.
குறிப்பாக இந்த காரில் விபத்திற்கு பின் தானாக கதவுகளை திறக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது பலரிடம் வரவேற்பைப் பெற காரணமாக இருந்தது. இத்துடன், பவர் விண்டோ மற்றும் போல்லன் ஃபில்டர் இந்த காரில் வழங்கப்பட்டது. ஆனால், இதில் ஒரே ஒரு குறையாக பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதேசமயம், அதில் இரு தேர்வுகள் வழங்கப்பட்டன. அவை, 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் எஞ்ஜின்களாகும்.
ஓப்பல் வெக்ட்ரா (Opel Vectra)
இந்த காரை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 2002ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த கார் அதிக விலையுடைய செடான் ரக காராக இந்தியாவில் களமிறக்கப்பட்டது. இதில், 2.2 லிட்டர் எஞ்ஜினை அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. இது, அதிகபட்சமாக 146 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும். இத்துடன், ஏராளமான உயர் ரக தொழில்நுட்பங்கள் இந்த காரில் அறிமுகம் செய்யப்பட்டன.
செவ்ரோலட் ஃபோரஸ்டர் (Chevrolet Forester)
சுபரு ஃபோரஸ்டர் காரைதான் செவ்ரோலே ரீபேட்ஜ் செய்து இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த கார் 2003ம் ஆண்டு களமிறக்கப்பட்டது. இந்த காரில் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பாக்ஸர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் அந்த காலகட்டத்திலேயே ரூ. 16 லட்சத்திற்கு விற்பனைச் செய்யப்பட்டது. இதற்கு இந்த காரில் இடம்பெற்ற உச்சபட்ச தொழில்நுட்ப வசதியே முக்கிய காரணமாக இருக்கின்றது.
செவ்ரோலட் எஸ்ஆர்-வி (Chevrolet SR-V)
பெரிய மற்றும் அதிக திறன் கொண்ட காராக இந்த கார் இந்தியாவில் களமிறக்கப்பட்டது. ஆனால், இந்த கார் இந்தியாவில் நீண்ட காலம் தாக்குபிடிக்கவில்லை. இருப்பினும், ஒரு சில வாகன ஆர்வலர்கள் மத்தியில் இந்த மாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஆகையால், 2006ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் சந்தையில் நிலைத்து நின்றது. இருப்பினும், அதிக விலைக் காரணமாக எஸ்ஆர்-வி நீண்ட காலம் தாக்கு பிடிக்க முடியாமல் இந்தியாவை விட்டு வெளியேறியது. இதற்கு ரூ. 7 லட்சம் விலையாக நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.
செவ்ரோலட் ஆப்ட்ரா மேக்னம் (Chevrolet Optra Magnum)
இந்த கார் நடுத்தர அளவுடைய டீசல் செடான் ரக காராகும். இதில் அதிகபட்சமாக 125 பிஎச்பி மற்றும் 305 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் பயன்படுத்தப்பட்டது. இந்த கார் இந்தியாவில் 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்தது.
செவ்ரோலட் அவியோ (Chevrolet Aveo)
செவ்ரோலட் பிராண்டின் வெற்றி பெற்ற மாடல்களில் அவியோ காரும் ஒன்று. இந்த கார் 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினில் விற்பனைக்கு கிடைத்தது. இதில் அதிக லக்சூரி வசதிகொண்ட கேபின் அறிமுகம் செய்யப்பட்டது. ஆகையால், கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற காராக இந்தியாவில் காட்சியளித்தது. எனவே குறிப்பிட்ட காலங்கள் வரை இதன் விற்பனை வெற்றிநடைப் போட்டது.
செவ்ரோலட் ட்ரெயில் பிளேசர் (Chevrolet Trailblazer)
செவ்ரோலட் நிறுவனம் உலகளவில் எஸ்யூவி கார்களுக்கு பெயர்போன நிறுவனமாக இருக்கின்றது. ஆனால், இது இந்தியாவில் அதிகளவில் எஸ்யூவி கார்களை களமிறக்கவில்லை. இருப்பினும், ட்ரெயில்பிளேசர் போன்ற ஒரு சில எஸ்யூவிக்கள் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த காரில் சிறப்பு தொழில்நுட்ப வசதியாக ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட அம்சங்களல் வழங்கப்பட்டன. இது, இந்தியாவில் ஃபோர்டு என்டீயோவர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார்களுக்கு கடுமையான போட்டியை வழங்கியது.
மேலே நாம் பார்த்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து கார்களும் முந்தைய கால கட்டத்தில் அதிகம் விற்பனையான மற்றும் நல்ல வரவேற்பைப் பெற்ற கார்களாகும்.
ஆனால், அவை புதிய பிராண்டுகளின் வருகை மற்றும் ஒரு சில காரணங்களால் இந்தியாவை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது. இதனால், தற்போது இந்த கார்கள் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் ஆகியிருக்கின்றது.